மேலும் அறிய

Independence Day 2024: தொடக்கக்கல்வி சேர்க்கை முதல் சந்திரயான் 3 வரை; கல்வித் துறையில் இந்தியா சாதித்தது என்ன?

சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில் பெண் கல்வி என்பதே, பெரும்பாலும் இல்லாத நிலைதான் சமூகத்தில் நிலவியது.

இந்தியத் திருநாடு 1947ஆம் ஆண்டு அந்நியர்களிடம் இருந்து அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை கல்வித் துறையில் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த 77 ஆண்டுகளில், தொடக்க, உயர்,  ஆராய்ச்சிக் கல்வியில் என்ன நடந்திருக்கிறது என்று பார்க்கலாம்.

பாலின சமத்துவம் மற்றும் மொத்த சேர்க்கை விகிதம்

சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில் பெண் கல்வி என்பதே, பெரும்பாலும் இல்லாத நிலைதான் நிலவியது. சிறுவர்களே கல்வி கற்கச் செல்லாத சூழலில், சிறுமிகளைப் பள்ளிக்கு அனுப்புவது பெற்றோர்களுக்கே கடினமான ஒன்றாகத்தான் இருந்தது. நாட்கள் செல்லச்செல்ல காட்சிகளும் மாறின. தற்போதைய புள்ளி விவரத்தின்படி, பள்ளிக் கல்வியில் மாணவர்களைவிட மாணவிகள்தான் அதிகம்பேர் இருக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளிவிவரத்தின்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில், ஒவ்வொரு மாணவனுக்கும் 1.02 என்ற அளவில் மாணவிகள் இருக்கின்றனர். 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில், ஒவ்வொரு மாணவனுக்கும் 1.01 என்ற அளவில் மாணவிகள் இருக்கின்றனர்.

எழுத்தறிவு வீதம்

சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளில், அதாவது 1951-ல் 18.3 சதவீதமாக இருந்த எழுத்தறிவு, 2018ஆம் ஆண்டில் 74.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்களின் எழுத்தறிவு வீதம் பிரமிக்கத்தக்க வகையில் உயர்ந்துள்ளது. அப்போது 8.9 ஆக இருந்த எழுத்தறிவு வீதம், 65.8 ஆக அதிகரித்துள்ளது.



Independence Day 2024: தொடக்கக்கல்வி சேர்க்கை முதல் சந்திரயான் 3 வரை; கல்வித் துறையில் இந்தியா சாதித்தது என்ன?

பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுதந்திரத்துக்குப் பிறகான ஒவ்வோர் அரசுகளும் பள்ளிக் கல்வி, உயர் கல்வியில் அதிகம் கவனத்தைச் செலுத்தின. அந்த காலகட்டத்தில் 1.4 லட்சம் பள்ளிகள் இருந்த நிலையில்,2020- 21ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல 1950-51ஆம் ஆண்டில் 578 ஆக இருந்த கல்லூரிகளின் எண்ணிக்கை 42 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதேபோல, 27 ஆக இருந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 1040-க்கும் மேல் உயர்ந்துள்ளது.

பன்மடங்கு உயர்ந்த மருத்துவக் கல்லூரிகள்

மருத்துவக் கல்வியின் தேவையும் தரமும் சுதந்திரத்துக்குப் பிறகு 75 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. 1951-ல் 28 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகள், 650-க்கும் மேல் அதிகரித்துள்ளன.

உறுதிசெய்யப்பட்ட ஆரம்பக் கல்வி

தொடக்கக் கல்வி அனைவருக்கும் கட்டாயம் கிடைக்கப்படுவதை சர்வ சிக்‌ஷ அபியான், ஆர்டிஇ எனப்படும் அனைவருக்கும் கல்வி சட்டம் ஆகிய திட்டங்கள் உறுதி செய்தன. 14 வயது வரை அனைவருக்கும் கட்டாயமாக, இலவசக் கல்வி கிடைக்க இவை வழிசெய்கின்றன.

உயர் கல்வி விரிவாக்கம்

உதவித்தொகைகள், உறுதியான செயல் கொள்கைகள் ஆகியவற்றின் மூலம் உயர் கல்வி பரவலாக விரிந்துள்ளது. நாடு முழுவதும் உயர் கல்வி சேர்க்கை விகிதம் 50 சதவீதத்தை எட்ட உள்ளது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை கணிசமாக அதிகரித்துள்ளன.


Independence Day 2024: தொடக்கக்கல்வி சேர்க்கை முதல் சந்திரயான் 3 வரை; கல்வித் துறையில் இந்தியா சாதித்தது என்ன?

அறிவியல், தொழில்நுட்பங்கள் ஊக்குவிப்பு

தேசத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த கல்வி முறைகள் இந்தியாவில் ஊக்குவிக்கப்பட்டன. அன்றைய பிரதமர் நேருவின் வழிகாட்டலில் ஹோமி பாபா, விக்ரம் சாராபாய் ஆகியோர் இஸ்ரோவுக்கான விதையைப் போட்டனர். அது படிப்படியாக வளர்ந்து மங்கள்யான், சந்திரயான் 3 என விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.

நாடு முழுவதும் தலைசிறந்த கட்டமைப்பு வசதிகளோடு ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்சிக்கள் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சிப் பணிகள் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன.

புதிய கல்விக் கொள்கை அறிமுகம்

தொடர்ந்து 2020ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. பள்ளிகளில் தாய்மொழி வழிக் கல்வி, 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டது பரபரப்பைக் கிளப்பியது. மொழியியல் பன்முகத் தன்மையை மேம்படுத்துதல், கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் மொழியியல் சிறுபான்மையினருக்கு கல்வி வாய்ப்புகளை உறுதி செய்தல் ஆகியவற்றையும் தேசிய கல்விக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.


Independence Day 2024: தொடக்கக்கல்வி சேர்க்கை முதல் சந்திரயான் 3 வரை; கல்வித் துறையில் இந்தியா சாதித்தது என்ன?

சவால்கள் என்ன?

மேலே குறிப்பிட்ட அனைத்து சாதனைகளும் உடனடியாக, ஒரே சீராக நடந்துவிடவில்லை. உடன் வேறு பல சவால்களும் உடன் இருந்தன. கல்வி நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் போதாமை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, தரப் பிரச்சினைகள், பாலின பேதம், பிராந்திய சமத்துவம் இல்லாமை என பல பிரச்சினைகளும் சவால்களும் சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் நிலவின. சொல்லப்போனால் இந்த பிரச்சினைகளில் பெரும்பாலானவை இன்னும் இருக்கின்றன.

பாடத்திட்டம் முன்னேற்றம், ஆசிரியர் பயிற்சி, டிஜிட்டல் எழுத்தறிவு, தொழிற்கல்வி உள்ளிட்ட விவகாரங்களில் இன்னுமே சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.

மாணவர்கள் மத்தியில் சமூக ஊடகங்கள், திரை ஆளுமைகள், பிரபலங்களின் தாக்கம் பெரும்பாலும் எதிர்மறையாகவே வெளிப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையிலான முரண் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தையும் அரசு கவனிக்க வேண்டியது கட்டாயமாகி உள்ளது.

எனினும் இந்திய அரசு, வளர்ந்த நாடு என்னும் நிலையை எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget