மேலும் அறிய

கத்தியோடு மிரட்டிய கணவன்... கதையை முடித்த மனைவி... எப்.ஐ.ஆர்.,யில் போலீஸ் கொடுத்த சலுகை!

கோமதிக்கு கணவனை கொலை செய்யவேண்டும் என்கிற நோக்கம் இல்லாததால், இந்திய தண்டனை சட்டம் 304 பிரிவு,2ன் கீழ் கொலையாகாத மரணம் என்கிற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல்(60). இவருடைய மனைவி கோமதி(48). குமரவேல் வேலை எதவும் செய்யவில்லை . மனைவி கோமதி,  வேலூர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  இதில் ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.  20 வயது இளம் மகள், கல்லூரியில் பயின்று வருகின்றார். இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான குமரவேல், போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

இதேபோல்,  கடந்த 10ஆம் தேதி இரவு 11 மணிக்கு, கணவன்-மனைவி இருவருக்கும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. சண்டை ஓய்ந்ததும், கோமதியும் அவரது மகளும் உறங்கச் சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து நள்ளிரவில் மீண்டும் குமரவேல் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவன்-மனைவி சண்டை முற்றிய நிலையில் , கையில் வைத்திருந்த கத்தியை காட்டி கோமதியை குமரவேல் மிரட்டியுள்ளார். ஆத்திரமடைந்த கோமதி , கணவர் குமரவேல் வைத்திருந்த கத்தியை பிடுங்கி பதில் தாக்குதல் நடித்தியதில், குமரவேல் வீட்டிற்குள்ளேயே துடிதுடித்து ரத்தவெள்ளத்தில் இறந்தார். 


கத்தியோடு மிரட்டிய கணவன்... கதையை முடித்த மனைவி... எப்.ஐ.ஆர்.,யில் போலீஸ் கொடுத்த சலுகை!

இது சம்பந்தமாக வேலூர் தெற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த குமரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த கோமதியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின் அவரிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டது.

போலீஸ் விசாரணையில் கோமதி அளித்துள்ள வாக்குமூலத்தில், "கணவர் குமரவேல், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். மது போதையில் என்னிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் ஒவ்வொரு இரவும் கடந்து செல்வது எனக்கு நரகமாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு போதை தலைக்கேறிய நிலையில், தடுமாற்றத்துடன் சுயநினைவு இழந்த நிலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது என்னிடம் வேண்டுமென்றே தகராறு செய்தவர்.  ஒரு கட்டத்திற்கு மேல் வீட்டில் இருந்த காய்வெட்டும் கத்தியை எடுத்து வெட்டினார். எனக்கு நெற்றி தலை பகுதியில் வெட்டு விழுந்தது. என்னை காப்பாற்றிக் கொள்வதற்காக வீட்டுக்குள் அங்குமிங்கும் ஓடினேன். 

 

 


கத்தியோடு மிரட்டிய கணவன்... கதையை முடித்த மனைவி... எப்.ஐ.ஆர்.,யில் போலீஸ் கொடுத்த சலுகை!

ஆனாலும், என்னுடைய கணவர் என்னை விரட்டி விரட்டி தாக்கினார். இதில் ஆத்திரம் அடைந்த நான் அவர் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவரை திருப்பி தாக்கினேன். அப்போது எதிர் பாரத விதமாக அவரது கழுத்தில் வெட்டு விழுந்ததால் என் கண் முன்னரே இறந்துவிட்டார். குடியால் தான் எங்கள் குடும்பமே சின்னாபின்னமாக ஆனது,’’ என்று கோமதி வாக்குமூலம் அளித்தார்.

கோமதிக்கு கணவனை கொலை செய்யவேண்டும் என்கிற நோக்கம் இல்லாததால், இந்திய தண்டனை சட்டம் 304 பிரிவு,2ன் கீழ் கொலையாகாத மரணம் என்கிற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் கோமதியை வேலூர் தொரப்பாடி பெண்கள் சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
China America Venezuela: “சர்வதேச சட்டத்த மீறாதீங்க“; அமெரிக்காவிற்கு சீனா கடும் கண்டனம் - எதற்காகன்னு தெரியுமா.?
“சர்வதேச சட்டத்த மீறாதீங்க“; அமெரிக்காவிற்கு சீனா கடும் கண்டனம் - எதற்காகன்னு தெரியுமா.?
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
Tamilnadu Roundup: அதிமுகவிடம் பாஜக டிமாண்ட், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை, வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை - 10 மணி செய்திகள்
அதிமுகவிடம் பாஜக டிமாண்ட், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை, வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை - 10 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
China America Venezuela: “சர்வதேச சட்டத்த மீறாதீங்க“; அமெரிக்காவிற்கு சீனா கடும் கண்டனம் - எதற்காகன்னு தெரியுமா.?
“சர்வதேச சட்டத்த மீறாதீங்க“; அமெரிக்காவிற்கு சீனா கடும் கண்டனம் - எதற்காகன்னு தெரியுமா.?
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
Tamilnadu Roundup: அதிமுகவிடம் பாஜக டிமாண்ட், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை, வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை - 10 மணி செய்திகள்
அதிமுகவிடம் பாஜக டிமாண்ட், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை, வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை - 10 மணி செய்திகள்
Admk Bjp Alliance: 45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
தங்க நகைகளை அடகு வைக்கப்போறீங்களா.! ஆர்பிஐ உத்தரவால் வங்கிகள் பல்டி- இனி கம்மியான பணம் தான் கிடைக்கும்
தங்க நகைகளை அடகு வைக்கப்போறீங்களா.! ரிசர்வ் வங்கி வைத்த ஆப்பு- இனி கம்மியா தான் பணம் கிடைக்கும்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
Embed widget