மேலும் அறிய

Group 4 Exam Result: டிஎன்பிஎஸ்சியின் படுதோல்வி; குரூப் 4 தேர்வு முடிவை உடனடியாக வெளியிடுக - ராமதாஸ்

குரூப் 4 தேர்வை நடத்தி 7 மாதங்கள் ஆகவுள்ள நிலையில், தேர்வு முடிவை உடனடியாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

குரூப் 4 தேர்வை நடத்தி 7 மாதங்கள் ஆகவுள்ள நிலையில், தேர்வு முடிவை உடனடியாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசுத் துறைகளில் உள்ள நான்காம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் நடத்தி முடிக்கப்பட்டு 7 மாதங்கள் ஆக உள்ள நிலையில், அத்தேர்வுகளுக்கான முடிவுகள் இன்றுவரை வெளியிடப்படவில்லை. பிப்ரவரி மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு வராததும்,  அறிகுறிகள் கூட தென்படாததும் தேர்வு எழுதிய மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு 7,301 பேரை தேர்வு செய்வதற்கான நான்காம் தொகுதி தேர்வு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை 24-ஆம் தேதி நடத்தப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டிருந்த அறிவிக்கையின்படி, ஜூலை மாதம் நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வுக்கான முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அதே மாதத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டு, நவம்பர் மாதத்தில் அவை சரிபார்க்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவை எதுவுமே நடக்கவில்லை.

எப்போது முடிவுகள்?

அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட வேண்டிய முடிவுகள் நவம்பர் மாதத்தில் வெளியாகும்; டிசம்பர் மாதத்தில் வெளியாகும்; ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்று செய்திகள்தான் வெளியாகினவே தவிர, முடிவுகள் வெளியாகவில்லை. ஜனவரி மாத இறுதியில்தான், நியமனம் செய்யப்பட வேண்டிய நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கை 9801 ஆக உயர்த்தப்படுவதாகவும், பிப்ரவரியில்  முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்தது. ஆனால், அதற்கான நகர்வுகள் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. எப்போது முடிவுகள் வெளியாகும் என்பது யாருக்கும் தெரியவில்லை.

தேர்வாணையத்தின் படுதோல்வி 

முதல்நிலைத் தேர்வுகள், முதன்மைத் தேர்வுகள், நேர்காணல்கள் என 3 முக்கியக் கட்டங்களைக் கொண்ட குடிமைப் பணிகளுக்கான அனைத்து நடைமுறைகளும் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட ஓராண்டில் நிறைவடைகின்றன. ஆனால், ஒரே தேர்வை கொண்ட நான்காம் தொகுதி பணிகளுக்கு  தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு ஓராண்டு நிறைவடையவிருக்கும் நிலையில், இன்னும் போட்டித் தேர்வு முடிவுகள் கூட வெளியிடப்படாதது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் படுதோல்வி ஆகும்.

2014-ஆம் ஆண்டுக்கு பிந்தைய பத்தாண்டுகளில் இதுவரை 6 முறை நான்காம் தொகுதி தேர்வுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியிருக்கிறது. அவற்றில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வு தவிர மீதமுள்ள 5 தேர்வுகளில் 3 தேர்வுகளின் முடிவுகள் 5 மாதங்களுக்குள்ளாகவும், 2 தேர்வுகளின் முடிவுகள் 3 மாதங்களுக்குள்ளாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனால், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட  தேர்வுகளின் முடிவுகள் தான் 7 மாதங்களாகியும் வெளியிடப்படவில்லை. மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான விஷயத்தில் தேர்வாணையம் இவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

வேலையில்லாமல் ஒன்றரை கோடி பேர்

தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வைத்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 31.01.2023 நிலவரப்படி 67 லட்சத்து 58,698 ஆகும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யாதவர்களையும் கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை ஒன்றரை கோடியைத் தாண்டும். அதனால் தான் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியை அடிப்படையாகக் கொண்ட நான்காம் தொகுதி பணிகளுக்கான தேர்வுகளை எழுத 22 லட்சத்திற்கும் கூடுதலானவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 18.50 லட்சத்திற்கும் எழுதினார்கள். இவ்வளவு இளைஞர்களின் எதிர்காலம்  அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கைகளில் இருக்கும் நிலையில், அதற்கேற்ற பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவறிவிட்டது.

