மேலும் அறிய

கத்தியோடு மிரட்டிய கணவன்... கதையை முடித்த மனைவி... எப்.ஐ.ஆர்.,யில் போலீஸ் கொடுத்த சலுகை!

கோமதிக்கு கணவனை கொலை செய்யவேண்டும் என்கிற நோக்கம் இல்லாததால், இந்திய தண்டனை சட்டம் 304 பிரிவு,2ன் கீழ் கொலையாகாத மரணம் என்கிற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல்(60). இவருடைய மனைவி கோமதி(48). குமரவேல் வேலை எதவும் செய்யவில்லை . மனைவி கோமதி,  வேலூர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  இதில் ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.  20 வயது இளம் மகள், கல்லூரியில் பயின்று வருகின்றார். இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான குமரவேல், போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

இதேபோல்,  கடந்த 10ஆம் தேதி இரவு 11 மணிக்கு, கணவன்-மனைவி இருவருக்கும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. சண்டை ஓய்ந்ததும், கோமதியும் அவரது மகளும் உறங்கச் சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து நள்ளிரவில் மீண்டும் குமரவேல் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவன்-மனைவி சண்டை முற்றிய நிலையில் , கையில் வைத்திருந்த கத்தியை காட்டி கோமதியை குமரவேல் மிரட்டியுள்ளார். ஆத்திரமடைந்த கோமதி , கணவர் குமரவேல் வைத்திருந்த கத்தியை பிடுங்கி பதில் தாக்குதல் நடித்தியதில், குமரவேல் வீட்டிற்குள்ளேயே துடிதுடித்து ரத்தவெள்ளத்தில் இறந்தார். 


கத்தியோடு மிரட்டிய கணவன்... கதையை முடித்த மனைவி... எப்.ஐ.ஆர்.,யில் போலீஸ் கொடுத்த சலுகை!

இது சம்பந்தமாக வேலூர் தெற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த குமரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த கோமதியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின் அவரிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டது.

போலீஸ் விசாரணையில் கோமதி அளித்துள்ள வாக்குமூலத்தில், "கணவர் குமரவேல், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். மது போதையில் என்னிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் ஒவ்வொரு இரவும் கடந்து செல்வது எனக்கு நரகமாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு போதை தலைக்கேறிய நிலையில், தடுமாற்றத்துடன் சுயநினைவு இழந்த நிலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது என்னிடம் வேண்டுமென்றே தகராறு செய்தவர்.  ஒரு கட்டத்திற்கு மேல் வீட்டில் இருந்த காய்வெட்டும் கத்தியை எடுத்து வெட்டினார். எனக்கு நெற்றி தலை பகுதியில் வெட்டு விழுந்தது. என்னை காப்பாற்றிக் கொள்வதற்காக வீட்டுக்குள் அங்குமிங்கும் ஓடினேன். 

 

 


கத்தியோடு மிரட்டிய கணவன்... கதையை முடித்த மனைவி... எப்.ஐ.ஆர்.,யில் போலீஸ் கொடுத்த சலுகை!

ஆனாலும், என்னுடைய கணவர் என்னை விரட்டி விரட்டி தாக்கினார். இதில் ஆத்திரம் அடைந்த நான் அவர் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவரை திருப்பி தாக்கினேன். அப்போது எதிர் பாரத விதமாக அவரது கழுத்தில் வெட்டு விழுந்ததால் என் கண் முன்னரே இறந்துவிட்டார். குடியால் தான் எங்கள் குடும்பமே சின்னாபின்னமாக ஆனது,’’ என்று கோமதி வாக்குமூலம் அளித்தார்.

கோமதிக்கு கணவனை கொலை செய்யவேண்டும் என்கிற நோக்கம் இல்லாததால், இந்திய தண்டனை சட்டம் 304 பிரிவு,2ன் கீழ் கொலையாகாத மரணம் என்கிற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் கோமதியை வேலூர் தொரப்பாடி பெண்கள் சிறையில் அடைத்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Embed widget