மேலும் அறிய

MoE Guidelines: மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம், தற்கொலைகள்... தடுப்பது எப்படி? - மத்திய அரசு வழிகாட்டல்!

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.

தற்கொலை உள்ளிட்ட தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள்ளும் செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு உதவி, ஆதரவு வழங்கும் வகையில், மத்தியக் கல்வி அமைச்சகம் வழிகாட்டு வரைவறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பள்ளிகளில், பள்ளி நலக் குழு உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. குறிப்பாக நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரங்களிலும் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் காலங்களிலும் மாணவர்கள் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். அதேபோல நீட், ஜேஇஇ ஆகிய மருத்துவ, பொறியியல் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் பயிற்சி மையங்களில் சேர்ந்து தயாராகும் மாணவர்கள், கோட்டாவில் படிக்கும்போது மன அழுத்தத்துக்கு ஆளாகி, உயிரை விடுகின்றனர். 

இந்த நிலையில், மாணவர்களின் தற்கொலை உள்ளிட்ட தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள்ளும் செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு உதவி வழங்கும் வகையில், மத்தியக் கல்வி அமைச்சகம் உம்மீத் என்ற பெயரில் (UMMEED - Understand, Motivate, Manage, Empathize, Empower, and Develop) வழிகாட்டு வரைவறிக்கையை வெளியிட்டுள்ளது.

பள்ளி நலக் குழு

அதாவது மாணவர்களுக்கு புரியவைத்தல், உற்சாகப்படுத்துதல், சமாளித்தல், அதிகாரமளித்தல், வளர்ச்சிக்கு உதவுதல் ஆகிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வரைவில் பள்ளிகளில், பள்ளி நலக் குழு (School Wellness Team - SWT) உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

’’பள்ளிகளில் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் தலைமையில் பள்ளி நலக் குழு உருவாக்கப்பட வேண்டும். இதில், அபாயகரமான அறிகுறிகளோடு இருக்கும் மாணவர்கள் அல்லது தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள்ளும் அபாயம் உள்ள மாணவர்களுக்கு போதிய ஆதரவு வழங்கப்பட வேண்டும். 

ஒவ்வொரு குழந்தையும் முக்கியமானவர்கள்தான் (Every Child Matters). அதனால் பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் சமுதாயம் ஆகியவற்றின் இடையே வலிமையான கூட்டுறவை உருவாக்க வேண்டும். இதன்மூலம் தற்கொலைகளைத் தடுப்பதற்கும், தற்கொலை சிந்தனையுடன் தொடர்புடைய தவறான புரிதல்களைக் குறைப்பதற்குமான சமூக ஆதரவை உருவாக்க முடியும்.


MoE Guidelines: மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம், தற்கொலைகள்... தடுப்பது எப்படி? - மத்திய அரசு வழிகாட்டல்!

வகுப்பறைகளில் என்ன செய்யலாம்?

அதேபோல காலியாக உள்ள வகுப்பறைகளைப் பூட்டி வைக்கலாம். இருட்டாக உள்ள வளாகப் பகுதிகளை ஒளிரச் செய்யலாம். தோட்டப் பகுதிகளை பசுமையாகப் பராமரித்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். 

ஆசிரியர்களின் பங்கு

பிற மாணவர்களுடன் ஒருவரை ஒப்பிட்டுப் பேசுவது, தோல்வியை நிரந்தரமாகப் பார்ப்பது, படிப்புத் திறனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வெற்றியை அளவிடுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். 

மன நலம் மற்றும் தற்கொலை தடுப்பு சார்ந்த விழிப்புணர்வை பள்ளிகளில் நடத்தப்படும் செயல்பாடுகள் மற்றும் போட்டிகளின் மூலம் உறுதிசெய்ய வேண்டும். இதில், பள்ளி நலக் குழு முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். எனினும் தற்கொலைகளைத் தடுப்பதில், பள்ளி நலக்குழு மட்டும் தனித்து முயற்சிகளைச் செய்ய முடியாது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகத்தினர் என அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவும் இதற்கு அவசியம். 

அதேபோல பள்ளியின் உள்ள வளங்களைப் பொறுத்து, பள்ளி நலக் குழு மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதைச் செய்யவேண்டும். இதன்மூலம் அனைத்துத் தரப்பினரும் பள்ளி நலக் குழுவில் இடம்பெறுவதை உறுதி ட்ர்ய்ய வேண்டும். குழுவின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டியதும் முக்கியம்’’. 

இவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வரைவில் கூறப்பட்டுள்ளன. 

மத்தியக் கல்வி அமைச்சக வரைவை முழுமையாகக் காண: https://dsel.education.gov.in/sites/default/files/infocus/Draft_UMMEED_Guielines.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget