மேலும் அறிய

மதுரையில் கஞ்சா கும்பல் சிக்கியது; துப்பாக்கி, பணம் பறிமுதல்

கீரைத்துறை பகுதியில் 190கிலோ கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் மூவர் சிக்கினர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் டாஸ்மாக் கடைகள் மூடியிருந்ததால் போதைக்கு அடிமையான நபர்கள் யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்ச ஆரம்பித்தனர். இதனால் பலரது மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது. அதே போல் மோட்டார் சைக்கிளில் சென்று குட்கா - பான்மசாலா போன்ற பொருட்களை டோர் டெலிவரி செய்வது. தூக்க மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்த விற்பனை செய்வது. பதுக்கி வைத்த டாஸ்மாக் பாட்டிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதென,  விநோத போதை பழக்கமும், குற்றச்சம்பவங்களும் அதிகரித்தது.
 

மதுரையில் கஞ்சா கும்பல் சிக்கியது; துப்பாக்கி, பணம் பறிமுதல்
 
 
மதுரை மத்திய சிறையில் காவலரே கைதுக்கு கஞ்சா சப்ளை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை கீரைத்துறை, பெருங்குடி, அவனியாபுரம் ஆகிய பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடப்பதாக அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் மதுரை பெருங்குடி பகுதியில் வந்த ஷேர் ஆட்டோ ஒன்றை மடக்கிய காவல்துறையினர் அதனை சோதனையிட்டபோது ஆட்டோவில் சுமார் 60 கிலோ கஞ்சா மற்றும் துப்பாக்கி, 5 தோட்டா, ஒரு லட்சம் பணம் உள்ளிட்டவை இருந்தது.
 

மதுரையில் கஞ்சா கும்பல் சிக்கியது; துப்பாக்கி, பணம் பறிமுதல்
 
 
அவர்கள் காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த பூமிநாதன், அவரது சகோதரர் சோலை, வில்லாபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மாரிமுத்து ஆகிய மூவரையும் அவனியாபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அருண்குமாரின் மாமா  கீரத்துரை முனியசாமி மூலம் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்து சோதனையில் 130 கஞ்சா பிடிபட்டது. மொத்தம் 190 கிலோ கஞ்சாவை பிடித்த காவல்துறையின்  கஞ்சா விற்பனையில் யார், யார் சம்மந்தப்பட்டுள்ளனர் என்று விசாரணை செய்துவருகின்றனர்.
 
 

மதுரையில் கஞ்சா கும்பல் சிக்கியது; துப்பாக்கி, பணம் பறிமுதல்
 
மேலும் இது குறித்து காவல்துறையினர் சிலர்...," பூமிநாதனின் மாமா ரவுடி வெள்ளை காளிக்கு தெரிந்த சக்கிமங்கலம் சதீஷ், அவரது மைத்துனர் பிரகாஷ் மூலம் கஞ்சா மொத்தமாக வாங்கி விற்று வந்துள்ளனர். இது தொடர்பாகவும் தனி விசாரணை செய்கிறோம். குற்றவாளி அருண்குமார், சதீஷை தேடிவருகிறோம். அவர்களை பிடித்த பின்னர் கஞ்சா விற்பனை கும்பல் விரைவில் பிடிபடும்” என்றனர்
 
 
 
 
துப்பாக்கி, கஞ்சா உள்ளிட்டவைகளை கைபற்றி குற்றவாளிகளை கைது செய்தது மதுரையி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் காவல்துறையினரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, துணைகமிஷனர் ராஜசேகரனும் பாரட்டினர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget