மேலும் அறிய

பாலஸ்தீன ஆதரவு நாடகம்; ஆசிரியர்கள் தடுத்ததால் கொந்தளிப்பு- அரசுப் பள்ளியில் பெரும் சர்ச்சை!

நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே சில ஆசிரியர்கள் மேடைக்கு வந்து, நாடகத்தை உடனடியாக நிறுத்துமாறு மாணவர்களிடம் உத்தரவிட்டனர்.

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கும்பளா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் நடத்திய பாலஸ்தீன ஆதரவு நாடகம் (மைம்) ஒன்று ஆசிரியர்களால் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், அங்கு நடக்கும் அநீதிகளை எடுத்துரைக்கும் வகையிலும் ஒரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்.

ஆனால், நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே சில ஆசிரியர்கள் மேடைக்கு வந்து, நாடகத்தை உடனடியாக நிறுத்துமாறு மாணவர்களிடம் உத்தரவிட்டனர். ஆசிரியர்களின் இந்த செயல், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சனாதன சக்திகளின் தலையீடு

நாடகம் தடுத்து நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, இந்திய மாணவர் சம்மேளனம் (SFI) பள்ளி முன்பாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டது. ஆசிரியர்களின் இந்த செயலை சனாதன சக்திகளின் தலையீடு என்றும், மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், இச்சம்பவத்திற்கு காரணமான ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி உடனடியாக கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் இந்த சம்பவம் குறித்து மிகுந்த கவலை தெரிவித்ததுடன், மாணவர்களின் நாடகம் மீண்டும் அரங்கேற்றப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் பற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடிப்படை உரிமையை மீறுவதா?

மாணவர்களின் கலை வெளிப்பாட்டைத் தடுப்பது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவது என சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் கல்வி நிறுவனங்களில் ஆரோக்கியமான விவாதங்களையும், சமூகப் பொறுப்புணர்வையும் வளர்ப்பதற்குத் தடையாக அமையும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த சம்பவம் கேரளாவின் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மாணவர்களின் உரிமைகளும், கருத்து சுதந்திரமும் கல்வி நிறுவனங்களில் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
கியூட், பொதுத்தேர்வுகள்.. லட்சக்கணக்கான மாணவர் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனை- பெரும் ஆபத்து!
கியூட், பொதுத்தேர்வுகள்.. லட்சக்கணக்கான மாணவர் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனை- பெரும் ஆபத்து!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
Embed widget