மேலும் அறிய

திருவாரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 33 சவரன் தங்க நகை 1.15 லட்சம்  திருட்டு

புலிவலம் பகுதியில் தொடர்ந்து திருட்டு நடைபெற்று வருவதால் போலீசார் ரோந்து பணியினை தீவிரப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

திருவாரூர் அருகே கூட்டுறவு நகரை சேர்ந்தவர் வடிவேல். இவர் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா எருக்காட்டூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் கவிதாவின் தந்தை இயற்கை எய்தியதை தொடர்ந்து வேதாரண்யம் அருகே உள்ள கரியாபட்டினத்திற்க்கு கடந்த 7ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வடிவேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது, இதனையடுத்து தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் வீட்டில் சோதனை செய்த போது வீட்டில் இருந்த 25 சவரன் தங்க நகை மற்றும் 25 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரிய வந்துள்ளது. 

திருவாரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 33 சவரன் தங்க நகை 1.15 லட்சம்  திருட்டு
 
இதனையடுத்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கபபட்டு திருட்டு நடந்த இடத்தில் பதிவான கை ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். இதேபோன்று திருவாரூர் அருகே கல்லடி தோப்பு பகுதியில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவாரூர் அருகே புலிவலம் கல்லடி தோப்பு தெருவை சேர்ந்தவர் நாகராஜ். சாக்கு வியாபாரியான இவர் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் நாகராஜ் தனது மனைவி பரமேஸ்வரி மற்றும் மகன்கள் நவீன்குமார், விக்னேஷ் ஆகியோருடன் வீட்டில் தூங்கியுள்ளனர். மறுநாள் காலை கண் விழித்து பார்த்தபோது வீட்டின் அறையில் பீரோவை உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 8 சவரன் நகை 90 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து நாகராஜன் திருவாரூர் தாலுகா காவல்துறையினருக்கு புகார் கொடுத்தார். அதன்பேரில் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருட்டுக்கு காரணமான மர்ம நபர்களை தேடி வருகின்றனர். புலிவலம் பகுதியில் தொடர்ந்து திருட்டு நடைபெற்று வருவதால் போலீசார் ரோந்து பணியினை தீவிரப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருவாரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 33 சவரன் தங்க நகை 1.15 லட்சம்  திருட்டு
 
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  காவல்துறையினர் நகர் பகுதிகளில் மட்டும் போன்ற ரோந்து பணிகளில் ஈடுபடாமல் கிராமப்புறங்களிலும் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் காவல் துறையினருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி கொள்ளையர்களை காவல் துறையினர் விரைந்து பிடித்து தங்களது நகை மற்றும் பணத்தை மீட்டுத் தருமாறு காவல் துறையினருக்கு பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
Embed widget