மேலும் அறிய

Crime : கள்ளக்குறிச்சி அருகே கருக்கலைப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் குண்டாஸ் சட்டத்தில் கைது

கள்ளக்குறிச்சியில் கருக்கலைப்பில் ஈடுபடுட்ட இரண்டு பெண்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் கரு கலைப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்களை குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரிஷிவந்தியம் அருகில் உள்ள கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர், சின்னதம்பி மனைவி செல்வி(30). இவர் கர்ப்பமாக இருந்தபோது, கரு வளர்ச்சி குறைபாட்டுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதையெடுத்து, அவர் கருவை கலைக்க முடிவெடுத்துள்ளார். 

இந்நில்லையில், கீழ்பாடி கிராமத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர், மதுரை ஆலம்பாடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி முத்துகுமாரி. இவரும், உதவியாளர் கவிதா என்பவரும் பிப்ரவரி,22 ஆம் தேதி இரவு செல்விக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். இதில், செல்விக்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவத்தை அடுத்து முத்துக்குமாரி, கவிதா ஆகியோரை ரிஷிவந்தியம் போலீசார் கைது செய்தனர். குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். கருகலைப்பில் ஈடுபட்ட முத்துகுமாரி, கவிதா ஆகியோர் இதுபோன்ற தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதால், இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க,கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

கருக்கலைப்பு (Abortion) என்பது முளையம் (embryo) அல்லது முதிர்கரு (fetus) கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பைக்கு வெளியே இருக்கும்போது உயிர்வாழக் கூடிய தன்மையை அடைவதற்கு முன்னர், அதனை கருப்பையிலிருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும். 

இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, மருத்துவ முறை கருக்கலைப்புச் சட்டத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமல் ஒரு பெண் தனது கருவைக் கலைத்தாலோ அல்லது வேறு ஒருவர் அந்த முயற்சியை எடுத்தாலோ அது குற்றம். அதற்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்து கொள்ள சட்டப்படி அனுமதிக்கப்பட்ட காரணங்கள் என்னவெனில், (இதில் குறிப்பிடப்பட்டுள்ளவைகள் சம்பந்தப்பட்ட கர்ப்பிணியை அடிப்படையாக வைத்து இயற்றப்பட்டவை. மற்றபடி,  ஒரு பெண்ணின் கர்ப்பத்துக்கு காரணமான நபர் உட்பட குடும்ப உறுப்பினர் யாரும் இதில் தலையிடப்போவதில்லை. ஒருவேளை சம்பந்தப்பட்ட பெண் 18 வயதுக்கு குறைவானவர் என்றால், பாதுகாவலர் அல்லது பெற்றோரிடம் ஒப்புதல் கேட்கப்படும்):

கருவின் காரணமாக ஒரு பெண்ணின் உடலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுவது.

பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஏற்பட்ட கர்ப்பம்.

 திட்டமிடப்படாத கர்ப்பம் என கர்ப்பிணி கூறும் சூழ்நிலை (சம்பந்தப்பட்ட பெண் உறவின்போது கருத்தடை சாதனம் பயன்படுத்தியப் பின்னரும் கரு உருவாகியிருந்து, அது தனக்கு மனரீதியாக மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஒரு பெண் கருதும் சூழல் ஏற்படுமாயின்.)

கருவின் வளர்ச்சியில் குறைபாடுகள் இருப்பது உறுதி செய்யப்படும் சூழல்.

Crime : பொள்ளாச்சி பாணியில் கொடூரம்.. திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது..

Cylinder Price Hike: பெட்ரோல், டீசலை விலையை அடுத்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் உயர்வு... கவலையில் மக்கள்

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
"திருமணம் மீறிய உறவு" தந்தையிடம் புகார் கூறியதால் ஆத்திரம் ! பெற்ற மகனையே அடித்துக் கொன்ற தாய்
" ஒன்னும் ஆகாது " பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி அலுவலக உதவியாளர்
" தோழிகள் கண்முன்னே பயங்கரம் " பெப்பர் ஸ்ப்ரே அடித்து இளம்பெண் வெட்டிக் கொலை

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
K Bhagyaraj: நான்-ஸ்டாப் சரவெடி.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாக்யராஜ் படங்கள்..”சமாச்சாரம், குடும்ப கதை”
நான்-ஸ்டாப் சரவெடி.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாக்யராஜ் படங்கள்..”சமாச்சாரம், குடும்ப கதை”
TVK Vijay: திமுக MP, சாராய ஆலை உரிமையாளர் மகனுக்கு தவெகவில் பதவி பார்சல்? CM விஜயின் மாற்றம் இதுவா?
திமுக MP, சாராய ஆலை உரிமையாளர் மகனுக்கு தவெகவில் பதவி பார்சல்? CM விஜயின் மாற்றம் இதுவா?
Bhagyaraj: அன்று குரு பாரதிராஜா.. இன்று சிஷ்யன் பாக்யராஜ்..! ஒரே மாதத்தில் மீளாத துயரத்தில் தமிழ் சினிமா!
Bhagyaraj: அன்று குரு பாரதிராஜா.. இன்று சிஷ்யன் பாக்யராஜ்..! ஒரே மாதத்தில் மீளாத துயரத்தில் தமிழ் சினிமா!
K.Bhagyaraj: திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
Embed widget