மேலும் அறிய

Career Guidelines: கல்லூரி மாணவர்களே..இனி வெற்றி உங்கள் வசம்- இலக்கை அடைய முழுமையான கரியர் வழிகாட்டி!

கொண்டாட்டங்களும் விளையாட்டுகளும் இந்த காலகட்டத்தில் நிறைந்திருக்கும். அவற்றை அனுபவிப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் வாழ்க்கையின் அடுத்தகட்டம் குறித்துத் திட்டமிடுவது.  

மாணவர்கள் கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளி வாழ்க்கையில் இருந்து கனவுகள் கொண்ட கல்லூரி வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள். கொண்டாட்டங்களும் விளையாட்டுகளும் இந்த காலகட்டத்தில் நிறைந்திருக்கும். அவற்றை அனுபவிப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் வாழ்க்கையின் அடுத்தகட்டம் குறித்துத் திட்டமிடுவது.  

பள்ளியில் இருந்து கல்லூரி சென்று சேரும்போதே, கல்லூரி எப்படிப்பட்டது, கட்டமைப்பு வசதி, ஆசிரியர்களின் தரம்,  வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல அம்சங்களையும் கணக்கில் வைத்துதான் கல்லூரியைத் தேர்வு செய்திருப்பீர்கள். அதற்குப் பிறகு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். 

அங்கிருந்து வெற்றிகரமான கரியருக்கு என்னவெல்லாம் முக்கியம்? என்ன செய்ய வேண்டும்? பார்க்கலாம். 

சரியான இலக்கைக் கண்டறியுங்கள்

முதலில் உங்களுக்கு என்ன பிடிக்கும், என்ன வரும் என்பதைக் கண்டறியுங்கள். உங்களின் பெற்றோர், சகோதரர், நண்பர்களிடம் இதுகுறித்துப் பேசுங்கள். ஆசிரியர்களிடமும் இதுகுறித்து மனம் விட்டுப் பேசி, தெளிவு அடையலாம். சம்பந்தப்பட்ட பணிக்கு எதிர்காலம் என்ன, வேலைவாய்ப்பு பாதுகாப்பாக இருக்குமா என்பதைக் கண்டறியுங்கள். 

சுய மதிப்பீடு

முதலில் உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம். உங்களின் ஆளுமை, பலம், பலவீனம், பேரார்வம், இலக்கு என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

* உங்களுக்கு முக்கியமானவை என்னென்ன? வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் முக்கியமானது எது?
* உங்களின் மென் திறன்கள் (soft skills) என்னென்ன? 
* எப்படி பிறரிடம் பேசுவீர்கள்? இணைந்து பணிபுரிவீர்கள், பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள்? நேரத்தை நிர்வகிப்பீர்கள்?
* உங்களின் தொழில்நுட்பத் திறன்கள் என்ன? எதில் சிறப்பம்சத்துடன் இருக்கிறீர்கள்?
* இயற்கையாகவே உங்களுக்கு இருக்கும் திறமைகள் என்ன? எதையெல்லாம் ரசித்துச் செய்கிறீர்கள்?
* உங்களுக்கு எதிலெல்லாம் ஆர்வம்? என்ன செய்தால் உற்சாகம் அடைவீர்கள்?
* எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?
* அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் எங்கே இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

மேலே கூறியவற்றுக்கு பதில் அளித்துக்கொள்வதன் மூலம், உங்களுக்கு என்ன மாதிரியான வேலையில் ஆர்வமும் திறமையும் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். 

நமக்குப் பிடித்த துறையைத் தேர்வு செய்த பிறகு, அதில் சம்பளம், வளர்ச்சி, பாதுகாப்பு, நிறுவனத்தின் பிராண்ட் உள்ளிட்ட சில அம்சங்களைக் கவனிக்க வேண்டும். 

* ஒரு வேலையைச் செய்வதில் என்னவெல்லாம் முக்கியம் என்று யோசியுங்கள். குறிப்பாக எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றீர்கள்?
* மீண்டும் எந்த அளவுக்குக் கற்று, வேலையில் முன்னோக்கிச் செல்ல ஆசைப்படுகிறீர்கள்?
* உங்களின் வேலை எந்த அளவுக்குப் பாதுகாப்பானது?
* நீங்கள் வேலை பார்க்கும் இடம்/ நிறுவனம் எந்த அளவுக்கு புகழ்பெற்ற, மதிப்புமிக்க நிறுவனம்?
* இவை எல்லாவற்றைக் காட்டிலும் நீங்கள் பார்க்கும் வேலையால், திருப்தியாக உணர்கிறீர்களா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதன் மூலம் கேரியரைத் துல்லியமாகத் திட்டமிடலாம்..

ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம்

மாணவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் செம்மைப்படுத்துவதில் ஆசிரியர்கள் முக்கியமானவர்கள். நமக்கு அறிவு, திறன், நிஜ வாழ்க்கையின் அனுபவங்களைச் சொல்லித் தருபவர்கள். அவர்களிடம் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மனம் விட்டுப் பேசலாம். ஆலோசனைகளைக் கேட்டு அறியலாம். 

உதவித்தொகை

மத்திய, மாநில அரசுகளின் உதவித் தொகைகள் மற்றும் தனியார் உதவித்தொகை எங்கெல்லாம் கிடைக்கும் என்பதைத் தேடிக் கண்டறிந்து அவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். உதவித் தொகைகளைப் பெறுவதன் மூலம் கல்விக்கு ஆகும் கட்டணம் கணிசமாகக் குறைவதோடு, தன்னம்பிக்கையும் கூடும். 

படிக்கும்போதே கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்வது முக்கியம். ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள் எதையேனும் எடுத்துக் கொள்ளலாம். 

இன்டர்ன்ஷிப்

நாம் படிக்கும் படிப்பு தொடர்பான நிறுவனங்களில், இன்டர்ன்ஷிப் எனப்படும் உள்ளகப் பயிற்சியை எடுத்துக்கொள்வது முக்கியம். இதன்மூலம் வேலைக்குச் செல்லும் முன்பே பணி அனுபவத்தைப் பெற முடியும். அந்த அனுபவத்தைக் கொண்டு வேலைக்கு முயற்சிக்கலாம். 

பொதுவாக எந்த வேலைக்கும் communication என்னும் உரையாடும் திறன் முக்கியம். சொல்வதைத் தெளிவாக, தைரியமாக எடுத்துரைப்பது, ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வது, நேர்த்தியான உடைகள் மற்றும் அணிகலன்கள் மூலம் தோற்றத்துக்கு முக்கியத்துவம் ஆகியவற்றின் மூலம் வெற்றிப் பாதையை நோக்கி விரைவாகப் பயணிக்கலாம். 

இதையும் வாசிக்கலாம்: Positive College Experience: வசந்த காலம்...வருங்காலத்துக்கான அடித்தளம்: கல்லூரி வாழ்க்கைக்குள் நுழையும் முன் தெரிந்துகொள்ளவேண்டியவை

College Students Lunch Ideas: கல்லூரி மாணவர்களே, கேன்டீனுக்கு நோ சொல்லுங்க... இனி புதுப்புது லன்ச்தான்! இதை செய்து பாருங்க!

கல்வியோடு உடல் நலமும் மன நலமும் முக்கியம்! கல்லூரி மாணவர்களுக்கு சில முக்கிய டிப்ஸ்!

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
Special Trains : சென்னைக்கு திரும்ப சூப்பர் சான்ஸ்.! மானாமதுரை, நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னைக்கு திரும்ப சூப்பர் சான்ஸ்.! மானாமதுரை, நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
Best Mileage SUV: நாங்க தான் பெஸ்ட்..! நாட்டிலேயே அதிக மைலேஜ் தரும் எஸ்யுவிக்கள் -டாப் 7 மாடல்களின் முழு விவரம்
நாங்க தான் பெஸ்ட்..! நாட்டிலேயே அதிக மைலேஜ் தரும் எஸ்யுவிக்கள் -டாப் 7 மாடல்களின் முழு விவரம்
Accident CCTV: ஒதுங்கிப் போக சொன்ன பெண் BIKER.. இடித்து தள்ளிய கார் DRIVER - பரபரப்பு டேஷ்கேம் வீடியோ
ஒதுங்கிப் போக சொன்ன பெண் BIKER.. இடித்து தள்ளிய கார் DRIVER - பரபரப்பு டேஷ்கேம் வீடியோ
Durai Vaiko: மக்கள் ஓட்டு பிச்சையா? .. அதுகூட ஸ்டாலினுக்கு கிடைக்கலையே.. திமுகவை விளாசிய துரை வைகோ!
Durai Vaiko: மக்கள் ஓட்டு பிச்சையா? .. அதுகூட ஸ்டாலினுக்கு கிடைக்கலையே.. திமுகவை விளாசிய துரை வைகோ!
Chennai Radial Road: வெள்ளத்திற்கு நோ..! ரூ.450 கோடி, 2KM பாலம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மெகா திட்டம்
வெள்ளத்திற்கு நோ..! ரூ.450 கோடி, 2KM பாலம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மெகா திட்டம்
Vanni Arasu: என் ஊருக்கே 80 வருஷமா பஸ் இல்ல.. வன்னி அரசு பிறந்த கிராமத்துக்கு முதல் முறையாக பஸ் சேவை!
Vanni Arasu: என் ஊருக்கே 80 வருஷமா பஸ் இல்ல.. வன்னி அரசு பிறந்த கிராமத்துக்கு முதல் முறையாக பஸ் சேவை!
Embed widget