மேலும் அறிய

டார்ச்சர் செய்த தெரு நாயை ஆள் வைத்து கொலை செய்த முதியவர் உள்ளிட்ட இருவர் கைது

கோவையில் சாலையில் செல்லும் போது தொடர்ந்து டார்ச்சர் செய்த தெரு நாயை ஆள் வைத்து கொலை செய்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை பீளமேடு ரங்க விலாஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம். அப்பகுதியில் அவர் தினமும் வந்து செல்லும் போது அங்குள்ள தெரு நாய் ஒன்று, அவரை அடிக்கடி குரைத்து, முறைத்து மிரட்டி வந்துள்ளது. இதனால் பாலசுந்தரம், நாய் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். அங்குள்ளவர்களிடம் நாய் மீது நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை முறையிட்டுள்ளார். ஆனால், நாயை என்ன செய்வது என யாரும் பாலசுந்திரத்தின் புகாரை கண்டுகொள்ளவில்லை.

டார்ச்சர் செய்த தெரு நாயை ஆள் வைத்து கொலை செய்த முதியவர் உள்ளிட்ட இருவர் கைது
 
பொறுத்திருந்து பொறுமை இழந்த பாலசுந்தரம், தாமே கோதாவில் இறங்க முடிவு செய்தார். தனக்கு தொடர்ந்து டார்ச்சர் அளித்து வரும் தெரு நாயை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். ஆள் வைத்து நாயை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அதற்கு ஏற்ற நபரை தேடியுள்ளார். அப்போது ஒடிசாவை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மிதுன் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. நாயை தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டு, அதை ஒரு மரத்தில் கட்டி வைத்துள்ளனர். பின்னர் அதன் கழுத்தை நெறித்தும், மரக்கட்டையால் அடித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், உடனே அது குறித்து மாவட்ட விலங்குகள் நல அதிகாரி பிரதீப்பிற்கு புகார் அளித்துள்ளனர்.

டார்ச்சர் செய்த தெரு நாயை ஆள் வைத்து கொலை செய்த முதியவர் உள்ளிட்ட இருவர் கைது
 
பிரதீப் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீசார், நாயை கொலை செய்த வழக்கில் பாலசுந்தரம், மிதுன் ஆகிய இருவர் மீதும் விலங்குகளை கொல்லுதல் மற்றும் விலங்குகள் வன்கொடுமை சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் பொள்ளாச்சி சிறையில் அடைத்தனர். 
இதுகுறித்து கோவை மாவட்ட விலங்குகள் நல அதிகாரி பிரதீப் கூறுகையில், "அப்பகுதியில் இருந்த வீடில்லாத தெரு நாயினை பாலசுந்தரத்திற்கு பிடிக்கவில்லை. அதனை கொலை செய்ய வேண்டும் என பத்து நாட்களுக்கு முன்பே அப்பகுதியில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். அதனை மற்றவர்கள் ஏற்காததால் மிதுனுடன் இணைந்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று நாய்க்கு உடல்கூராய்வு நடத்தப்பட்டது" என்று கூறினார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UPSC Result: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 1016 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
UPSC Result: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 1016 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
Baba Ramdev SC:  ”நீங்க ஒன்னும் அப்பாவி கிடையாது” - பாபா ராம்தேவை வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்
Baba Ramdev SC: ”நீங்க ஒன்னும் அப்பாவி கிடையாது” - பாபா ராம்தேவை வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்
Breaking Tamil LIVE: தவறான விளம்பரம் : மன்னிப்பு கோரினார் யோகா குரு ராம்தேவ்
தவறான விளம்பரம் : மன்னிப்பு கோரினார் யோகா குரு ராம்தேவ்
Lok Sabha Election: மக்களவைத் தேர்தல்; ஏன்? எப்படி? எதற்கு? இட ஒதுக்கீடு, எம்.பி.க்கள் எண்ணிக்கை- ஓர் அறிமுகம்!
மக்களவைத் தேர்தல்; ஏன்? எப்படி? எதற்கு? இட ஒதுக்கீடு, எம்.பி.க்கள் எண்ணிக்கை- ஓர் அறிமுகம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

PTR about ADMK  : ”பாஜகவுடன் கூட்டணி ஏன்? EPS போட்ட ப்ளான்” உடைத்து பேசிய PTREPS vs Annamalai  : ”கண்டுபிடி! நீ POLICE தான... தம்பி நிறைய பேர பார்த்தாச்சு” அ.மலைக்கு EPS பதிலடிOPS JP Nadda :  நட்டாவுடன் ஓபிஎஸ் ENTRY ”வருங்கால மத்திய அமைச்சரே” அதிர்ந்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷம்Sellur raju :  ”திமுக-அதிமுக தான் போட்டி பாஜக சொதப்பிடும்” செல்லூர் ராஜூ தாக்கு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UPSC Result: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 1016 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
UPSC Result: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 1016 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
Baba Ramdev SC:  ”நீங்க ஒன்னும் அப்பாவி கிடையாது” - பாபா ராம்தேவை வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்
Baba Ramdev SC: ”நீங்க ஒன்னும் அப்பாவி கிடையாது” - பாபா ராம்தேவை வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்
Breaking Tamil LIVE: தவறான விளம்பரம் : மன்னிப்பு கோரினார் யோகா குரு ராம்தேவ்
தவறான விளம்பரம் : மன்னிப்பு கோரினார் யோகா குரு ராம்தேவ்
Lok Sabha Election: மக்களவைத் தேர்தல்; ஏன்? எப்படி? எதற்கு? இட ஒதுக்கீடு, எம்.பி.க்கள் எண்ணிக்கை- ஓர் அறிமுகம்!
மக்களவைத் தேர்தல்; ஏன்? எப்படி? எதற்கு? இட ஒதுக்கீடு, எம்.பி.க்கள் எண்ணிக்கை- ஓர் அறிமுகம்!
சீனாவிடம் பேசக் கூட வீரன் நரேந்திர மோடிக்கு தைரியம் இல்லை - கனிமொழியின் அனல் பறக்கும் பிரச்சாரம்
சீனாவிடம் பேசக் கூட வீரன் நரேந்திர மோடிக்கு தைரியம் இல்லை - கனிமொழியின் அனல் பறக்கும் பிரச்சாரம்
Vishal:
"பேச்சு, செயல்பாடு, பொறுமை" - அண்ணாமலையை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஷால்!
Leopard in Thanjavur TN : 15 நாட்களாக சிக்காமல் போக்குகாட்டும் சிறுத்தை : தற்போது எங்கே உள்ளது?
15 நாட்களாக சிக்காமல் போக்குகாட்டும் சிறுத்தை : தற்போது எங்கே உள்ளது?
Income Tax Return: உங்க வருமானத்துக்கான வரியை தவிர்க்கணுமா? அப்ப இந்த 5 ஐடியாவ ஃபாலோ பண்ணுங்க..!
உங்க வருமானத்துக்கான வரியை தவிர்க்கணுமா? அப்ப இந்த 5 ஐடியாவ ஃபாலோ பண்ணுங்க..!
Embed widget