மேலும் அறிய

EPFO Exam | செப்.5-ல் நடக்கிறது இபிஎஃப்ஓ செயலாக்க அதிகாரி தேர்வு! 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் செயலாக்க அதிகாரி பணிக்கான தேர்வு வரும் செப்டம்பர் 5ஆம் தேதியன்று நடைபெறும் என ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம்- யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

அன்றைய தினம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த, தேசிய பாதுகாப்பு அகடமி, கடற்படை அகடமி ஆகியவற்றுக்கான தேர்வு நவம்பர் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. 

வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தேர்வானது முன்னதாக கடந்த மே 9ஆம் தேதி அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தேர்வு, வருங்கால வைப்பு நிதி அமைப்பு செயலாக்க அதிகாரி- கணக்கு அலுவலர் பணிக்காக நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளும் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. கொரோனா இரண்டாவது அலையின் பரவல் காரணமாக, வருங்கால வைப்பு நிதித் திட்ட அலுவலர் தேர்வும் தள்ளிவைக்கப்படுவதாக தேர்வாணையம் கடந்த ஏப்ரலில் அறிவித்தது. இதே காரணத்தால் நாடளவில் அனைத்துவிதமான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன அல்லது ரத்து செய்யப்பட்டன. 
இப்போது, செப்டம்பரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தேர்வுக்கு, பழைய நுழைவுச் சீட்டையே பயன்படுத்தலாமா அல்லது புதிதாக நுழைவுச்சீட்டு வழங்கப்படுமா என்பது பற்றி எந்தத் தகவலும் இடம்பெறவில்லை.  

 


EPFO Exam | செப்.5-ல் நடக்கிறது இபிஎஃப்ஓ செயலாக்க அதிகாரி தேர்வு! 

இந்தத் தேர்வு இரண்டு மணி நேரம் நடைபெறும். எல்லா கேள்விகளுக்கும்  மதிப்பெண்கள் அளிக்கப்படும். கேள்விகளின் தன்மை கொள்குறி வகையாக அதாவது நான்கு பதில்களைக் கொடுத்து அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி இருக்கும். கேள்வித் தாளானது ஆங்கிலம் அல்லது இந்தி இரண்டு மொழிகளிலும் இருக்கும். 
எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடையும் போட்டியாளர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வுக்கு 75 சதவீதமும் நேர்காணலுக்கு 25 சதவீதமும் மதிப்பெண்கள் வழங்கப்படும்.  
இந்தத் தேர்வின் மூலம் 421 வருங்கால வைப்பு நிதித் திட்ட அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும். 
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தத் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த அக்டோபர் 4ஆம் தேதியன்று இந்தத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதே நாளில் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்துவது என தேர்வாணையம் தீர்மானித்தது.

முன்னதாக, கொரோனா காரணமாக பள்ளி மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வுகளும் 10, 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மாநிலங்களில் தொடங்கிய ரத்து அறிவிப்பு நாடு முழுவதும் மத்திய கல்வி வாரியப் பள்ளிகளுக்கும் சேர்ந்ததாக மாறியது. பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் கூடி, மத்திய கல்வி வாரிய +2 பொதுத்தேர்வுகளை ரத்துசெய்வது என முடிவெடுத்தனர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கான மதிப்பெண் தீர்மானிக்கும் முறை பற்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அதில் மத்திய அரசுத் தரப்பில் பதில் தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டது. அந்தப் பணியில் மத்திய கல்வி வாரியம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

"அரசாங்கமாவது, விதியாவது!" - தனியார் பள்ளி முதல்வர் ஆவேச பேச்சு; சீர்காழியில் வெளிச்சத்திற்கு வந்த RTE கட்டணக் கொள்ளை!
சிவகங்கை: பிரதமர் தேசிய தொழிற்பழகுநர் முகாம் – ஜூன் 10 அன்று தொழிற்பழகுநர் பயிற்சி மேளா !
சிவகங்கை: பிரதமர் தேசிய தொழிற்பழகுநர் முகாம் – ஜூன் 10 அன்று தொழிற்பழகுநர் பயிற்சி மேளா !
JEE Advanced: ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வரலாற்று சாதனை:  10 ஆயிரம்+ மாணவிகள் தேர்ச்சி!
JEE Advanced: ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வரலாற்று சாதனை:  10 ஆயிரம்+ மாணவிகள் தேர்ச்சி!
கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்: விரிவான கால அட்டவணை வெளியீடு
கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்: விரிவான கால அட்டவணை வெளியீடு

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Putin Backs India: “இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
“இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
Embed widget