மேலும் அறிய

விரிவாக்கப்பட்ட காலை உணவுத்திட்டம் - தஞ்சையில் எத்தனை மாணாக்கர் பயன் பெறுகிறார்கள் தெரியுமா?

காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளுக்கு சாப்பாடு தந்து பசிப்பிணி போக்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தஞ்சாவூர்: 141 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10,870 மாணவ, மாணவிகள் முதல்வரின் விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறுகின்றனர் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்  தெரிவித்துள்ளதாவது: தமிழக முதல்வரால் கடந்த 15.09.2022 அன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலக்கூடிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மேலும் மாணவர்களுடன்  முதல்வர் உணவருந்தினார். இத்திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் 1087 பள்ளிகள் 50865 துவக்கப்பள்ளி  மாணவிகளும், நகர்புற பகுதிகளில் 62 பள்ளிகளில் 5158 துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளும் என மொத்தம் 1149 பள்ளிகளில் 56023 துவக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில் பயன் பெற்று வருகிறார்கள்.

விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டம்

தற்போது  தமிழ்நாடு முதல்வரால் கடந்த 15.07.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்ட விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 141 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10,870 மாணவ, மாணவிகள் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


விரிவாக்கப்பட்ட காலை உணவுத்திட்டம் - தஞ்சையில் எத்தனை மாணாக்கர் பயன் பெறுகிறார்கள் தெரியுமா?

திருக்கானூர்பட்டி பள்ளி தலைமை ஆசிரியை நன்றி

இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள் குறித்து திருக்கானூர்பட்டி தூயமரியன்னை அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை  குளோரியா கூறியதாவது:

எங்கள் பள்ளியில் மாணவர்கள் 69 பேர், மாணவிகள் 72 பேர் என்று மொத்தம் 141 பேர் காலை உணவு சாப்பிடுகின்றனர். இத்திட்டத்தின்படி மாணவ, மாணவிகள் பள்ளியில் காலை உணவு சாப்பிடுவது எங்களுக்கு மகிழ்ச்சியைத் அளிக்கிறது. வேலைக்கு செல்லும் பெற்றோர் காலையில் டீ, பிஸ்கட் மட்டும் கொடுத்துவிட்டு பள்ளிக்கு அழைத்து வருவார்கள்.

தற்போது காலை உணவுத் திட்டத்தால் மாணவ, மாணவிகள் அனைவரும் சாப்பிடுகிறார்கள். படிப்பில் பசியின்றி முழுகவனம் செலுத்துகிறார்கள். சிறப்பான இத்திட்டம் தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மாதாக்கோட்டை பள்ளியில் 167 மாணவர்கள் பயன்

மாதாக்கோட்டை தூயமரியன்னை அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மரியன்னாவிர்ஜூன் கூறியதாவது:

எங்கள் பள்ளியில் மாணவர்கள் 98,  மாணவிகள் 69 என மொத்தம் 167 மாணவ, மாணவிகள் காலை உணவு சாப்பிடுகிறார்கள். வேலைக்குப் போகும் பெற்றோர் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். வீட்டில் சாப்பிடாமலேயே பள்ளிக்கு வருகிற பிள்ளைகள் தற்போது காலை உணவுத் திட்டத்தால் சத்தான உணவினை சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு பாடத்தில் முழுமையான கவனம் செலுத்த இயல்கிறது. கல்விப்புரட்சியில் சிறந்த திட்டத்தை தந்த முதலமைச்சருக்கு மிகவும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் பயன்பெறும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் அபிதா, சுசீலா, ஜான்சிராணி மோசஸ் ஆகியோர் கூறுகையில், காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளுக்கு சாப்பாடு தந்து பசிப்பிணி போக்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

இவ்வாறு தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget