மேலும் அறிய

நாமக்கல்லில் +2 தேர்வுக்கு பிட்: 11 தேர்வறை கண்காணிப்பாளர்கள் இடைநீக்கம் - அரசு அதிரடி

நாமக்கல்லில் நூதன முறையில் மாணவர்கள் பிட் அடிக்க முயன்ற விவகாரத்தில் தேர்வுப் பணியில் ஈடுபட்ட 11 ஆசிரியர்களை தேர்வுப் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் மாணவர்கள் நூதன முறையில் பிட் அடிக்க முயன்ற விவகாரத்தில் தேர்வுப் பணியில் ஈடுபட்ட 11 ஆசிரியர்களை தேர்வுப் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. 

இந்த சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த 5ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தேர்வை  8,37,311 மாணவர்கள் எழுத உள்ளனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மே 28ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வை 9,55,139 பேர் எழுதுகின்றனர். மே 10-ம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்தத் தேர்வை 8,85,053 மாணவர்கள் எழுத உள்ளனர். 

இதற்கிடையே பொதுத் தேர்வுகளில் காப்பி அடித்தால், மாணவரின் தேர்வை ரத்து செய்வதோடு அடுத்த ஓராண்டுக்குத் தேர்வெழுதத் தடை விதிக்கப்படும். தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், தேர்வு ரத்து செய்யப்படுவதோடு அடுத்து தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

பொதுத்தேர்வைக் கண்காணிக்க மாவட்டம் வாரியாக, ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறையின் இயக்குநர்கள், இணை இயக்குர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


நாமக்கல்லில் +2 தேர்வுக்கு பிட்: 11 தேர்வறை கண்காணிப்பாளர்கள் இடைநீக்கம் - அரசு அதிரடி

இந்த சூழலில், நாமக்கல் மாவட்டத்தின் தேர்வு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்.குமார் நாமக்கல் முழுவதும் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

அதேபோல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆய்வுக்குச் சென்றார். அப்போது குறிப்பிட்ட ஜெராக்ஸ் கடையில் மாணவர்கள் 11-ம் வகுப்பு தேர்விற்கு முன்னதாக பாடப்புத்தகத்தை மைக்ரோ ஜெராக்ஸ் ஆகப் பிரதியிட்டு எடுத்துச்செல்வதைப் பார்த்தார். இதையடுத்து செங்கரை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியின் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளருக்கு அறிவுரை கூறி மாணவர்களிடம் இருந்த பிட் பேப்பர்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தார்.

இதற்கிடையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற கணிதம், விலங்கியல் பாடத் தேர்வு அன்று பொன்.குமார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார். அப்போது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களை அவர் ஆய்வு செய்தார். அப்போதும் தேர்வு தொடங்குவதற்கு முன்னரே, மாணவர்களிடம் இருந்த பிட் காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து மாணவர்கள் தேர்வில் முறைகேடாக காப்பி அடிக்க உதவியாகச் செயல்பட்டதாக தேர்வறை கண்காணிப்பாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தேர்வறை கண்காணிப்பாளர்கள் பொறுப்பில் இருந்து 11 ஆசிரியர்களை இடைநீக்கம் செய்யுமாறு தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில், 11 ஆசிரியர்கள் தேர்வறைக் கண்காணிப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 

தலைப்பு செய்திகள்

NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
TET தேர்வு எழுத போறீங்களா? இந்த 4 பொருட்கள் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க பாத்துக்குங்க..!
TET தேர்வு எழுத போறீங்களா? இந்த 4 பொருட்கள் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க பாத்துக்குங்க..!
ஆசிரியர் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு: மயிலாடுதுறையில் அரசு பள்ளியில் 38 ஆசிரியர் பணியிடங்கள் - ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
ஆசிரியர் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு: மயிலாடுதுறையில் அரசு பள்ளியில் 38 ஆசிரியர் பணியிடங்கள் - ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரி பி.எஸ்சி. நர்சிங் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு - உடனே செக் பண்ணுங்க!
புதுச்சேரி பி.எஸ்சி. நர்சிங் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு - உடனே செக் பண்ணுங்க!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
TN Weather Update: இடி, மின்னலுடன் கனமழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் கனமழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Vs TVK Govt.: “கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
“கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
ஒரே சார்ஜில் 158 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் TVS Orbiter V2 - எவ்ளோ?
ஒரே சார்ஜில் 158 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் TVS Orbiter V2 - எவ்ளோ?
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
Embed widget