மேலும் அறிய

திருவாரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 33 சவரன் தங்க நகை 1.15 லட்சம்  திருட்டு

புலிவலம் பகுதியில் தொடர்ந்து திருட்டு நடைபெற்று வருவதால் போலீசார் ரோந்து பணியினை தீவிரப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

திருவாரூர் அருகே கூட்டுறவு நகரை சேர்ந்தவர் வடிவேல். இவர் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா எருக்காட்டூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் கவிதாவின் தந்தை இயற்கை எய்தியதை தொடர்ந்து வேதாரண்யம் அருகே உள்ள கரியாபட்டினத்திற்க்கு கடந்த 7ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வடிவேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது, இதனையடுத்து தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் வீட்டில் சோதனை செய்த போது வீட்டில் இருந்த 25 சவரன் தங்க நகை மற்றும் 25 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரிய வந்துள்ளது. 

திருவாரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 33 சவரன் தங்க நகை 1.15 லட்சம்  திருட்டு
 
இதனையடுத்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கபபட்டு திருட்டு நடந்த இடத்தில் பதிவான கை ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். இதேபோன்று திருவாரூர் அருகே கல்லடி தோப்பு பகுதியில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவாரூர் அருகே புலிவலம் கல்லடி தோப்பு தெருவை சேர்ந்தவர் நாகராஜ். சாக்கு வியாபாரியான இவர் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் நாகராஜ் தனது மனைவி பரமேஸ்வரி மற்றும் மகன்கள் நவீன்குமார், விக்னேஷ் ஆகியோருடன் வீட்டில் தூங்கியுள்ளனர். மறுநாள் காலை கண் விழித்து பார்த்தபோது வீட்டின் அறையில் பீரோவை உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 8 சவரன் நகை 90 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து நாகராஜன் திருவாரூர் தாலுகா காவல்துறையினருக்கு புகார் கொடுத்தார். அதன்பேரில் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருட்டுக்கு காரணமான மர்ம நபர்களை தேடி வருகின்றனர். புலிவலம் பகுதியில் தொடர்ந்து திருட்டு நடைபெற்று வருவதால் போலீசார் ரோந்து பணியினை தீவிரப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருவாரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 33 சவரன் தங்க நகை 1.15 லட்சம்  திருட்டு
 
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  காவல்துறையினர் நகர் பகுதிகளில் மட்டும் போன்ற ரோந்து பணிகளில் ஈடுபடாமல் கிராமப்புறங்களிலும் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் காவல் துறையினருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி கொள்ளையர்களை காவல் துறையினர் விரைந்து பிடித்து தங்களது நகை மற்றும் பணத்தை மீட்டுத் தருமாறு காவல் துறையினருக்கு பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget