மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Competency Test: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நவ.28 முதல் திறனறித் தேர்வு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழக அரசுப்‌ பள்ளிகளில் 6 முதல்‌ 9 ஆம்‌வகுப்பு மாணவர்களுக்கு‌ நவம்பர் 28 முதல் டிசம்பர் 1 வரை கற்றல்‌ விளைவு / திறன்‌ வழி மதிப்பீட்டுத்‌ தேர்வு நடத்தப்பட உள்ளது.

தமிழக அரசுப்‌ பள்ளிகளில் 6 முதல்‌ 9 ஆம்‌வகுப்பு மாணவர்களுக்கு‌ நவம்பர் 28 முதல் டிசம்பர் 1 வரை கற்றல்‌ விளைவு / திறன்‌ வழி மதிப்பீட்டுத்‌ தேர்வு நடத்தப்பட உள்ளது. நவ.28, 29, 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் முறையே 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு நடைபெறுகிறது.

அரசுப்‌ பள்ளிகளிலும்‌ கற்றல்‌ விளைவு / திறன்‌ வழி மதிப்பீட்டுத்‌ தேர்வுகளை (சார்‌ Outcome / Competency Based 18509) நடத்துதல்‌ தொடர்பாக பின்வரும்‌ வழிகாட்டுதல்கள்‌ வழங்கப்பட்டுள்ளன.

  1. தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ 28.1.2023 முதல்‌ 01.12.2023 வரை படிப்படியாக 6 முதல்‌ 9 ஆம்‌வகுப்பு மாணவர்களுக்கான கற்றல்‌ விளைவு / திறன்‌ வழி மதிப்பீட்டுத்‌ தேர்வு (Learning Outcome / Competency Based Test) நடத்தப்பட உள்ளது.
  2. இந்த மதிப்பீட்டுத்‌ தேர்வுகளுக்கான வினாத்தாள்கள்‌ அனைத்தும்‌ மாநில மதிப்பீட்டுப்‌ புலம்‌ வழியாக https://exam.tnschools.gov.in என்னும்‌ இணையதளத்தில்‌ முன்கூட்டியே பதிவேற்றம்‌ செய்யப்படும்‌.
  3. தேர்வு நடைபெறும்‌ நாளுக்கு ஒரு நாள்‌ முன்பாக பிற்பகல்‌ 2 மணி முதல்‌ அடுத்த 23 மணி நேரத்துக்குள்‌ அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ வினாத்தாள்களைப்‌ பதிவிறக்கம்‌ செய்திருக்க வேண்டும்‌.
  4. வினாத்தாள்களைப்‌ பதிவிறக்கும்போது ஏற்படும்‌ சிக்கல்களுக்குத்‌ தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத்‌ தொலைபேசிச்‌ சேவையைப்‌ பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்‌.
  5. தேர்வு தொடங்கும்‌ நாளுக்கு முன்னதாகவே, பள்ளிக் கல்வித்துறையின்‌ சார்பில்‌ அனைத்து அரசுப்‌ பள்ளிகளுக்கும்‌ வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப்‌ பயன்படுத்தி மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை வகுப்பாசிரியர்கள்‌ அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்‌.

40 நிமிடங்களுக்குத் தேர்வு

  1. ஒவ்வொரு கற்றல்‌ விளைவு / திறன்‌ வழி மதிப்பீட்டுத்‌ தேர்வும்‌ 40 மணித்துளிகளில்‌ நிறைவு செய்யத்தக்க வகையில்‌ 25 கொள்குறி வகை வினாக்களைக்‌ கொண்டிருக்கும்‌. ஒவ்வொரு வினாவும்‌ ஒரு மதிப்பெண்ணைக்‌ கொண்டிருக்கும்‌. ஒவ்வொரு மாணவருக்கும்‌ தனித்தனியே அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி அதற்கான விடைகளை அத்தாள்களிலேயே மாணவர்களைக்‌ குறிப்பிடச்‌ செய்ய வேண்டும்‌. இத்தேர்வை வகுப்பாசிரியர்‌ அவரது பாடவேளையில்‌ தவறாமல்‌ நடத்த வேண்டும்‌.
  1. இத்தேர்வுக்கான வினாக்கள்‌ அந்தந்த வகுப்புகளுக்கான தமிழ்‌, ஆங்கிலம்‌, கணிதம்‌, அறிவியல்‌, சமூக அறிவியல்‌ ஆகிய பாடங்களுக்காக அந்நாள்வரை வகுப்பறையில்‌ கற்பிக்கப்பட்ட கற்றல்‌ விளைவுகளின்‌ அடிப்படையில்‌ அமைந்திருக்கும்‌.

தாங்களாகவே விடை எழுத வேண்டும்

  1. எவ்விதக்‌ குறுக்கீடும்‌ இன்றி மாணவர்கள்‌ தாங்களாகவே விடைத் தெரிவுகளை மேற்கொள்வதைத் தலைமை ஆசிரியர்களும்‌ வகுப்பாசிரியர்களும்‌ உறுதி செய்ய வேண்டும்‌
  2. மாணவர்கள்‌ விடையளித்த வினாத்தாள்களை மீண்டும்‌ பெற்று மதிப்பெண்ணிட்டு வகுப்பாசிரியர்கள்‌ பராமரிக்க வேண்டும்‌.
  3. தேர்வுக்குப்‌ பின்‌ வரும்‌ கற்பித்தல்‌ நாட்களில்‌, இவ்வினாத்தாள்களில்‌ இடம்பெற்றிருக்கும்‌ வினாக்கள்‌, வினா அமைப்பு, தேர்வுகளில்‌ இவ்வகை வினாவை எதிர்கொள்ளும்‌ முறை குறித்து தாங்கள்‌ கற்பிக்கும் பாடத்தினூடாக அனைத்து ஆசிரியர்களும்‌ தங்கள்‌ வகுப்பறையில் மாணவர்களுடன்‌ தொடர்ச்சியாகக்‌ கலந்துரையாட வேண்டும்‌.
  4. ஒவ்வொரு மாதமும்‌ ஒரு முறை என 6 முதல்‌ 9 வகுப்பு வரை அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ கற்றல்‌ விளைவு / திறன்‌ வழி மதிப்பீட்டுத்‌ தேர்வுகள்‌ (Learning Outcome / Competency Based Test) நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ உறுதி செய்ய வேண்டும்‌ என்று ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநிலத்‌ திட்ட இயக்குநரும் மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன இயக்குநரும்‌ தெரிவித்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget