மேலும் அறிய

பாலஸ்தீன ஆதரவு நாடகம்; ஆசிரியர்கள் தடுத்ததால் கொந்தளிப்பு- அரசுப் பள்ளியில் பெரும் சர்ச்சை!

நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே சில ஆசிரியர்கள் மேடைக்கு வந்து, நாடகத்தை உடனடியாக நிறுத்துமாறு மாணவர்களிடம் உத்தரவிட்டனர்.

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கும்பளா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் நடத்திய பாலஸ்தீன ஆதரவு நாடகம் (மைம்) ஒன்று ஆசிரியர்களால் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், அங்கு நடக்கும் அநீதிகளை எடுத்துரைக்கும் வகையிலும் ஒரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்.

ஆனால், நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே சில ஆசிரியர்கள் மேடைக்கு வந்து, நாடகத்தை உடனடியாக நிறுத்துமாறு மாணவர்களிடம் உத்தரவிட்டனர். ஆசிரியர்களின் இந்த செயல், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சனாதன சக்திகளின் தலையீடு

நாடகம் தடுத்து நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, இந்திய மாணவர் சம்மேளனம் (SFI) பள்ளி முன்பாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டது. ஆசிரியர்களின் இந்த செயலை சனாதன சக்திகளின் தலையீடு என்றும், மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், இச்சம்பவத்திற்கு காரணமான ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி உடனடியாக கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் இந்த சம்பவம் குறித்து மிகுந்த கவலை தெரிவித்ததுடன், மாணவர்களின் நாடகம் மீண்டும் அரங்கேற்றப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் பற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடிப்படை உரிமையை மீறுவதா?

மாணவர்களின் கலை வெளிப்பாட்டைத் தடுப்பது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவது என சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் கல்வி நிறுவனங்களில் ஆரோக்கியமான விவாதங்களையும், சமூகப் பொறுப்புணர்வையும் வளர்ப்பதற்குத் தடையாக அமையும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த சம்பவம் கேரளாவின் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மாணவர்களின் உரிமைகளும், கருத்து சுதந்திரமும் கல்வி நிறுவனங்களில் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Trump Vs Joe Biden: “செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
“செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush
AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Trump Vs Joe Biden: “செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
“செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Honda: ஸ்கூட்டர் சந்தையை ஆளும் ஹோண்டா.. ஆக்டிவாவின் ஆதிக்கம், இளசுகளை அள்ளும் டியோ - மொத்த மாடல்கள்
Honda: ஸ்கூட்டர் சந்தையை ஆளும் ஹோண்டா.. ஆக்டிவாவின் ஆதிக்கம், இளசுகளை அள்ளும் டியோ - மொத்த மாடல்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
Embed widget