மேலும் அறிய

Crime: காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு.. காதலன் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட காதலி..

கேரம் விளையாட்டு வீராங்கனையான அஞ்சலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழகியுள்ளார்.

புதுச்சேரியில் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் வீட்டிற்கு சென்று காதலி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி மாநிலம் தேங்காய்திட்டு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அஞ்சலி. இவர் புதுச்சேரியில் உள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பி.காம் படித்து முடித்துள்ளார். கேரம் விளையாட்டு வீராங்கனையான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழகியுள்ளார். நட்பாக தொடங்கிய அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் அடிக்கடி காதலன் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. 

இதனிடையே ஒருமுறை காதலனுடன் அஞ்சலி பைக்கில் வெளியே சென்றுள்ளார். பின்னர் வீட்டின் முன்னால் வந்து அவரை அந்த வாலிபர் இறக்கி விட்டுள்ளார். இதனைப் பார்த்த அஞ்சலியின் சகோதரர் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவரை அழைத்து வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். மேலும் அந்த வாலிபர் செய்தது பற்றியும் கோபமடைந்துள்ளனர். 

ஆனால் அஞ்சலி தொடர்ந்து அந்த வாலிபருடன் செல்போனில் பேசி வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்கள் என்னுடன் நீ பேசுவதை விரும்பவில்லை என்றும், என்னை உன்னுடன் பேசக்கூடாது என்று சத்தம் போட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் வீட்டில் உள்ளவர்களின் கருத்தால் அஞ்சலி மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதற்கிடையில் வழக்கம்போல நேற்று முன்தினம் காதலன் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார். 

அங்கு வீட்டுக் கதவு சாத்தப்பட்டு இருந்த நிலையில், உள்ளே சென்ற அவர் நேரடியாக மாடியில் உள்ள காதலன் அறைக்குச் சென்று நைலான் கயிற்றால் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். வீட்டில் யாரும் இல்லாததால் அஞ்சலி எடுத்த விபரீத முடிவு யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த அவரது காதலன், அஞ்சலி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவனைக்கு அஞ்சலியை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அஞ்சலி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுச்சேரி மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி - வாலிபர் கைது
கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி - வாலிபர் கைது
தூத்துக்குடி பெண் நெல்லையில் வெட்டிக் கொலை !! தம்பி மற்றும் நண்பர்கள் செய்த பயங்கர காரியம்
தூத்துக்குடி பெண் நெல்லையில் வெட்டிக் கொலை !! தம்பி மற்றும் நண்பர்கள் செய்த பயங்கர காரியம்
₹10 எக்ஸ்ட்ரா வாங்குவது ஏன்? - சீக்ரெட் லிஸ்ட்டை உடைத்த டாஸ்மாக் ஊழியர்கள்!
₹10 எக்ஸ்ட்ரா வாங்குவது ஏன்? - சீக்ரெட் லிஸ்ட்டை உடைத்த டாஸ்மாக் ஊழியர்கள்!
கோவையை அதிரவைத்த கள்ள நோட்டு கும்பல் – 1998 குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்பு ?
கோவையை அதிரவைத்த கள்ள நோட்டு கும்பல் – 1998 குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்பு ?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay Reels | அதிகாரியா? FAN BOY-ஆ?முதல்வர் மீட்டிங் LEAKED! REELS எடுத்த நபர் யார்?
Twisha Sharma : MISS புனே திடீர் மரணம்! சிக்கிய EX.நீதிபதி குடும்பம்..வரதட்சணை கொடுமை?
Tasmac Issue | ’’பாட்டிலுக்கு 10 ரூபாய்!’’TASMAC ஊழியர்கள் STRIKE..மயிலாடுதுறையில் பரபரப்பு
Kanimozhi Santhosh issue | ”மகாராணி-னு நினைப்போ
யானை விழுந்து மனைவி பலி கண்களை தானம் செய்த கணவர் “அவ கடைசி வரை பார்க்கணும்”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டில் நாளை மருந்துகள் கிடைக்குமா? - அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு பேட்டி
தமிழ்நாட்டில் நாளை மருந்துகள் கிடைக்குமா? - அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு பேட்டி
TVK New Ministers: புதிய அமைச்சர்கள் லிஸ்ட் ரெடி! ஆளுநர் வந்தவுடன் பதவியேற்பு விழா - வேகம் எடுக்கும் விஜய் அரசு
TVK New Ministers: புதிய அமைச்சர்கள் லிஸ்ட் ரெடி! ஆளுநர் வந்தவுடன் பதவியேற்பு விழா - வேகம் எடுக்கும் விஜய் அரசு
CM Vijay: முதலமைச்சர் விஜய் ஆலோசனை கூட்டத்தில் செல்ஃபி வீடியோ எடுத்தது யார்? வெளியான உண்மை!
CM Vijay: முதலமைச்சர் விஜய் ஆலோசனை கூட்டத்தில் செல்ஃபி வீடியோ எடுத்தது யார்? வெளியான உண்மை!
Honda SUV: புதுசா.. மாஸா.. ரூ.10 லட்சத்துக்கும் குறைவா- ஹோண்டாவின் புதிய எஸ்யூவி கார்!
Honda SUV: புதுசா.. மாஸா.. ரூ.10 லட்சத்துக்கும் குறைவா- ஹோண்டாவின் புதிய எஸ்யூவி கார்!
CV Shanmugam : தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Vijay: தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
Annamalai : ’அவர் மீண்டும் வரனும் – பாஜகவில் எழத் தொடங்கியது கலக குரல்’ தலைவராகிறாரா அண்ணாமலை..?
’அண்ணாமலைக்கு ஆதரவாக எழும் குரல்கள்’ மீண்டும் பாஜக தலைவர் ?
Embed widget