மேலும் அறிய

Crime : கள்ளக்குறிச்சி அருகே கருக்கலைப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் குண்டாஸ் சட்டத்தில் கைது

கள்ளக்குறிச்சியில் கருக்கலைப்பில் ஈடுபடுட்ட இரண்டு பெண்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் கரு கலைப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்களை குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரிஷிவந்தியம் அருகில் உள்ள கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர், சின்னதம்பி மனைவி செல்வி(30). இவர் கர்ப்பமாக இருந்தபோது, கரு வளர்ச்சி குறைபாட்டுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதையெடுத்து, அவர் கருவை கலைக்க முடிவெடுத்துள்ளார். 

இந்நில்லையில், கீழ்பாடி கிராமத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர், மதுரை ஆலம்பாடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி முத்துகுமாரி. இவரும், உதவியாளர் கவிதா என்பவரும் பிப்ரவரி,22 ஆம் தேதி இரவு செல்விக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். இதில், செல்விக்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவத்தை அடுத்து முத்துக்குமாரி, கவிதா ஆகியோரை ரிஷிவந்தியம் போலீசார் கைது செய்தனர். குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். கருகலைப்பில் ஈடுபட்ட முத்துகுமாரி, கவிதா ஆகியோர் இதுபோன்ற தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதால், இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க,கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

கருக்கலைப்பு (Abortion) என்பது முளையம் (embryo) அல்லது முதிர்கரு (fetus) கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பைக்கு வெளியே இருக்கும்போது உயிர்வாழக் கூடிய தன்மையை அடைவதற்கு முன்னர், அதனை கருப்பையிலிருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும். 

இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, மருத்துவ முறை கருக்கலைப்புச் சட்டத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமல் ஒரு பெண் தனது கருவைக் கலைத்தாலோ அல்லது வேறு ஒருவர் அந்த முயற்சியை எடுத்தாலோ அது குற்றம். அதற்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்து கொள்ள சட்டப்படி அனுமதிக்கப்பட்ட காரணங்கள் என்னவெனில், (இதில் குறிப்பிடப்பட்டுள்ளவைகள் சம்பந்தப்பட்ட கர்ப்பிணியை அடிப்படையாக வைத்து இயற்றப்பட்டவை. மற்றபடி,  ஒரு பெண்ணின் கர்ப்பத்துக்கு காரணமான நபர் உட்பட குடும்ப உறுப்பினர் யாரும் இதில் தலையிடப்போவதில்லை. ஒருவேளை சம்பந்தப்பட்ட பெண் 18 வயதுக்கு குறைவானவர் என்றால், பாதுகாவலர் அல்லது பெற்றோரிடம் ஒப்புதல் கேட்கப்படும்):

கருவின் காரணமாக ஒரு பெண்ணின் உடலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுவது.

பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஏற்பட்ட கர்ப்பம்.

 திட்டமிடப்படாத கர்ப்பம் என கர்ப்பிணி கூறும் சூழ்நிலை (சம்பந்தப்பட்ட பெண் உறவின்போது கருத்தடை சாதனம் பயன்படுத்தியப் பின்னரும் கரு உருவாகியிருந்து, அது தனக்கு மனரீதியாக மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஒரு பெண் கருதும் சூழல் ஏற்படுமாயின்.)

கருவின் வளர்ச்சியில் குறைபாடுகள் இருப்பது உறுதி செய்யப்படும் சூழல்.

Crime : பொள்ளாச்சி பாணியில் கொடூரம்.. திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது..

Cylinder Price Hike: பெட்ரோல், டீசலை விலையை அடுத்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் உயர்வு... கவலையில் மக்கள்

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget