மேலும் அறிய

காணாமல் போன குழந்தைகள்..! சல்லடை போட்டு கண்டுபிடித்து சல்யூட் வாங்கிய காஞ்சிபுரம் போலீஸ்..!

Kanchipuram : குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பாடு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் செல்லப்பட்ட விவகாரத்தில் குழந்தைகளை மீட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண் பார்வையிலே வைத்துக்கொள்ள வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்.
 
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை
 
காஞ்சிபுரம் ( kanchipuram child missing ) : காஞ்சிபுரம் அடுத்த வெங்கச்சேரி இருளர் காளனியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி காமாட்சி பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பார்வையாளர் கூடத்தில் இருந்த மூர்த்தியின்  3 வயது குழந்தை சக்திவேல், மற்றும்  அவரது அண்ணன் ஏழுமலையின் 6 வயது மகள் சௌந்தர்யா ஆகிய இரு குழந்தைகளும் மருத்துவமனையில் இருந்து திடீரென மாயமானார்கள்.
காணாமல் போன குழந்தைகள்..! சல்லடை போட்டு கண்டுபிடித்து சல்யூட் வாங்கிய காஞ்சிபுரம் போலீஸ்..!
இது குறித்து மூர்த்தி, ஏழுமலை ஆகியோர் குழந்தைகள் காணவில்லை என விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் விஷ்ணு காஞ்சி போலீசார் காணாமல் போன குழந்தைகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இரு குழந்தைகளையும் பெண் ஒருவர் ரயில்வே சாலை வழியாக அழைத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
 
kanchipuram: Two kids go missing from kanchipuram hospital police suspect kidnap KANCHIPURAM : ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் மாயம்.. அமைக்கப்பட்ட 9 தனிப்படைகள்.. சல்லடை போட்டு தேடும் போலீஸ்!
 
சிசிடிவி காட்சி..
 
சிசிடிவி காட்சியில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இரு குழந்தைகளையும் அழைத்து செல்வது போல் உள்ளது. அந்த பெண் கடந்த இரு தினங்களாக மருத்துவமனையில் இருந்து அந்த குழந்தைகளிடம் நன்றாக பழகி வந்ததாக மருத்துவமனையில் இருந்தவர்கள் தெரிவித்து தான் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
 
தொடர்ந்து தேடுதல் வேட்டை
 
மேலும் காணாமல் போன இரு குழந்தைகளையும் கண்டுபிடிக்கும் பணியில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில், பதிவான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் படிப்படியாக ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளைப் பெண் அழைத்துச் சென்ற வழியை, காவல்துறையினர் தொடர்ந்து கண்டறிந்து கொண்டு வந்தனர்.
 
காணாமல் போன குழந்தைகள்..! சல்லடை போட்டு கண்டுபிடித்து சல்யூட் வாங்கிய காஞ்சிபுரம் போலீஸ்..!
குழந்தைகள் மீட்பு:
 
அதன் பிறகு வாலாஜாபாத் பகுதியில் அந்தப் பெண் சென்ற கடைசி சிசிடிவி காட்சி கிடைத்தவுடன், அந்த சுற்றுவட்டார பகுதியில் தான் பெண் குழந்தைகளை பதுக்கி வைத்திருக்க வேண்டும் என தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். சுற்றுவட்டாரத்தில் இருந்த பல்வேறு கிராம பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வாலாஜாபாத் தடுத்துள்ள அஞ்சூர் என்ற கிராமத்தில் குழந்தைகள் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அப்பகுதியில் குழந்தைகளை வைத்திருந்த ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போன குழந்தைகள்..! சல்லடை போட்டு கண்டுபிடித்து சல்யூட் வாங்கிய காஞ்சிபுரம் போலீஸ்..!
 
சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்ற காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டார். அப்பொழுது காணாமல் போன சிறுமி," சாப்பாடு வாங்கித் தருவதாக அந்த பெண் கூறியதால் சென்றதாகவும், தனது தாயார் கூட அந்தப் பெண்ணுடன் இருக்குமாறு கூறியதாக குழந்தை தெரிவித்தது " . இதன் அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், இனி  பெற்றோர்கள் இல்லாமல் யாருடனும் செல்லக்கூடாது, எனக் கூறி அறிவுறுத்தல் கொடுத்தார். குழந்தைகளை கூட்டிச் சென்ற பெண்ணை காவல் துறை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
 

தலைப்பு செய்திகள்

மதுரை மாவட்ட காவல்துறையின் (Storming Operation) - ஒரே நாளில் 22 குற்றவாளிகள் கைது !
மதுரை மாவட்ட காவல்துறையின் (Storming Operation) - ஒரே நாளில் 22 குற்றவாளிகள் கைது !
கஞ்சா கடத்தல் ; கள்ளக் காதலியுடன் சிக்கிய மதிமுக நிர்வாகி !! வடசென்னையில் பரபரப்பு
கஞ்சா கடத்தல் ; கள்ளக் காதலியுடன் சிக்கிய மதிமுக நிர்வாகி !! வடசென்னையில் பரபரப்பு
பிள்ளைகளிடம் வண்டியை கொடுத்தால் ஜெயில் தான்..! புதுச்சேரியில் சிறார்களின் பெற்றோர்கள் மீது பாய்ந்தது FIR
பிள்ளைகளிடம் வண்டியை கொடுத்தால் ஜெயில் தான்..! புதுச்சேரியில் சிறார்களின் பெற்றோர்கள் மீது பாய்ந்தது FIR
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijaya Baskar Gutkha case : தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்
தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
Embed widget