மேலும் அறிய

Free Breakfast Scheme: முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் தனியாருக்கு மாற்றப்படுகிறதா?- சென்னை மாநகராட்சி விளக்கம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தனியாருக்கு மாற்றப்படுகிறதா என்று கேள்விகள் எழுந்த நிலையில், தனியாரிடம் ஒப்பந்தம் கோரப்பட்டது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அட்சயப் பாத்திரம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு மாநகராட்சியோ, அரசோ அந்த நிறுவனத்திற்கு நேரடியாக எந்த நிதியும் வழங்கவில்லை. அதேநேரத்தில் ஆளுநர் மாளிகை மூலமாக ரூ.5 கோடி வழங்கப்பட்டது. அதேபோல வெங்காயம், பூண்டு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சேர்க்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதைத் தொடர்ந்து காலை உணவுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்தும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அவ்வாறே மாநிலம் முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவை மாநில அரசே வழங்கி வருகிறது.

சென்னை மாநகராட்சி தீர்மானம்

இதற்கிடையே சென்னை மாநகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்துக்கு முன்பாகவே, தினசரி காலை நேரத்தில் உணவு வழங்கப்பட்டு வருகின்றது. மாநகராட்சிக்குச் சொந்தமான 358 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் கடந்த 29ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தனியாருக்கு மாற்றப்படுகிறதா என்று கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்துப் பெருநகர சென்னை மாநகராட்சி கூறி உள்ளதாவது:

முன்னோடி திட்டம்

’’பெருநகர சென்னை மாநகராட்சியில்,  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் முன்னோடி திட்டமாக 37 பள்ளிகளில் மாநகராட்சியின் சார்பில் காலை உணவு தயாரித்து  தினசரி வழங்கப்பட வேண்டிய உணவுப் பட்டியலின்படி இதற்காக அமைக்கப்பட்ட உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தற்போது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் 358 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 65030 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், நிர்மாணிக்கப்பட்ட 35 சமையல் கூடங்களில் இருந்து, தினசரி உணவு வழங்கப்பட வேண்டிய அட்டவணையின்படி உயர்அலுவலர்களின் கண்காணிப்பில் காலை உணவு தரமாக தயாரித்து வழங்கும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒப்பந்தப் புள்ளி ஏதும் கோரப்படவில்லை

இந்நிலையில் இப்பணியில் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்புடன் ஒப்பந்த அடிப்படையில் காலை உணவு தரமாகத் தயாரித்து  வழங்குவதற்கான நிலை ஏற்படுமாயின் அதற்கான உத்தேச மதிப்பீடு தயாரித்து  அதற்கான ஒப்புதல் பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது. இதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. 

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும்’’.

இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: 10 ஆண்டுகளில் 89 முறை லீக்; 48 மறு தேர்வு, நீட் தேர்வு ஓர் ஏலம்- ராகுல் காந்தி கடும் கண்டனம்
Rahul Gandhi: 10 ஆண்டுகளில் 89 முறை லீக்; 48 மறு தேர்வு, நீட் தேர்வு ஓர் ஏலம்- ராகுல் காந்தி கடும் கண்டனம்
NEET Paper Leak: முதல் முறையாக நீட் தேர்வு ரத்து; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு- நடந்தது என்ன? பரபர பின்னணி!
NEET Paper Leak: முதல் முறையாக நீட் தேர்வு ரத்து; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு- நடந்தது என்ன? பரபர பின்னணி!
கல்லூரி சேரப்போறீங்களா? முன்னாள் படைவீரர் குழந்தைகளே மிஸ் பண்ணிடாதீங்க.. ஆட்சியர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
கல்லூரி சேரப்போறீங்களா? முன்னாள் படைவீரர் குழந்தைகளே மிஸ் பண்ணிடாதீங்க.. ஆட்சியர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
IIT Madras: ஐஐடி சென்னையில் பிஎஸ் பட்டப்படிப்புகள்; மே 31 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
IIT Madras: ஐஐடி சென்னையில் பிஎஸ் பட்டப்படிப்புகள்; மே 31 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”அதிமுக - திமுக இணைந்து என்னை முதலமைச்சராக்க முயற்சி” திருமாவளவன் ஓபன் டாக்
”அதிமுக - திமுக இணைந்து என்னை முதலமைச்சராக்க முயற்சி” திருமாவளவன் ஓபன் டாக்
NEET Paper Leak: முதல் முறையாக நீட் தேர்வு ரத்து; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு- நடந்தது என்ன? பரபர பின்னணி!
NEET Paper Leak: முதல் முறையாக நீட் தேர்வு ரத்து; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு- நடந்தது என்ன? பரபர பின்னணி!
EPS vs CVS : சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்கள்.! எஸ்பிவி, சிவிஎஸ்யை போட்டு பொளந்த அதிமுக
சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்கள்.! எஸ்பிவி, சிவிஎஸ்யை போட்டு பொளந்த அதிமுக
CM Vijay Speech: சட்டமன்றத்தில் CM விஜயின் முதல் உரை - குட்டிக்கதை சொல்லி அப்லாஸ் வாங்கிய முதலமைச்சர்
CM Vijay Speech: சட்டமன்றத்தில் CM விஜயின் முதல் உரை - குட்டிக்கதை சொல்லி அப்லாஸ் வாங்கிய முதலமைச்சர்
MK Stalin: ”நாங்க தான் மெஜாரிட்டி” கூடுதல் நேரம் ஒதுக்கனும் - திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
”நாங்க தான் மெஜாரிட்டி” கூடுதல் நேரம் ஒதுக்கனும் - திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
TVK cabinet : விஜய் அமைச்சரவையில் இடம்பிடிக்க போட்டி போடும் அதிமுக எம்எல்ஏக்கள்.! யார் யார் தெரியுமா.?
விஜய் அமைச்சரவையில் இடம்பிடிக்க போட்டி போடும் அதிமுக எம்எல்ஏக்கள்.! யார் யார் தெரியுமா.?
TN Assembly: ”கசப்பான விஷயம் நடந்துச்சு” பேரவையில் CM விஜய்க்கு சூசகமாக மெசேஜ் சொன்ன அமமுக MLA - வீடியோ
”கசப்பான விஷயம் நடந்துச்சு” பேரவையில் CM விஜய்க்கு சூசகமாக மெசேஜ் சொன்ன அமமுக MLA - வீடியோ
இபிஎஸ் கூட்டணிக்கு டீல் பேசியது உண்மை.. வதந்தி என சொன்ன திமுக.. போட்டுக்கொடுத்த சி.வி.சண்முகம்!
இபிஎஸ் கூட்டணிக்கு டீல் பேசியது உண்மை.. வதந்தி என சொன்ன திமுக.. போட்டுக்கொடுத்த சி.வி.சண்முகம்!
Embed widget