மேலும் அறிய

உயர் கல்வி கனவு நனவாகும்! தேனியில் நாளை கல்வி கடன் முகாம்: மாணவர்களே தவறவிடாதீர்கள்!

மாணவர்கள் எளிதான கடனை பெற முடியும். இந்த சிறப்பு கல்வி கடன் முகாமை பொறுத்தவரை கல்வியாண்டின் தொடக்கத்தில் தான் நடத்தப்படுகிறது.

ஏழை, எளிய மக்கள் எளிதாக உயர் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக வங்கிகளில் கல்வி கடன் வழங்கப்படுகிறது. கல்வி கடனை பொறுத்தவரை படித்து முடித்த பின்னர் வட்டி, அசலை கட்டும் வகையில் இருக்கும். இந்த கடனை பலருக்கும் எப்படி பெறுவது என்று தெரியாது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கல்வி கடன் முகாமினை தமிழக அரசு நாளை நடத்துகிறது. மாணவர்கள் பங்கேற்க தேனி  மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.


உயர் கல்வி கனவு நனவாகும்! தேனியில் நாளை கல்வி கடன் முகாம்: மாணவர்களே தவறவிடாதீர்கள்!

ஏழை எளிய மக்கள் உயர்கல்விக்குத் தேவையான கல்விக் கடன்களை உடனடியாகப் பெற்றுத் தருவதற்காக,தமிழக அரசு சிறப்பு கல்வி கடன் முகாம்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நாள் அமைக்கிறது. அந்த முகாமில் குறிப்பிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவர்கள் நேரடியாக சென்று பயன் பெறலாம். வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிப்பதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் சிக்கல்களைத் தவிர்த்து, ஒரே இடத்தில் அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்து வழங்குவதால், மாணவர்கள் எளிதான கடனை பெற முடியும். இந்த சிறப்பு கல்வி கடன் முகாமை பொறுத்தவரை கல்வியாண்டின் தொடக்கத்தில் தான் நடத்தப்படுகிறது.


உயர் கல்வி கனவு நனவாகும்! தேனியில் நாளை கல்வி கடன் முகாம்: மாணவர்களே தவறவிடாதீர்கள்!

இதில் தமிழ்நாட்டில் உள்ள மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட அனைத்துப் பட்டப்படிப்பு மாணவர்கள் பங்கேற்று கல்வி கடன் பெற முடியும். கல்விக் கடன் கிடைக்காமல் அவதிப்படும் மாணவ , மாணவிகள் முகாமில் சென்றால் உடனே கல்வி கடன் பெற முடியும். மேலும் எந்த வங்கியில், எவ்வளவு கடன் பெறலாம்.. என்னென்ன வசதிகள் உள்ளன. கல்வி கடன் சம்பந்தமான சந்தேகங்களை அரசு அந்த முகாமில் நிவர்த்தி செய்கிறது. இது பல மாவட்டங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் தேனி கொடுவிலார் பட்டியில் உள்ள கம்மவார் சங்க தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் வரும் செப்டம்பர் 17ம் தேதி (நாளை ) நடைபெறும் என  ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் அறிவித்துள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கல்வி கடன் முகாம் கொடுவிலார் பட்டியில் உள்ள கம்மவார் சங்க தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.


உயர் கல்வி கனவு நனவாகும்! தேனியில் நாளை கல்வி கடன் முகாம்: மாணவர்களே தவறவிடாதீர்கள்!

இந்த முகாமில் என்ஜினீரியங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பயிற்சி கல்லூரி, சட்டக் கல்லூரி போன்ற அனைத்து வகையான கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தங்களின் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், முகவரிக்கான சான்று, சாதி சான்று, முதல் பட்டதாரி சான்று, ஆதார் அட்டை பெற்றோரின் பான் கார்டு, வருமான சான்று, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்கலாம். வெளியூர்களில் தங்கி பயிலும் தேனி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகளும் இம்முகாமில் பங்கேற்கலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!

வீடியோ

RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
Erode power cut: திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
Embed widget