மேலும் அறிய

Independence Day 2024: தொடக்கக்கல்வி சேர்க்கை முதல் சந்திரயான் 3 வரை; கல்வித் துறையில் இந்தியா சாதித்தது என்ன?

சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில் பெண் கல்வி என்பதே, பெரும்பாலும் இல்லாத நிலைதான் சமூகத்தில் நிலவியது.

இந்தியத் திருநாடு 1947ஆம் ஆண்டு அந்நியர்களிடம் இருந்து அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை கல்வித் துறையில் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த 77 ஆண்டுகளில், தொடக்க, உயர்,  ஆராய்ச்சிக் கல்வியில் என்ன நடந்திருக்கிறது என்று பார்க்கலாம்.

பாலின சமத்துவம் மற்றும் மொத்த சேர்க்கை விகிதம்

சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில் பெண் கல்வி என்பதே, பெரும்பாலும் இல்லாத நிலைதான் நிலவியது. சிறுவர்களே கல்வி கற்கச் செல்லாத சூழலில், சிறுமிகளைப் பள்ளிக்கு அனுப்புவது பெற்றோர்களுக்கே கடினமான ஒன்றாகத்தான் இருந்தது. நாட்கள் செல்லச்செல்ல காட்சிகளும் மாறின. தற்போதைய புள்ளி விவரத்தின்படி, பள்ளிக் கல்வியில் மாணவர்களைவிட மாணவிகள்தான் அதிகம்பேர் இருக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளிவிவரத்தின்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில், ஒவ்வொரு மாணவனுக்கும் 1.02 என்ற அளவில் மாணவிகள் இருக்கின்றனர். 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில், ஒவ்வொரு மாணவனுக்கும் 1.01 என்ற அளவில் மாணவிகள் இருக்கின்றனர்.

எழுத்தறிவு வீதம்

சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளில், அதாவது 1951-ல் 18.3 சதவீதமாக இருந்த எழுத்தறிவு, 2018ஆம் ஆண்டில் 74.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்களின் எழுத்தறிவு வீதம் பிரமிக்கத்தக்க வகையில் உயர்ந்துள்ளது. அப்போது 8.9 ஆக இருந்த எழுத்தறிவு வீதம், 65.8 ஆக அதிகரித்துள்ளது.



Independence Day 2024: தொடக்கக்கல்வி சேர்க்கை முதல் சந்திரயான் 3 வரை; கல்வித் துறையில் இந்தியா சாதித்தது என்ன?

பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுதந்திரத்துக்குப் பிறகான ஒவ்வோர் அரசுகளும் பள்ளிக் கல்வி, உயர் கல்வியில் அதிகம் கவனத்தைச் செலுத்தின. அந்த காலகட்டத்தில் 1.4 லட்சம் பள்ளிகள் இருந்த நிலையில்,2020- 21ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல 1950-51ஆம் ஆண்டில் 578 ஆக இருந்த கல்லூரிகளின் எண்ணிக்கை 42 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதேபோல, 27 ஆக இருந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 1040-க்கும் மேல் உயர்ந்துள்ளது.

பன்மடங்கு உயர்ந்த மருத்துவக் கல்லூரிகள்

மருத்துவக் கல்வியின் தேவையும் தரமும் சுதந்திரத்துக்குப் பிறகு 75 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. 1951-ல் 28 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகள், 650-க்கும் மேல் அதிகரித்துள்ளன.

உறுதிசெய்யப்பட்ட ஆரம்பக் கல்வி

தொடக்கக் கல்வி அனைவருக்கும் கட்டாயம் கிடைக்கப்படுவதை சர்வ சிக்‌ஷ அபியான், ஆர்டிஇ எனப்படும் அனைவருக்கும் கல்வி சட்டம் ஆகிய திட்டங்கள் உறுதி செய்தன. 14 வயது வரை அனைவருக்கும் கட்டாயமாக, இலவசக் கல்வி கிடைக்க இவை வழிசெய்கின்றன.

உயர் கல்வி விரிவாக்கம்

உதவித்தொகைகள், உறுதியான செயல் கொள்கைகள் ஆகியவற்றின் மூலம் உயர் கல்வி பரவலாக விரிந்துள்ளது. நாடு முழுவதும் உயர் கல்வி சேர்க்கை விகிதம் 50 சதவீதத்தை எட்ட உள்ளது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை கணிசமாக அதிகரித்துள்ளன.


Independence Day 2024: தொடக்கக்கல்வி சேர்க்கை முதல் சந்திரயான் 3 வரை; கல்வித் துறையில் இந்தியா சாதித்தது என்ன?

அறிவியல், தொழில்நுட்பங்கள் ஊக்குவிப்பு

தேசத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த கல்வி முறைகள் இந்தியாவில் ஊக்குவிக்கப்பட்டன. அன்றைய பிரதமர் நேருவின் வழிகாட்டலில் ஹோமி பாபா, விக்ரம் சாராபாய் ஆகியோர் இஸ்ரோவுக்கான விதையைப் போட்டனர். அது படிப்படியாக வளர்ந்து மங்கள்யான், சந்திரயான் 3 என விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.

நாடு முழுவதும் தலைசிறந்த கட்டமைப்பு வசதிகளோடு ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்சிக்கள் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சிப் பணிகள் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன.

புதிய கல்விக் கொள்கை அறிமுகம்

தொடர்ந்து 2020ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. பள்ளிகளில் தாய்மொழி வழிக் கல்வி, 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டது பரபரப்பைக் கிளப்பியது. மொழியியல் பன்முகத் தன்மையை மேம்படுத்துதல், கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் மொழியியல் சிறுபான்மையினருக்கு கல்வி வாய்ப்புகளை உறுதி செய்தல் ஆகியவற்றையும் தேசிய கல்விக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.


Independence Day 2024: தொடக்கக்கல்வி சேர்க்கை முதல் சந்திரயான் 3 வரை; கல்வித் துறையில் இந்தியா சாதித்தது என்ன?

சவால்கள் என்ன?

மேலே குறிப்பிட்ட அனைத்து சாதனைகளும் உடனடியாக, ஒரே சீராக நடந்துவிடவில்லை. உடன் வேறு பல சவால்களும் உடன் இருந்தன. கல்வி நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் போதாமை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, தரப் பிரச்சினைகள், பாலின பேதம், பிராந்திய சமத்துவம் இல்லாமை என பல பிரச்சினைகளும் சவால்களும் சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் நிலவின. சொல்லப்போனால் இந்த பிரச்சினைகளில் பெரும்பாலானவை இன்னும் இருக்கின்றன.

பாடத்திட்டம் முன்னேற்றம், ஆசிரியர் பயிற்சி, டிஜிட்டல் எழுத்தறிவு, தொழிற்கல்வி உள்ளிட்ட விவகாரங்களில் இன்னுமே சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.

மாணவர்கள் மத்தியில் சமூக ஊடகங்கள், திரை ஆளுமைகள், பிரபலங்களின் தாக்கம் பெரும்பாலும் எதிர்மறையாகவே வெளிப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையிலான முரண் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தையும் அரசு கவனிக்க வேண்டியது கட்டாயமாகி உள்ளது.

எனினும் இந்திய அரசு, வளர்ந்த நாடு என்னும் நிலையை எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
"போதைப்பாதை அழிவுப்பாதை; கல்விப்பாதையே உயர்வுப்பாதை" - நீடூர் இப்தார் விழாவில் மயிலாடுதுறை SP அட்வைஸ்..!
சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு கணக்காளர் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு கணக்காளர் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
மருத்துவக் கனவு நனவாகும்; மாணவர்களுக்கு நற்செய்தி! 20 ஆயிரம் மருத்துவ இடங்கள்; 43 மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல்  
மருத்துவக் கனவு நனவாகும்; மாணவர்களுக்கு நற்செய்தி! 20 ஆயிரம் மருத்துவ இடங்கள்; 43 மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல்  
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Tomato And Onion Price : போட்டி போட்டு குறையும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ வெறும் இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
போட்டி போட்டு குறையும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ வெறும் இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Embed widget