மேலும் அறிய

Anbil Mahesh: ‘அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் - தம்பி நாங்கள்’... ஆசிரியர்கள் பற்றி அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி..!

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதனை தான் தவறாக நினைக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதனை தான் தவறாக நினைக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் (டிபிஐ) டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்,  ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 சங்கங்கள் ஒரு வாரமாக போராட்டம் நடத்தினர். இதில் 2013ஆம் ஆண்டு டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதை ரத்து செய்ய வேண்டும் என்றும்,  2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்து செய்து ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணி அளிக்க வேண்டும் என்றும் டெட் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. 

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி குடும்பத்துடன் போராட்டம் நடத்தினர்.  திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்,  ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. கிட்டதட்ட ஒரு வாரம் நடந்த இந்த போராட்ட சம்பவத்தில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. 

பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு, கோரிக்கைகளை ஆய்வு செய்ய மூவர் குழு” உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் தங்கள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரிய சங்கங்கள் அறிவித்தன. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 5 ஆம் தேதி அனைத்து ஆசிரியர்களையும் போலீசார் அதிகாலையில் அதிரடியாக கைது செய்தனர். கைது சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 

இப்படியான நிலையில் திடீரென அக்டோபர் 6 ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா பேச்சுவார்த்தை நடத்தினார்.  அனைத்து சங்கங்களும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இப்படியான நிலையில், திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருப்பதாக நினைக்கிறேன். அவரின் போராட்டத்தை தவறாக நினைக்கவில்லை. ஆசிரியர்கள் தங்கள் உடலை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்.

மேலும் ஆசிரியர்கள் - பள்ளிக் கல்வித்துறை இடையே உள்ளே புகுந்து பிரிக்கும் வேலையில் ஈடுபடுபவர்களிடம் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் - தம்பிதான் என்பது போல எங்கள் உறவு உள்ளது.  போராட்டங்கள் மூலம் பல்வேறு விமர்சனத்தை முன் வைத்தாலும் ஆசிரியர்களுக்கு தேவையானவற்றை திமுக அரசு செய்யும்” என அன்பில் மகேஸ் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், பள்ளிக்கல்வித்துறையின் 53 திட்டங்களையும் செயல்படுத்த ஆசிரியர்கள்தான் காரணம் எனவும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார். 

தலைப்பு செய்திகள்

Incentives for students : மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை.! இன்று முதல் விண்ணப்பிக்க அரசு அழைப்பு- யார் யாருக்கெல்லாம்.?
மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை.! இன்று முதல் விண்ணப்பிக்க அரசு அழைப்பு- யார் யாருக்கெல்லாம்.?
CBSE: சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தத்தில் என்னதான் குளறுபடி? மென்பொருள் நிறுவனம் விளக்கம்
CBSE: சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தத்தில் என்னதான் குளறுபடி? மென்பொருள் நிறுவனம் விளக்கம்
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: ஐயோ இதிலுமா… சிஏ இறுதித் தேர்வு தரவுகள் இணையத்தில் கசிவு? மாணவர்கள் அதிர்ச்சி!
CA Final Result: ஐயோ இதிலுமா… சிஏ இறுதித் தேர்வு தரவுகள் இணையத்தில் கசிவு? மாணவர்கள் அதிர்ச்சி!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly LIVE Today: சட்டமன்றத்தில் ரவுண்டு கட்ட தயாராகும் உதயநிதி, எடப்பாடி.? சமாளிப்பாரா சிஎம் விஜய் - நேரலை இதோ..
சட்டமன்றத்தில் ரவுண்டு கட்ட தயாராகும் உதயநிதி, எடப்பாடி.? சமாளிப்பாரா சிஎம் விஜய் - நேரலை இதோ..
Mekedatu dam : ’உணர்வுப்பூர்வமான பிரச்னை’ மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த முதல்வர் விஜய்..!
'காவிரி நீரை விட்டுத் தர முடியாது’ கர்நாடக அரசுக்கு முதல்வர் விஜய் கடும் எதிர்ப்பு..!
Premalatha's Fiery Speech : ’காவிரி நீர் விவகாரம்’ சட்டப்பேரவையில் பிரேமலதா மாஸ் பேச்சு – வியந்து பார்த்த விஜய்..!
Premalatha's Fiery Speech : ’காவிரி நீர் விவகாரம்’ சட்டப்பேரவையில் பிரேமலதா மாஸ் பேச்சு – வியந்து பார்த்த விஜய்..!
Senthil Balaji: ஜெயிலுக்கு நோ, செந்தில் பாலாஜிக்கு குவியும் ஆஃபர்கள்..! ADMK, BJP மாறி மாறி அழைப்பு - DMKவிற்கு டாடா?
ஜெயிலுக்கு நோ, செந்தில் பாலாஜிக்கு குவியும் ஆஃபர்கள்..! ADMK, BJP மாறி மாறி அழைப்பு - DMKவிற்கு டாடா?
Tamilnadu Round Up: சிம் விஜயின் தனித்தீர்மானம், ரூ.3,040 குறைந்த தங்கம் விலை, சட்டப்பேரவை நிகழ்வு - தமிழ்நாட்டில் இதுவரை
சிம் விஜயின் தனித்தீர்மானம், ரூ.3,040 குறைந்த தங்கம் விலை, சட்டப்பேரவை நிகழ்வு - தமிழ்நாட்டில் இதுவரை
EPS vs SPV: பிடிவாதத்தில் இபிஎஸ்.! முகத்தை கூட பார்க்காத எஸ்.பி.வேலுமணி டீம்- சட்டசபையில் நடந்தது என்ன.?
பிடிவாதத்தில் இபிஎஸ்.! முகத்தை கூட பார்க்காத எஸ்.பி.வேலுமணி டீம்- சட்டசபையில் நடந்தது என்ன.?
TN Govt: தமிழ்நாடு அரசின் முடிவு தவறு, கோர்ட்டில் நிற்காது..! அலட்சியமா? தனியார் நிறுவனம் ஆவேசம்
தமிழ்நாடு அரசின் முடிவு தவறு, கோர்ட்டில் நிற்காது..! அலட்சியமா? தனியார் நிறுவனம் ஆவேசம்
Gold and silver rate today : குஷியோ குஷி.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,040 சரிந்தது.! வெள்ளி விலையும் குறைந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ
குஷியோ குஷி.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,040 சரிந்தது.! வெள்ளி விலையும் குறைந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ
Embed widget