மேலும் அறிய

'கணினி அறிவியல், ஏஐ வேண்டாம்'- பொறியியல் தரவரிசையில் டாப்  மாணவர்கள் கொடுத்த ஷாக்!

எவர்க்ரீன் படிப்பான கணினி அறிவியல் (Computer Science), ட்ரெண்டிங் படிப்புகளான ஏஐ (Artificial Intelligence), இயந்திரக் கற்றல், தரவு அறிவியலை டாப் ரேங்க் மாணவர்கள் விரும்பவில்லை.

தமிழ்நாட்டு பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியான நிலையில், முதல் 2 இடங்களைப் பிடித்த மாணவர்கள், தங்களுக்குப் பிடித்த பாடப்பிரிவு குறித்துப் பேசியுள்ளனர். அவர்கள் யாருமே எவர்க்ரீன் மற்றும் ட்ரெண்டிங் படிப்புகளான கணினி அறிவியல், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளைத் தேர்வு செய்யவில்லை.

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவ ராவ் நேற்று முன்தினம் (ஜூலை 10) வெளியிட்டார். இதில், செங்கல்பட்டு மாணவி தோஷிதா லட்சுமி 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். திருநெல்வேலி மாவட்ட மாணவி நிலஞ்சனா இரண்டாவது இடத்தையும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் 3ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

அஸ்விதா என்னும் அரியலூர் மாணவி 4ஆம் இடத்தையும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த சஃபீக் ரஹ்மான் என்னும் மாணவர் 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவருமே 200-க்கு 200 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளனர். அதேபோல அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சேலத்தைச் சேர்ந்த ரவணி என்னும் மாணவி, 199.5 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்று இருந்தார்.

இசிஇ படிக்க விரும்பும் டாப் ரேங்க் மாணவி

இந்த நிலையில் முதலிடம் பிடித்த தோஷிதா என்னும் மாணவி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இசிஇ எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (ECE) படிக்க விரும்புகிறார். இளநிலை பொறியியலை முடித்த பிறகு, சிப் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட விஎல்எஸ்ஐ (VLSI) படிப்பை முதுகலை படிக்க ஆசை என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல 2ஆவது இடம் பிடித்த மாணவி நிலஞ்சனா, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் பொறியியல் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். முடித்துவிட்டு வளாக நேர்காணலில் வேலைக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்ற மாணவி ரவணி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இசிஇ படிப்பைத் தேர்வு செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார். விஞ்ஞானி ஆகி, நாட்டுக்கு சேவை செய்ய விருப்பம் எனவும் ரவணி தெரிவித்துள்ளார்.

எப்போதுமே வரவேற்பைப் பெறும் எவர்க்ரீன் படிப்புகளாகக் கருதப்படும் கணினி அறிவியல் (Computer Science) பொறியியல், ட்ரெண்டிங் படிப்புகளான  செயற்கை நுண்ணறிவு (ஏஐ- Artificial Intelligence), இயந்திரக் கற்றல் (Machine Learning), தரவு அறிவியல் (Data Science) படிப்புகள் ஆகியவற்றை தரவரிசைப் பட்டியலில் முதன்மை இடத்தைப் பிடித்த மாணவர்கள் விரும்பவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொறியியல் கலந்தாய்வு எப்போது?

பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10 அன்று வெளியான நிலையில், சேவை மையங்கள் வாயிலாக குறைகளை நிவர்த்தி செய்ய ஜூலை 18ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூலை 22ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது.  செப்டம்பர் 11ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

வெயில் இருந்தும் நிழல் இல்லை! புதுச்சேரியில் நடந்த வானியல் அதிசயத்தை நேரில் பார்த்த மாணவர்கள்!
வெயில் இருந்தும் நிழல் இல்லை! புதுச்சேரியில் நடந்த வானியல் அதிசயத்தை நேரில் பார்த்த மாணவர்கள்!
Holiday : மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஆகஸ்ட் 25, 26 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Holiday : மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஆகஸ்ட் 25, 26 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை: ஏஐசிடிஇயின் ஸ்வநாத் திட்டம்
ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை: ஏஐசிடிஇயின் ஸ்வநாத் திட்டம்
நீட், நெட் சர்ச்சைகள்: கடுமையாகும் தேர்வு முறை- என்டிஏ நிபுணர்கள் குழு மறுசீரமைப்பு!
நீட், நெட் சர்ச்சைகள்: கடுமையாகும் தேர்வு முறை- என்டிஏ நிபுணர்கள் குழு மறுசீரமைப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC: இன்னும் முடியல, அடுத்த அதிரடி ரெடி..! டாஸ்மாக்கை கைகழுவ CM விஜய் முடிவு? அசெம்ப்ளியில் அறிவிப்பு?
இன்னும் முடியல, அடுத்த அதிரடி ரெடி..! டாஸ்மாக்கை கைகழுவ CM விஜய் முடிவு? அசெம்ப்ளியில் அறிவிப்பு?
Udhayanidhi Stalin: சூடு சொரணை இருக்கும்ன்னு நினைச்சேன்.. முதல்வர் விஜய் பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. குவியும் கண்டனம்!
Udhayanidhi Stalin: சூடு சொரணை இருக்கும்ன்னு நினைச்சேன்.. முதல்வர் விஜய் பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. குவியும் கண்டனம்!
Udhaynidhi Stalin: கொளத்தூர் தோல்விக்கு என்ன காரணம் சொல்ல? ஸ்டாலின் போட்ட பிச்சை - உதயநிதி பேச்சு
கொளத்தூர் தோல்விக்கு என்ன காரணம் சொல்ல? ஸ்டாலின் போட்ட பிச்சை - உதயநிதி பேச்சு
TN Weather News: இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை
இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை
Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
Embed widget