மேலும் அறிய

பிட்காயின் முதலீடு: ஒட்டுமொத்த தொகையை இழந்த விரக்தியில் ஆண் தற்கொலை!

பிட்காயின் மற்றும் பங்குச்சந்தையில் பல லட்சத்தை முதலீடு செய்து இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையின் வீரர் கணேசன் மகன் முரளி கிருஷ்ணன் (34). BE, EEE பட்டதாரியான முரளி கிருஷ்ணன் வேலூரில் உள்ள தனியார் தொலைபேசி நிறுவனத்தில் டவர் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் முரளி கிருஷ்ணன் வேலூர் மாவட்டம் வேலூர் மாநகருக்குட்பட்ட சேண்பாக்கத்தில் அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி வேலை செய்து வருகிறார்.

இச்சூழலில், சேண்பாக்கத்தில் அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த முரளி கிருஷ்ணனின் சக அறை நண்பர் அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட முரளி கிருஷ்ணணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தற்கொலை செய்து கொண்ட முரளி கிருஷ்ணணின் மனைவி காயத்ரி அளித்த புகாரின் அடிப்படையில் தற்போதைக்கு  சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.


பிட்காயின் முதலீடு: ஒட்டுமொத்த தொகையை இழந்த விரக்தியில் ஆண் தற்கொலை!

இந்நிலையில் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையிலும், முரளி கிருஷ்ணனின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரிலும், தற்கொலை செய்துகொண்ட முரளி கிருஷ்ணன் பிட்காயின் எனப்படும் கிரிப்ட்டோ கரண்சியில் பணத்தை முதலீடு செய்து பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதேபோல ஆன்லைன் பங்கு சந்தையிலும் முதலீடு செய்ததாகவும். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் முரளி கிருஷ்ணன் கடந்த சில நாட்களாக மனமுடைந்து மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிட்காயினில் எவ்வளவு தொகை முதலீடு செய்தார் என்பது குறித்து இதுவரை தெளிவான எந்தவித தகவலும் இல்லாத நிலையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முரளி கிருஷ்ணனின் தந்தை ஓய்வு பெற்றபோது வந்த பணத்தை இவரிடம் கொடுத்ததாகவும் அதையும் இவர் பிட்காயின் மற்றும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து சுமார் 12 லட்சம் முதல் 20 லட்சம் வரை பணத்தை இழந்ததாகவும் கூறப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு இணையதளங்கள் மக்களிடம் ஆசையை தூண்டும் வகையில் விளம்பரங்களை செய்து வருவதும். இதில் வரும் நம்பத்தாகாத விளம்பரங்களை பொது மக்கள் நம்பி அடிமையாகி பணத்தை இழந்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது. இதுபோன்ற நம்பகத்தன்மையில்லா மற்றும் போலியான பக்கங்கள் மூலம் அதிகளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புல்லதால் இது போன்ற பண பரிவர்த்தனைகளில் ஈடுபட வேண்டாம் என வேலூர் மாவட்ட காவல் துறையினர் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Embed widget