மேலும் அறிய

டார்ச்சர் செய்த தெரு நாயை ஆள் வைத்து கொலை செய்த முதியவர் உள்ளிட்ட இருவர் கைது

கோவையில் சாலையில் செல்லும் போது தொடர்ந்து டார்ச்சர் செய்த தெரு நாயை ஆள் வைத்து கொலை செய்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை பீளமேடு ரங்க விலாஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம். அப்பகுதியில் அவர் தினமும் வந்து செல்லும் போது அங்குள்ள தெரு நாய் ஒன்று, அவரை அடிக்கடி குரைத்து, முறைத்து மிரட்டி வந்துள்ளது. இதனால் பாலசுந்தரம், நாய் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். அங்குள்ளவர்களிடம் நாய் மீது நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை முறையிட்டுள்ளார். ஆனால், நாயை என்ன செய்வது என யாரும் பாலசுந்திரத்தின் புகாரை கண்டுகொள்ளவில்லை.

டார்ச்சர் செய்த தெரு நாயை ஆள் வைத்து கொலை செய்த முதியவர் உள்ளிட்ட இருவர் கைது
 
பொறுத்திருந்து பொறுமை இழந்த பாலசுந்தரம், தாமே கோதாவில் இறங்க முடிவு செய்தார். தனக்கு தொடர்ந்து டார்ச்சர் அளித்து வரும் தெரு நாயை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். ஆள் வைத்து நாயை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அதற்கு ஏற்ற நபரை தேடியுள்ளார். அப்போது ஒடிசாவை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மிதுன் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. நாயை தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டு, அதை ஒரு மரத்தில் கட்டி வைத்துள்ளனர். பின்னர் அதன் கழுத்தை நெறித்தும், மரக்கட்டையால் அடித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், உடனே அது குறித்து மாவட்ட விலங்குகள் நல அதிகாரி பிரதீப்பிற்கு புகார் அளித்துள்ளனர்.

டார்ச்சர் செய்த தெரு நாயை ஆள் வைத்து கொலை செய்த முதியவர் உள்ளிட்ட இருவர் கைது
 
பிரதீப் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீசார், நாயை கொலை செய்த வழக்கில் பாலசுந்தரம், மிதுன் ஆகிய இருவர் மீதும் விலங்குகளை கொல்லுதல் மற்றும் விலங்குகள் வன்கொடுமை சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் பொள்ளாச்சி சிறையில் அடைத்தனர். 
இதுகுறித்து கோவை மாவட்ட விலங்குகள் நல அதிகாரி பிரதீப் கூறுகையில், "அப்பகுதியில் இருந்த வீடில்லாத தெரு நாயினை பாலசுந்தரத்திற்கு பிடிக்கவில்லை. அதனை கொலை செய்ய வேண்டும் என பத்து நாட்களுக்கு முன்பே அப்பகுதியில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். அதனை மற்றவர்கள் ஏற்காததால் மிதுனுடன் இணைந்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று நாய்க்கு உடல்கூராய்வு நடத்தப்பட்டது" என்று கூறினார்.
 

தலைப்பு செய்திகள்

நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
ஒரு மாத காத்திருப்பு... கண்ணீர் மல்கிய கிராமங்கள்: சவுதியில் பலியான சீர்காழி மீனவர்களின் உடல்கள் சொந்த ஊர் வந்தடைந்தன!
ஒரு மாத காத்திருப்பு... கண்ணீர் மல்கிய கிராமங்கள்: சவுதியில் பலியான சீர்காழி மீனவர்களின் உடல்கள் சொந்த ஊர் வந்தடைந்தன!
பெற்றோருடன் இரவு உணவு… காலையில் சடலம்! ஜிப்மர் இளம் பெண் மருத்துவர் உயிரிழப்பு
பெற்றோருடன் இரவு உணவு… காலையில் சடலம்! ஜிப்மர் இளம் பெண் மருத்துவர் உயிரிழப்பு
"குடும்பம் நடத்த வா " மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் 3 பேரை கத்தியால் சரித்த மருமகன்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Morning Breakfast Scheme: காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Karuppu Muruganandam : 'பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்’ நயினார் அதிரடி..!
Karuppu Muruganandam : 'பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்’ நயினார் அதிரடி..!
Durai Vaiko : மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
25,000 வீடுகள் கட்ட அனுமதி வந்தாச்சு.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு - விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.! 25,000 வீடுகள் கட்ட அரசு நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி?
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
TASMAC Bars : டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
Embed widget