மேலும் அறிய

நர்சிங் மாணவிக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை - மேலும் இருவர் கைது

கல்லூரி உரிமையாளர் டேவிட் மற்றும் பணியாளர்கள் அன்பு பிரேம் ஆகியோர் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்தனர். இதையடுத்து மது மயக்கத்தில் மயங்கிய அப்பெண்ணை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினர்.

பண்ருட்டியில் நர்சிங் மாணவிக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏகே குச்சிபாளையத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் திடீரென்று பண்ருட்டி சென்னை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதில் பலத்த காயமடைந்த இளம்பெண்னை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி பண்ருட்டி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அதன்பின்பு மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பண்ருட்டி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் குடும்பத்தில் பிரச்சினை காரணமாக அண்ணன் திட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக இளம்பெண் தெரிவித்தார். மேலும் காயப்பட்டவர் மாணவி என்பதால் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவல் துறையினர் கடலூர் அரசு மருத்துவமனையில் நேரில்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இளம்பெண் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


நர்சிங் மாணவிக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை - மேலும் இருவர் கைது

 

அப்போது மாணவி கூறுகையில்,  “நான் நர்சிங் படித்து வருவதால் மருத்துவம் சம்பந்தமான பயிற்சிகள் தேவை என்பதால் கல்லூரி சார்பில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிப்பார்கள். இந்தநிலையில் கடந்த மாதம் 3ஆம் தேதி ஏற்காடு பகுதியில் பயிற்சிக்குச் செல்ல மாணவ மாணவிகள் புறப்பட்டோம். எங்களுடன் கல்லூரி பொறுப்பாளர் பர்க்கத்பீவி என்கின்ற நிஷா, நர்சிங் பயிற்சி கல்லூரி தாளாளர் டேவிட் அசோக்குமார் அவரது நண்பர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் நெய்வேலி தனியார் மருத்துவமனை பயிற்சியாளர் அன்பழகன் ஆகியோரும் ஏற்காடிற்கு வந்தார்கள். அங்கு பயிற்சி ஏதும் கொடுக்கவில்லை. மாறாக ஒரு வாடகை ரூம் எடுத்து தங்கிய போது அங்கு என்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து கல்லூரி உரிமையாளர் டேவிட் மற்றும் பணியாளர்கள் அன்பு பிரேம் ஆகியோர் தன்னை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்தனர்.


நர்சிங் மாணவிக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை - மேலும் இருவர் கைது

இதையடுத்து மது மயக்கத்தில் மயங்கிய என்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் ஏற்காட்டில் இருந்து காரில் பண்ருட்டி வந்தடைந்தேன். அப்பொழுது என்னுடன் படித்த சக மாணவியிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி விட்டு வீட்டுக்குச் சென்றேன். இதனை அறிந்த எனது சகோதரர் என்னிடம் சரியாக பேசாமல் வருத்தத்தில் இருந்தார். இதனால் வேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முயன்றேன்” என காவல் துறையினரிடம் கூறியுள்ளார்.


நர்சிங் மாணவிக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை - மேலும் இருவர் கைது

 

இதனையடுத்து மகளிர் காவல் ஆய்வாளர், இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் கல்லூரி பொறுப்பாளர் பர்க்கத்பீவி, தனியார் மருத்துவமனை பயிற்சியாளர் அன்பழகன், கல்லூரி தாளாளர் டேவிட் அசோக்குமார் அவரது நண்பர் பிரேம்குமார் ஆகிய நால்வர் மீதும் போஸ்கோ வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஜனவரி 13 அன்று பர்க்கத்பீவி மற்றும் அன்பழகன் ஆகிய  இருவரை கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில், தப்பி ஓடிய டேவிட் அசோக்குமார் அவரது நண்பர் பிரேம்குமார் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
TN Congress New Leader: IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.? ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.. ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
ஏமாந்து போன இளம்பெண்.. WFH வேலை வாங்கி தருவதாக 15 லட்சம் அபேஸ்.. மோசடி கும்பலின் பலே டெக்னிக்
"நல்ல சம்பளம் வாங்கி தரோம்" WFH வேலை வாங்கி தருவதாக மோசடி.. 15 லட்சம் அபேஸ்! 
Embed widget