மேலும் அறிய

சீர்காழியில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது

ஊரடங்கை சாதகமாக்கி புதுச்சேரி சாராயம், தமிழக எல்லை பகுதியில் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளது. எல்லையில் போதிய கண்காணிப்பு இல்லாதததே இதற்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

சீர்காழி அருகே வீட்டில் கள்ளச் சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட  இருவர் கைது செய்யப்பட்டதுடன், விற்பனைக்கு வைத்திருந்த கள்ளச்சாராயம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

சீர்காழியில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அனைத்து கடைகளும் மூடப்பட்டு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தி உள்ளது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. திங்கள் முதல் ஒரு வார காலம் மளிகை காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் தடைவிதித்து முழு ஊரடங்கு அறிவித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் திறந்து கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. இதனால் டாஸ்மார் கடை திறக்கும் என எதிர்பார்த்திருந்த மது பிரியர்களுக்கு டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படாததால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

சீர்காழியில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது

இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்கு அருகே மயிலாடுதுறை மாவட்டம் அமைந்துள்ளதால், காரைக்கால் மற்றும் புதுச்சேரியிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சாராயம் கடத்தி வரப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை நடைபெறுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த சூழலில் சீர்காழி தாலுக்கா முழுவதும் பல்வேறு பகுதியில் புதுச்சேரி சாராயம் விற்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சீர்காழியில் தனிப்படை போலீசார் பல்வேறு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

சீர்காழியில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது

சோதனையில்  சீர்காழி அருகே தாடாளன் கோவில், காமராஜபுரம் பகுதியை சேர்ந்த சுமத்திரா (35), மாரிமுத்து (40) ஆகிய இருவரும் வீட்டில் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தெரியவந்தது. அதனை அடுத்து வீட்டில் சோதனை நடத்திய போலீசார் பதுக்கி வைத்திருந்த ஏராளமான கள்ளசாராய பாக்கெட்டுகள் மற்றும் 9,800 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, சாராயம் விற்பனை குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சீர்காழியில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது

ஒருங்கிணைந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால்  22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதித்து 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் டாஸ்மார்க் கடை, மளிகை, காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ள சூழலிலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை தங்கு தடையின்றி நடைபெற்று வருவதாகவும், இதனால் மேலும் கொரோனா வைரஸ் தொற்று நகர்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் ஏழை எளிய மக்களுக்கு எளிதில் பாதிக்கும் நிலை உள்ளதால், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஊரடங்கை சாதகமாக மாற்றி கள்ளச்சாராயம் விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் போலீசாரை வலியுறுத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

"திருமணம் மீறிய உறவு" தந்தையிடம் புகார் கூறியதால் ஆத்திரம் ! பெற்ற மகனையே அடித்துக் கொன்ற தாய்
" ஒன்னும் ஆகாது " பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி அலுவலக உதவியாளர்
" தோழிகள் கண்முன்னே பயங்கரம் " பெப்பர் ஸ்ப்ரே அடித்து இளம்பெண் வெட்டிக் கொலை
ஆட்சியர் தொடங்கி வைத்த மாரத்தான் ஓட்டம்; ஆம்புலன்ஸில் முடிந்த அவலம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
ஆட்சியர் தொடங்கி வைத்த மாரத்தான் ஓட்டம்; ஆம்புலன்ஸில் முடிந்த அவலம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
K Bhagyaraj: நான்-ஸ்டாப் சரவெடி.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாக்யராஜ் படங்கள்..”சமாச்சாரம், குடும்ப கதை”
நான்-ஸ்டாப் சரவெடி.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாக்யராஜ் படங்கள்..”சமாச்சாரம், குடும்ப கதை”
TVK Vijay: திமுக MP, சாராய ஆலை உரிமையாளர் மகனுக்கு தவெகவில் பதவி பார்சல்? CM விஜயின் மாற்றம் இதுவா?
திமுக MP, சாராய ஆலை உரிமையாளர் மகனுக்கு தவெகவில் பதவி பார்சல்? CM விஜயின் மாற்றம் இதுவா?
Bhagyaraj: அன்று குரு பாரதிராஜா.. இன்று சிஷ்யன் பாக்யராஜ்..! ஒரே மாதத்தில் மீளாத துயரத்தில் தமிழ் சினிமா!
Bhagyaraj: அன்று குரு பாரதிராஜா.. இன்று சிஷ்யன் பாக்யராஜ்..! ஒரே மாதத்தில் மீளாத துயரத்தில் தமிழ் சினிமா!
K.Bhagyaraj: திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
Bhagyaraj Movies: காலத்தால் அழிக்கவே முடியாத பாக்யராஜின் 10 படங்கள்! என்னென்ன?
காலத்தால் அழிக்கவே முடியாத பாக்யராஜின் 10 படங்கள்! என்னென்ன?
Embed widget