மேலும் அறிய

பல்கலை.களை உருவாக்கி செலவிடுவது மாநில அரசு; பதவி மட்டும் மத்திய அரசுக்கா?- முதல்வர் கேள்வி

பள்ளி முதல்‌ உயர்கல்வி வரை ஒவ்வொரு மாணவருக்கும்‌ பார்த்துப்‌ பார்த்துத்‌ திட்டங்களை உருவாக்கிச்‌ செலவு செய்வது மாநில அரசு! ஆனால்‌, வேந்தர்‌ பதவி மட்டும்‌, ஒன்றிய அரசால்‌ நியமிக்கப்பட்டவருக்கா?

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று (21.1.2025) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்‌ லக்ஷ்மி வளர்தமிழ்‌ நூலகம்‌ மற்றும்‌ அய்யன்‌ திருவள்ளுவர்‌ திருவுருவச் சிலை ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில்‌ முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை:

’’தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களால்‌ தமிழ்நாட்டில்‌ உயர்கல்வித்‌ தரமும்‌, அடிப்படைக்‌ கட்டமைப்பு வசதிகளும்‌ மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அதனால்தான்‌, இன்று இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசுப்‌ பல்கலைக்கழகங்கள்‌ உள்ள மாநிலமாக, ஐந்நூற்றுக்கும்‌ மேற்பட்ட தரம்‌ வாய்ந்த பொறியியல்‌ கல்லூரிகள்‌ இருக்கும்‌ மாநிலமாக, அதிக அளவிலான மருத்துவக்‌ கல்லூரிகள்‌ இருக்கும்‌ மாநிலமாக, புகழ்பெற்ற 100 உயர்கல்வி நிறுவனங்களில்‌ 31 உயர்கல்வி நிறுவனங்கள்‌ இருக்கும்‌ மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு விளங்கிக்கொண்டிருக்கிறது.

உயர் கல்வியில்‌ உன்னதமான இடம்

உயர்கல்வி மாணவர்‌ சேர்க்கையில்‌ தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகமாக 49 விழுக்காடு பெற்று இந்திய அளவில்‌ தமிழ்நாடு முதலிடம்‌ பெற்றிருக்கிறது. இப்படி உயர் கல்வியில்‌ உன்னதமான இடத்தை தமிழ்நாடு பெற்று வருகிறது.

அதனால்தான்‌ பல்கலைக்கழகங்களின்‌ நிர்வாகம்‌, மாநில அரசின்‌ முழு கட்டுப்பாட்டில்‌ இருக்கவேண்டும்‌ - வேந்தர்‌ பதவியில்‌, மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்‌ இருக்க வேண்டும்‌ என்று சொல்கிறோம்‌.

பார்த்துப்‌ பார்த்துத்‌ திட்டங்களை உருவாக்கிச்‌ செலவு செய்வது

பள்ளி முதல்‌ உயர்கல்வி வரை ஒவ்வொரு மாணவருக்கும்‌ பார்த்துப்‌ பார்த்துத்‌ திட்டங்களை உருவாக்கிச்‌ செலவு செய்வது மாநில அரசு!

பேராசியர்கள்‌ உள்ளிட்ட அனைவருக்கும்‌ சம்பளம்‌ கொடுப்பது மாநில அரசு! பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான உட்‌ கட்டமைப்பு வசதிகள்‌ எற்படுத்தி தருவது மாநில அரசு!

ஆனால்‌, வேந்தர்‌ பதவி மட்டும்‌, ஒன்றிய அரசால்‌ நியமிக்கப்பட்டவருக்கா? அதுதான்‌ நம்முடைய கேள்வி. அதனால்தான்‌ சட்டப் போராட்டம்‌ உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கிறோம்‌!

சட்டப் போராட்டங்களும்‌ - அரசியல்‌ போராட்டங்களும்‌ தொடரும்‌

மாநிலத்தின்‌ கல்வி உரிமையை மீட்கும்‌ வரைக்கும்‌ இந்தச்‌ சட்டப் போராட்டங்களும்‌ - அரசியல்‌ போராட்டங்களும்‌ தொடரும்‌’’.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, துணை வேந்தர் நியமனம், கற்றல், கற்பித்தல், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அம்சங்களில் யுஜிசி வரைவறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

School Reopen: சுட்டெரிக்கும் சூரியன்; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளில் சிறப்பு நடவடிக்கைகள்- எழும் கோரிக்கை!
School Reopen: சுட்டெரிக்கும் சூரியன்; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளில் சிறப்பு நடவடிக்கைகள்- எழும் கோரிக்கை!
School Reopening: ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? புதுச்சேரி பெற்றோர் மத்தியில் நீடிக்கும் பெரும் குழப்பம்!
School Reopening: ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? புதுச்சேரி பெற்றோர் மத்தியில் நீடிக்கும் பெரும் குழப்பம்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
தகுதி இருந்தும் அங்கீகாரமில்லை: மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மீது ராமதாஸ் அதிருப்தி!
தகுதி இருந்தும் அங்கீகாரமில்லை: மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மீது ராமதாஸ் அதிருப்தி!

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
Inverter Battery Tips: கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
Embed widget