மேலும் அறிய

காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!

தங்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக உமா ராஜேஷிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இப்படியான நிலையில் ஜனவரி 5ம் தேதி காவலர் பயிற்சி பள்ளிக்கு கட்டணம் செலுத்த உமா வந்ததை ராஜேஷ் அறிந்துக் கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் சமரசம் பேச அழைத்துச் சென்று காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. பால் வியாபாரம் செய்து வரும் இவரின் மகளான உமா தென்காசி மாவட்டம் பாறைப்பட்டியில் செயல்படும் தனியார் காவலர் பயிற்சி பள்ளியில் பயின்று வந்துள்ளார். அதே இடத்தில் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில் உள்ள கொளக்கட்டான்குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற நபரும் பயின்றுள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனினும் ராஜேஷ், உமா இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. 

இப்படியான நிலையில் சமீப காலமாக தங்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக உமா ராஜேஷிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இப்படியான நிலையில் ஜனவரி 5ம் தேதி காவலர் பயிற்சி பள்ளிக்கு கட்டணம் செலுத்த உமா வந்ததை ராஜேஷ் அறிந்துக் கொண்டார். அப்போது முதலில் செல்போனில் அவரை தொடர்பு கொண்டு சமாதானம் பேச முயன்றுள்ளார். ஆனால் உமா சரியாக பேசாததால் ஒருமுறை உன்னிடம் நேரில் பேச வேண்டும் என சமாதானம் செய்ய ராஜேஷ் அழைத்திருக்கிறார். 

சரி என உமா ஒப்புக்கொண்ட நிலையில் இருவரும் கஸ்தூரி ரங்கபுரம் அருகே இருக்கும் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது ராஜேஷ் தன் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொன்ன நிலையில் மீண்டும் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், உமாவை தாக்கியதோடு மட்டுமல்லாமல் கழுத்தை நெறித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் உமா மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பயந்துபோன ராஜேஷ் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து உமா மயங்கி கிடக்கும் விபரத்தை கூறியுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் உமா உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து ராஜேஷ் வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்து உண்மையை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இந்த கொலை சம்பவம் குறித்து இரண்டு தரப்பு வீட்டாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஏதேனும் பதற்றமான சூழல் இருக்கக்கூடாது என கருதி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ராஜேஷூக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும் என உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது. 

இதற்கிடையில் காவல்துறையில் ராஜேஷ் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அதில் நானும் உமாவும் மிக தீவிரமாக காதலித்தோம். ஆனால் அவர் சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் வேறு ஒரு நபருடன் பேசி வருவதை அறிந்தவுடன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சில காலமாக பேசாமல் இருந்தோம். அவர் கல்லூரியில் கட்டணம் செலுத்த வந்ததை அறிந்ததும் சமாதானம் பேச அழைத்தேன்.

அங்கு இன்ஸ்டாகிராம் விஷயம் பற்றி பேசியதும் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட நான் கோபத்தில் கழுத்தை நெறித்தேன். இதில் உமா மயங்கி விழுந்தாள். நான் அவரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செல்லவில்லை. ஆத்திரத்தில் அப்படி நடந்து விட்டதால் மனசாட்சிப்படி போலீசார் என்னைப் பிடிப்பதற்கு முன் நானே சரணடைந்தேன்" என கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "
அப்பா வேலையை வாங்கிய அம்மா.. கூலிப்படையை ஏவி போட்டுத்தள்ளிய மகள்.. செம ஷாக்!
அப்பா வேலையை வாங்கிய அம்மா.. கூலிப்படையை ஏவி போட்டுத்தள்ளிய மகள்.. செம ஷாக்!
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி

வீடியோ

TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
Chennai Power Cut: சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
2000 Rupee Note: 2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget