மேலும் அறிய

மன உளைச்சலில் ஆசிரியர்கள்: கல்வித்துறைக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்

கல்வியின்‌ முக்கியத்துவத்தை உணர்ந்து, போராடும்‌ ஆசிரியர்களின்‌ கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை ஓ.பன்னீர்செல்வம்‌ வலியுறுத்தி உள்ளார். 

கல்வியின்‌ முக்கியத்துவத்தை உணர்ந்து, போராடும்‌ ஆசிரியர்களின்‌ கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை ஓ.பன்னீர்செல்வம்‌ வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை                                                                                              ‌

''இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு சம ஊதியம்‌” அளிக்கப்படும்‌ என்றும்‌, பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றுவோரை பணி நிரந்தரம்‌ செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்றும்‌ தி.மு.க. தனது தேர்தல்‌ வாக்குறுதியில்‌ தெரிவித்திருந்தது. ஆனால்‌, தி.மு.க. ஆட்சிப்‌ பொறுப்பேற்று இன்று கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள்‌ கடந்துள்ள நிலையிலும்‌ இந்த வாக்குறுதிகள்‌ நிறைவேற்றப்படவில்லை.

இரட்டை நிலைப்பாடு

“சம வேலைக்கு சம ஊதியம்‌” என்ற இடைநிலை ஆசிரியர்களின்‌ கோரிக்கையினைப்‌ பொறுத்தவரையில்‌, இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இடைநிலை ஆசிரியர்கள்‌ உண்ணாவிரதப்‌ போராட்டம்‌ மேற்கொண்டனர்‌. இந்தப்‌ பிரச்சனைக்கு மூல காரணமே தி.மு.க. ஆட்சியில்‌ ஏற்பட்டதுதான்‌. 2009 ஆம்‌ ஆண்டு அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய விகிதம்‌ மாற்றியமைக்கப்பட்டபோது, 1-6-2009-க்கு முன்பு பணியில்‌ சேர்ந்தவர்களுக்கு ஓர்‌ ஊதிய விகிதத்தையும்‌, 1-6-2009 மற்றும்‌ அதற்குப்‌ பிறகு பணியில்‌ சேர்ந்தவர்களுக்கு ஓர்‌ ஊதிய விகிதத்தையும்‌ அப்போதிருந்த தி.மு.க. அரசு நிர்ணயம்‌ செய்தது. தி.மு.க. ஆட்சியில்‌ எடுக்கப்பட்ட இந்த இரட்டை நிலைப்பாடுதான்‌ தற்போதைய ஊதிய வித்தியாசத்திற்குக்‌ காரணம்‌.

இந்த ஆண்டு துவக்கத்தில்‌ இடைநிலை ஆசிரியர்கள்‌ போராட்டத்தில்‌ ஈடுபட்டபோது, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டினை களையும்‌ வகையில்‌, உண்ணாவிரதப்‌ போராட்டத்தில்‌ ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன்‌ உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய முரண்பாட்டை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான்‌ வலியுறுத்தி இருந்தேன்‌. இதனையடுத்து, அரசு சார்பில்‌ நிதித்‌ துறைச்‌ செயலாளர்‌ (செலவினம்‌) தலைமையில்‌ ஒரு குழு அமைக்கப்பட்டதை அடுத்து, இடைநிலை ஆசிரியர்களின்‌ போராட்டம்‌ முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 

காலவரையற்ற உண்ணாவிரதம்

இந்தக்‌ குழு அமைக்கப்பட்டு 9 மாதங்கள்‌ கடந்த நிலையில்‌, அவர்களுடைய கோரிக்கை இன்னமும்‌ நிறைவேற்றப்படவில்லை. தங்களுடைய கோரிக்கைகள்‌ நிறைவேற்றப்படாதோ என்ற அச்சத்தில்‌ அவர்கள்‌, கடந்த 27ஆம்‌ தேதி முதல்‌ காலவரையற்ற உண்ணாவிரதப்‌ போராட்டத்தில்‌ மீண்டும்‌ ஈடுபட்டுள்ளனர்‌. இவர்களோடு பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரியும்‌ சிறப்பாசிரியர்களும்‌ தங்களுடைய கோரிக்கையினை வலியுறுத்தி போராட்டத்தில்‌ ஈடுபட்டுள்ளனர்‌.

மாணவ, மாணவியருக்கு கல்வி நன்கு கற்றுத்தரப்பட வேண்டுமென்றால்‌ ஆசிரியர்களின்‌ மனநிலை நன்றாக இருக்க வேண்டும்‌. ஆனால்‌, கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில்‌ இடைநிலை ஆசிரியர்கள்‌, சிறப்பாசிரியர்கள்‌ என அனைவரும்‌ மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்‌. 

கல்வியினை பாதிக்கும்

95 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக சொல்லிக்‌ கொள்ளும் தி.மு.க. அரசு, ஆசிரியர்களின்‌ முக்கியமான கோரிக்கைகளை கிடப்பில்‌ போட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கும்‌ செயல்‌. இது மாணவ, மாணவியரின்‌ கல்வியினை பாதிக்க வழிவகுக்கும்‌.

முதலமைச்சர்‌ இதில்‌ உடனடியாகத்‌ தலையிட்டு, மேலும்‌ காலம் தாழ்த்தாமல்‌, இடைநிலை ஆசிரியர்களின்‌ ஊதிய உயர்வு முரண்பாட்டினை உடனடியாக களையவும்‌, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம்‌ செய்யவும்‌ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்''‌.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
மிஸ் பண்ணிடாதீங்க! இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
Embed widget