மேலும் அறிய

சீர்காழியில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது

ஊரடங்கை சாதகமாக்கி புதுச்சேரி சாராயம், தமிழக எல்லை பகுதியில் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளது. எல்லையில் போதிய கண்காணிப்பு இல்லாதததே இதற்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

சீர்காழி அருகே வீட்டில் கள்ளச் சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட  இருவர் கைது செய்யப்பட்டதுடன், விற்பனைக்கு வைத்திருந்த கள்ளச்சாராயம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

சீர்காழியில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அனைத்து கடைகளும் மூடப்பட்டு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தி உள்ளது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. திங்கள் முதல் ஒரு வார காலம் மளிகை காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் தடைவிதித்து முழு ஊரடங்கு அறிவித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் திறந்து கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. இதனால் டாஸ்மார் கடை திறக்கும் என எதிர்பார்த்திருந்த மது பிரியர்களுக்கு டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படாததால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

சீர்காழியில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது

இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்கு அருகே மயிலாடுதுறை மாவட்டம் அமைந்துள்ளதால், காரைக்கால் மற்றும் புதுச்சேரியிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சாராயம் கடத்தி வரப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை நடைபெறுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த சூழலில் சீர்காழி தாலுக்கா முழுவதும் பல்வேறு பகுதியில் புதுச்சேரி சாராயம் விற்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சீர்காழியில் தனிப்படை போலீசார் பல்வேறு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

சீர்காழியில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது

சோதனையில்  சீர்காழி அருகே தாடாளன் கோவில், காமராஜபுரம் பகுதியை சேர்ந்த சுமத்திரா (35), மாரிமுத்து (40) ஆகிய இருவரும் வீட்டில் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தெரியவந்தது. அதனை அடுத்து வீட்டில் சோதனை நடத்திய போலீசார் பதுக்கி வைத்திருந்த ஏராளமான கள்ளசாராய பாக்கெட்டுகள் மற்றும் 9,800 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, சாராயம் விற்பனை குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சீர்காழியில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது

ஒருங்கிணைந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால்  22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதித்து 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் டாஸ்மார்க் கடை, மளிகை, காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ள சூழலிலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை தங்கு தடையின்றி நடைபெற்று வருவதாகவும், இதனால் மேலும் கொரோனா வைரஸ் தொற்று நகர்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் ஏழை எளிய மக்களுக்கு எளிதில் பாதிக்கும் நிலை உள்ளதால், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஊரடங்கை சாதகமாக மாற்றி கள்ளச்சாராயம் விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் போலீசாரை வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
CM Stalin:
"ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
RahulGandhi On EVM : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
Embed widget