அரசுப்பணி என்பதுதான் தமிழ்நாட்டில் இன்று லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது. ஒரு போட்டித் தேர்வை எழுதிய மாணவர்கள், அதன் முடிவை அறிந்தால்தான் அடுத்தப் போட்டித் தேர்வுக்கு முழு மனதுடன் தயாராக முடியும். இத்தகைய சூழலில் ஒரு தேர்வை அறிவித்து, நடத்தி, முடிவுகளை அறிவிப்பதற்கு ஓராண்டை பணியாளர் தேர்வாணையம் எடுத்துக் கொள்வது மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். அவர்களின் உணர்வுகளை தேர்வாணையம் மதிக்க வேண்டும்.

நான்காம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் ஓர் அடுக்கு கொண்ட போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி பணி நியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து நடைமுறைகளும் 5 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும். ஈரடுக்கு தேர்வு கொண்ட முதல் மற்றும் இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி நியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து நடைமுறைகளும் 9 மாதங்களில்  முடிக்கப்படுவதை அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
Melma SIPCOT : மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
V S Babu Health : கொளத்தூர் MLA வி.எஸ் பாபுவிற்கு என்ன ஆச்சு.? உடல்நிலை திடீர் பின்னடைவு? வெளியான ஷாக் தகவல்
கொளத்தூர் MLA வி.எஸ் பாபுவிற்கு என்ன ஆச்சு.? உடல்நிலை திடீர் பின்னடைவு? வெளியான ஷாக் தகவல்
Ration Card Special Camp : ஒரே மணி நேரத்தில் ரேஷன் கார்டில் திருத்தம் செய்யலாம்.! இன்று சூப்பர் சான்ஸ் – வெளியான முக்கிய அறிவிப்பு
ஒரே மணி நேரத்தில் ரேஷன் கார்டில் திருத்தம் செய்யலாம்.! இன்று சூப்பர் சான்ஸ் – வெளியான முக்கிய அறிவிப்பு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
Melma SIPCOT : மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
V S Babu Health : கொளத்தூர் MLA வி.எஸ் பாபுவிற்கு என்ன ஆச்சு.? உடல்நிலை திடீர் பின்னடைவு? வெளியான ஷாக் தகவல்
கொளத்தூர் MLA வி.எஸ் பாபுவிற்கு என்ன ஆச்சு.? உடல்நிலை திடீர் பின்னடைவு? வெளியான ஷாக் தகவல்
Ration Card Special Camp : ஒரே மணி நேரத்தில் ரேஷன் கார்டில் திருத்தம் செய்யலாம்.! இன்று சூப்பர் சான்ஸ் – வெளியான முக்கிய அறிவிப்பு
ஒரே மணி நேரத்தில் ரேஷன் கார்டில் திருத்தம் செய்யலாம்.! இன்று சூப்பர் சான்ஸ் – வெளியான முக்கிய அறிவிப்பு
பதவிக்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்யாக கொட்டும் வன்னி அரசு.! லிஸ்ட் போட்டு வெளுத்து வாங்கிய கோவி.செழியன்
பதவிக்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்யாக கொட்டும் வன்னி அரசு.! லிஸ்ட் போட்டு வெளுத்து வாங்கிய கோவி.செழியன்
Rasi Palan Today (19.09.2026): புரட்டாசி முதல் சனிக்கிழமை.. 5 ராசிகளுக்கு கவனம் தேவை.. இன்றைய பலன்கள் இதோ!
Rasi Palan Today (19.09.2026): புரட்டாசி முதல் சனிக்கிழமை.. 5 ராசிகளுக்கு கவனம் தேவை.. இன்றைய பலன்கள் இதோ!
Anbil Mahesh Enquiry: 246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
Embed widget