மேலும் அறிய

நர்சிங் மாணவிக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை - மேலும் இருவர் கைது

கல்லூரி உரிமையாளர் டேவிட் மற்றும் பணியாளர்கள் அன்பு பிரேம் ஆகியோர் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்தனர். இதையடுத்து மது மயக்கத்தில் மயங்கிய அப்பெண்ணை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினர்.

பண்ருட்டியில் நர்சிங் மாணவிக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏகே குச்சிபாளையத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் திடீரென்று பண்ருட்டி சென்னை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதில் பலத்த காயமடைந்த இளம்பெண்னை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி பண்ருட்டி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அதன்பின்பு மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பண்ருட்டி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் குடும்பத்தில் பிரச்சினை காரணமாக அண்ணன் திட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக இளம்பெண் தெரிவித்தார். மேலும் காயப்பட்டவர் மாணவி என்பதால் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவல் துறையினர் கடலூர் அரசு மருத்துவமனையில் நேரில்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இளம்பெண் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


நர்சிங் மாணவிக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை - மேலும் இருவர் கைது

 

அப்போது மாணவி கூறுகையில்,  “நான் நர்சிங் படித்து வருவதால் மருத்துவம் சம்பந்தமான பயிற்சிகள் தேவை என்பதால் கல்லூரி சார்பில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிப்பார்கள். இந்தநிலையில் கடந்த மாதம் 3ஆம் தேதி ஏற்காடு பகுதியில் பயிற்சிக்குச் செல்ல மாணவ மாணவிகள் புறப்பட்டோம். எங்களுடன் கல்லூரி பொறுப்பாளர் பர்க்கத்பீவி என்கின்ற நிஷா, நர்சிங் பயிற்சி கல்லூரி தாளாளர் டேவிட் அசோக்குமார் அவரது நண்பர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் நெய்வேலி தனியார் மருத்துவமனை பயிற்சியாளர் அன்பழகன் ஆகியோரும் ஏற்காடிற்கு வந்தார்கள். அங்கு பயிற்சி ஏதும் கொடுக்கவில்லை. மாறாக ஒரு வாடகை ரூம் எடுத்து தங்கிய போது அங்கு என்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து கல்லூரி உரிமையாளர் டேவிட் மற்றும் பணியாளர்கள் அன்பு பிரேம் ஆகியோர் தன்னை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்தனர்.


நர்சிங் மாணவிக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை - மேலும் இருவர் கைது

இதையடுத்து மது மயக்கத்தில் மயங்கிய என்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் ஏற்காட்டில் இருந்து காரில் பண்ருட்டி வந்தடைந்தேன். அப்பொழுது என்னுடன் படித்த சக மாணவியிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி விட்டு வீட்டுக்குச் சென்றேன். இதனை அறிந்த எனது சகோதரர் என்னிடம் சரியாக பேசாமல் வருத்தத்தில் இருந்தார். இதனால் வேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முயன்றேன்” என காவல் துறையினரிடம் கூறியுள்ளார்.


நர்சிங் மாணவிக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை - மேலும் இருவர் கைது

 

இதனையடுத்து மகளிர் காவல் ஆய்வாளர், இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் கல்லூரி பொறுப்பாளர் பர்க்கத்பீவி, தனியார் மருத்துவமனை பயிற்சியாளர் அன்பழகன், கல்லூரி தாளாளர் டேவிட் அசோக்குமார் அவரது நண்பர் பிரேம்குமார் ஆகிய நால்வர் மீதும் போஸ்கோ வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஜனவரி 13 அன்று பர்க்கத்பீவி மற்றும் அன்பழகன் ஆகிய  இருவரை கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில், தப்பி ஓடிய டேவிட் அசோக்குமார் அவரது நண்பர் பிரேம்குமார் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
காதல் திருமணம் செய்த சகோதரி.. ஆத்திரத்தில் மச்சானை கத்தியால் குத்திய தம்பி!
காதல் திருமணம் செய்த சகோதரி.. ஆத்திரத்தில் மச்சானை கத்தியால் குத்திய தம்பி!
கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
Embed widget