மேலும் அறிய

கத்தியோடு மிரட்டிய கணவன்... கதையை முடித்த மனைவி... எப்.ஐ.ஆர்.,யில் போலீஸ் கொடுத்த சலுகை!

கோமதிக்கு கணவனை கொலை செய்யவேண்டும் என்கிற நோக்கம் இல்லாததால், இந்திய தண்டனை சட்டம் 304 பிரிவு,2ன் கீழ் கொலையாகாத மரணம் என்கிற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல்(60). இவருடைய மனைவி கோமதி(48). குமரவேல் வேலை எதவும் செய்யவில்லை . மனைவி கோமதி,  வேலூர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  இதில் ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.  20 வயது இளம் மகள், கல்லூரியில் பயின்று வருகின்றார். இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான குமரவேல், போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

இதேபோல்,  கடந்த 10ஆம் தேதி இரவு 11 மணிக்கு, கணவன்-மனைவி இருவருக்கும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. சண்டை ஓய்ந்ததும், கோமதியும் அவரது மகளும் உறங்கச் சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து நள்ளிரவில் மீண்டும் குமரவேல் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவன்-மனைவி சண்டை முற்றிய நிலையில் , கையில் வைத்திருந்த கத்தியை காட்டி கோமதியை குமரவேல் மிரட்டியுள்ளார். ஆத்திரமடைந்த கோமதி , கணவர் குமரவேல் வைத்திருந்த கத்தியை பிடுங்கி பதில் தாக்குதல் நடித்தியதில், குமரவேல் வீட்டிற்குள்ளேயே துடிதுடித்து ரத்தவெள்ளத்தில் இறந்தார். 


கத்தியோடு மிரட்டிய கணவன்... கதையை முடித்த மனைவி... எப்.ஐ.ஆர்.,யில் போலீஸ் கொடுத்த சலுகை!

இது சம்பந்தமாக வேலூர் தெற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த குமரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த கோமதியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின் அவரிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டது.

போலீஸ் விசாரணையில் கோமதி அளித்துள்ள வாக்குமூலத்தில், "கணவர் குமரவேல், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். மது போதையில் என்னிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் ஒவ்வொரு இரவும் கடந்து செல்வது எனக்கு நரகமாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு போதை தலைக்கேறிய நிலையில், தடுமாற்றத்துடன் சுயநினைவு இழந்த நிலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது என்னிடம் வேண்டுமென்றே தகராறு செய்தவர்.  ஒரு கட்டத்திற்கு மேல் வீட்டில் இருந்த காய்வெட்டும் கத்தியை எடுத்து வெட்டினார். எனக்கு நெற்றி தலை பகுதியில் வெட்டு விழுந்தது. என்னை காப்பாற்றிக் கொள்வதற்காக வீட்டுக்குள் அங்குமிங்கும் ஓடினேன். 

 

 


கத்தியோடு மிரட்டிய கணவன்... கதையை முடித்த மனைவி... எப்.ஐ.ஆர்.,யில் போலீஸ் கொடுத்த சலுகை!

ஆனாலும், என்னுடைய கணவர் என்னை விரட்டி விரட்டி தாக்கினார். இதில் ஆத்திரம் அடைந்த நான் அவர் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவரை திருப்பி தாக்கினேன். அப்போது எதிர் பாரத விதமாக அவரது கழுத்தில் வெட்டு விழுந்ததால் என் கண் முன்னரே இறந்துவிட்டார். குடியால் தான் எங்கள் குடும்பமே சின்னாபின்னமாக ஆனது,’’ என்று கோமதி வாக்குமூலம் அளித்தார்.

கோமதிக்கு கணவனை கொலை செய்யவேண்டும் என்கிற நோக்கம் இல்லாததால், இந்திய தண்டனை சட்டம் 304 பிரிவு,2ன் கீழ் கொலையாகாத மரணம் என்கிற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் கோமதியை வேலூர் தொரப்பாடி பெண்கள் சிறையில் அடைத்தனர். 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
தந்தை, மகன் மோதல்... எனக்கு ரொம்ப மனவேதனை இருக்கு... கண்கலங்கிய ஜி.கே.மணி
தந்தை, மகன் மோதல்... எனக்கு ரொம்ப மனவேதனை இருக்கு... கண்கலங்கிய ஜி.கே.மணி
பாமகவில் யாருடைய அறிவிப்பு செல்லும்? ராமதாசுக்கு என்ன அதிகாரம்? கட்சி விதிகள் சொல்வதென்ன ? 
பாமகவில் யாருடைய அறிவிப்பு செல்லும்? ராமதாசுக்கு என்ன அதிகாரம்? கட்சி விதிகள் சொல்வதென்ன ? 
TN Govt: அரசு பல்கலை.களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப முடிவு? எழும் எதிர்ப்புகள்!
TN Govt: அரசு பல்கலை.களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப முடிவு? எழும் எதிர்ப்புகள்!
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
Embed widget