மேலும் அறிய

சீர்காழியில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது

ஊரடங்கை சாதகமாக்கி புதுச்சேரி சாராயம், தமிழக எல்லை பகுதியில் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளது. எல்லையில் போதிய கண்காணிப்பு இல்லாதததே இதற்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

சீர்காழி அருகே வீட்டில் கள்ளச் சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட  இருவர் கைது செய்யப்பட்டதுடன், விற்பனைக்கு வைத்திருந்த கள்ளச்சாராயம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

சீர்காழியில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அனைத்து கடைகளும் மூடப்பட்டு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தி உள்ளது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. திங்கள் முதல் ஒரு வார காலம் மளிகை காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் தடைவிதித்து முழு ஊரடங்கு அறிவித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் திறந்து கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. இதனால் டாஸ்மார் கடை திறக்கும் என எதிர்பார்த்திருந்த மது பிரியர்களுக்கு டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படாததால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

சீர்காழியில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது

இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்கு அருகே மயிலாடுதுறை மாவட்டம் அமைந்துள்ளதால், காரைக்கால் மற்றும் புதுச்சேரியிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சாராயம் கடத்தி வரப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை நடைபெறுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த சூழலில் சீர்காழி தாலுக்கா முழுவதும் பல்வேறு பகுதியில் புதுச்சேரி சாராயம் விற்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சீர்காழியில் தனிப்படை போலீசார் பல்வேறு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

சீர்காழியில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது

சோதனையில்  சீர்காழி அருகே தாடாளன் கோவில், காமராஜபுரம் பகுதியை சேர்ந்த சுமத்திரா (35), மாரிமுத்து (40) ஆகிய இருவரும் வீட்டில் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தெரியவந்தது. அதனை அடுத்து வீட்டில் சோதனை நடத்திய போலீசார் பதுக்கி வைத்திருந்த ஏராளமான கள்ளசாராய பாக்கெட்டுகள் மற்றும் 9,800 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, சாராயம் விற்பனை குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சீர்காழியில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது

ஒருங்கிணைந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால்  22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதித்து 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் டாஸ்மார்க் கடை, மளிகை, காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ள சூழலிலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை தங்கு தடையின்றி நடைபெற்று வருவதாகவும், இதனால் மேலும் கொரோனா வைரஸ் தொற்று நகர்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் ஏழை எளிய மக்களுக்கு எளிதில் பாதிக்கும் நிலை உள்ளதால், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஊரடங்கை சாதகமாக மாற்றி கள்ளச்சாராயம் விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் போலீசாரை வலியுறுத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
ஹேர்கட் பண்ண லேட்டானா அடிப்பீங்களா? - சலூன் கடை உரிமையாளரை வெளுத்து வாங்கும் கொடூர வீடியோ
ஹேர்கட் பண்ண லேட்டானா அடிப்பீங்களா? - சலூன் கடை உரிமையாளரை வெளுத்து வாங்கும் கொடூர வீடியோ
கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என ஏமாற்றி ரூ.26 லட்சம் சுருட்டிய பெண்: கடலூரில் அரங்கேறிய கொடூர மோசடி!
கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என ஏமாற்றி ரூ.26 லட்சம் சுருட்டிய பெண்: கடலூரில் அரங்கேறிய கொடூர மோசடி!

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
TVK Vijay: டெல்லி ஷாக், பனையூர் ஹாப்பி..! திமுகவின் முடிவால் செம்ம குஷியில் தவெக - விஜயின் இலக்கு என்ன?
டெல்லி ஷாக், பனையூர் ஹாப்பி..! திமுகவின் முடிவால் செம்ம குஷியில் தவெக - விஜயின் இலக்கு என்ன?
CM Vijay Cabinet: சிஎம் விஜயின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகள்?
CM விஜயின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகள்?
Annamalai: கட்சியில் இருந்து நீக்கப்பட்டேனா.!! பிராடு அண்ணாமலை ரசிகர்கள் தான் காரணம்- கே.பி.ராமலிங்கம் பகீர் புகார்
கட்சியில் இருந்து நீக்கப்பட்டேனா.!! பிராடு அண்ணாமலை ரசிகர்கள் தான் காரணம்- கே.பி.ராமலிங்கம் பகீர் புகார்
Udhayanidhi Stalin: நம்ம குடும்பமே ஓட்டு போடாம ஏமாத்திட்டாங்க.. ஆதங்கப்பட்ட உதயநிதி!
Udhayanidhi Stalin: நம்ம குடும்பமே ஓட்டு போடாம ஏமாத்திட்டாங்க.. ஆதங்கப்பட்ட உதயநிதி!
காங்கிரஸ் இல்லாமல் இந்தியா கூட்டணியே இல்லை.. திமுகவை விளாசிய மாணிக்கம் தாகூர்!
காங்கிரஸ் இல்லாமல் இந்தியா கூட்டணியே இல்லை.. திமுகவை விளாசிய மாணிக்கம் தாகூர்!
Udhayanidhi TVK: ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்துட்டோம்..! உதயநிதி பேச்சு - ஸ்டிக்கர் பாய்ஸ் என தவெக பதிலடி
ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்துட்டோம்..! உதயநிதி பேச்சு - ஸ்டிக்கர் பாய்ஸ் என தவெக பதிலடி
Toyota Innova Crysta: அப்க்ரேடாகி 4 புதிய வேரியண்ட்களில் இன்னோவா க்ரிஸ்டா.. 7 & 8 சீட்டர் - விலை, அம்சங்கள் என்ன?
அப்க்ரேடாகி 4 புதிய வேரியண்ட்களில் இன்னோவா க்ரிஸ்டா.. 7 & 8 சீட்டர் - விலை, அம்சங்கள் என்ன?
Embed widget