மேலும் அறிய

கத்தியோடு மிரட்டிய கணவன்... கதையை முடித்த மனைவி... எப்.ஐ.ஆர்.,யில் போலீஸ் கொடுத்த சலுகை!

கோமதிக்கு கணவனை கொலை செய்யவேண்டும் என்கிற நோக்கம் இல்லாததால், இந்திய தண்டனை சட்டம் 304 பிரிவு,2ன் கீழ் கொலையாகாத மரணம் என்கிற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல்(60). இவருடைய மனைவி கோமதி(48). குமரவேல் வேலை எதவும் செய்யவில்லை . மனைவி கோமதி,  வேலூர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  இதில் ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.  20 வயது இளம் மகள், கல்லூரியில் பயின்று வருகின்றார். இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான குமரவேல், போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

இதேபோல்,  கடந்த 10ஆம் தேதி இரவு 11 மணிக்கு, கணவன்-மனைவி இருவருக்கும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. சண்டை ஓய்ந்ததும், கோமதியும் அவரது மகளும் உறங்கச் சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து நள்ளிரவில் மீண்டும் குமரவேல் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவன்-மனைவி சண்டை முற்றிய நிலையில் , கையில் வைத்திருந்த கத்தியை காட்டி கோமதியை குமரவேல் மிரட்டியுள்ளார். ஆத்திரமடைந்த கோமதி , கணவர் குமரவேல் வைத்திருந்த கத்தியை பிடுங்கி பதில் தாக்குதல் நடித்தியதில், குமரவேல் வீட்டிற்குள்ளேயே துடிதுடித்து ரத்தவெள்ளத்தில் இறந்தார். 


கத்தியோடு மிரட்டிய கணவன்... கதையை முடித்த மனைவி... எப்.ஐ.ஆர்.,யில் போலீஸ் கொடுத்த சலுகை!

இது சம்பந்தமாக வேலூர் தெற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த குமரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த கோமதியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின் அவரிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டது.

போலீஸ் விசாரணையில் கோமதி அளித்துள்ள வாக்குமூலத்தில், "கணவர் குமரவேல், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். மது போதையில் என்னிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் ஒவ்வொரு இரவும் கடந்து செல்வது எனக்கு நரகமாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு போதை தலைக்கேறிய நிலையில், தடுமாற்றத்துடன் சுயநினைவு இழந்த நிலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது என்னிடம் வேண்டுமென்றே தகராறு செய்தவர்.  ஒரு கட்டத்திற்கு மேல் வீட்டில் இருந்த காய்வெட்டும் கத்தியை எடுத்து வெட்டினார். எனக்கு நெற்றி தலை பகுதியில் வெட்டு விழுந்தது. என்னை காப்பாற்றிக் கொள்வதற்காக வீட்டுக்குள் அங்குமிங்கும் ஓடினேன். 

 

 


கத்தியோடு மிரட்டிய கணவன்... கதையை முடித்த மனைவி... எப்.ஐ.ஆர்.,யில் போலீஸ் கொடுத்த சலுகை!

ஆனாலும், என்னுடைய கணவர் என்னை விரட்டி விரட்டி தாக்கினார். இதில் ஆத்திரம் அடைந்த நான் அவர் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவரை திருப்பி தாக்கினேன். அப்போது எதிர் பாரத விதமாக அவரது கழுத்தில் வெட்டு விழுந்ததால் என் கண் முன்னரே இறந்துவிட்டார். குடியால் தான் எங்கள் குடும்பமே சின்னாபின்னமாக ஆனது,’’ என்று கோமதி வாக்குமூலம் அளித்தார்.

கோமதிக்கு கணவனை கொலை செய்யவேண்டும் என்கிற நோக்கம் இல்லாததால், இந்திய தண்டனை சட்டம் 304 பிரிவு,2ன் கீழ் கொலையாகாத மரணம் என்கிற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் கோமதியை வேலூர் தொரப்பாடி பெண்கள் சிறையில் அடைத்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Embed widget