மேலும் அறிய

மயிலாடுதுறை: இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள்.. 50 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டி கடத்திய புகாரில் விசாரணை..!

சீர்காழி அருகே தென்பாதியில் 50 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு சீர்காழி, மயிலாடுதுறை நெடுஞ்சாலையோரம் உள்ள அரசுக்கு சொந்தமான 50 ஆண்டுகள் பழமையான நான்கு புளிய மரங்கள் இடையூறாக உள்ளது என்று, அதனை வெட்டி எடுத்து அப்புறப்படுத்தும் பணியில் சிலர் ஈடுபட்டனர்.  


மயிலாடுதுறை: இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள்.. 50 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டி கடத்திய புகாரில் விசாரணை..!

மூன்று மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட நிலையில் பலன் தரும் உயிர் மரங்கள் வெட்டபடுவதை அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் அதனை  தடுத்து நிறுத்தி வாக்குவாதம் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி வட்டாட்சியர் சண்முகம், காவல் துணை கண்காணிப்பாளர் ஜெலாமேக் மரம் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து சமுக ஆர்வலர்கள் மரங்கள் வெட்டப்பட்டது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழி வட்டாட்சியரிடம் சண்முகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். 


மயிலாடுதுறை: இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள்.. 50 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டி கடத்திய புகாரில் விசாரணை..!

மனுவை பெற்றுக்கொண்டு சீர்காழி வட்டாட்சியர் சண்முகம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனாவில் உயிரிழந்த நடராஜன் என்பவரின் பெயரில் போலி ஆவணங்களை தயார் செய்து சீர்காழி மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான 50 ஆண்டுகள் பழமையான புளிய மரங்களை வெட்டி வாகனத்தில் கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. மேலும் போலி ஆவணம் தயார் செய்தது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.


மயிலாடுதுறை: இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள்.. 50 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டி கடத்திய புகாரில் விசாரணை..!

சிதம்பரம்- நாகப்பட்டினம் நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருவதால், சீர்காழி புறவழி பகுதியில் சாலை விரிவாக்க பணிகளுக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. இதனால் சாலையோரம் மரம் வெட்டுவதை கண்ட பலரும் சாலை விரிவாக்க பணிக்காக தான் மரங்கள் வெட்டப்படுவதாக எண்ணி அதுகுறித்து விசாரிக்காமல் கடந்து சென்றதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சில சமூக விரோதிகள் அரசுக்கு சொந்தமான சாலையோர மரத்தை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வெட்டி கடத்த முயற்சித்த சம்பவம் சீர்காழி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மயிலாடுதுறை: இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள்.. 50 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டி கடத்திய புகாரில் விசாரணை..!

மேலும் சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்கள் அனைத்தும் நெடுஞ்சாலை துறையினரால் வெட்டப்பட்டதா, அல்லது நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெறுவதை அறிந்து சமூக விரோதிகள் கள்ளத்தனமாக மரங்களை வெட்டி கடத்திய உள்ளார்களா என விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும், மேலும் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் நீதிமன்ற உத்தரவின்படி மாற்றும் மரங்கள் நடப்பட்டு உள்ளதா என்றும், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சீர்காழி பகுதி சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இலவச லேப்டாப்பில் ஸ்டாலின் படத்தை அழித்தவர்களுக்கு செக்.! வாரன்டி இல்லை- மாணவர்களுக்கு ஷாக் தகவல்
இலவச லேப்டாப்பில் ஸ்டாலின் படத்தை அழித்தவர்களுக்கு செக்.! வாரன்டி இல்லை- மாணவர்களுக்கு ஷாக் தகவல்
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
Suzuki e-Access: சுசூகியின் மின்சார ஸ்கூட்டர் ரெடி.. யானை விலைக்கு சோளப்பொறி ரேஞ்சா? இந்த வண்டி தேறுமா?
Suzuki e-Access: சுசூகியின் மின்சார ஸ்கூட்டர் ரெடி.. யானை விலைக்கு சோளப்பொறி ரேஞ்சா? இந்த வண்டி தேறுமா?
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இலவச லேப்டாப்பில் ஸ்டாலின் படத்தை அழித்தவர்களுக்கு செக்.! வாரன்டி இல்லை- மாணவர்களுக்கு ஷாக் தகவல்
இலவச லேப்டாப்பில் ஸ்டாலின் படத்தை அழித்தவர்களுக்கு செக்.! வாரன்டி இல்லை- மாணவர்களுக்கு ஷாக் தகவல்
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
Suzuki e-Access: சுசூகியின் மின்சார ஸ்கூட்டர் ரெடி.. யானை விலைக்கு சோளப்பொறி ரேஞ்சா? இந்த வண்டி தேறுமா?
Suzuki e-Access: சுசூகியின் மின்சார ஸ்கூட்டர் ரெடி.. யானை விலைக்கு சோளப்பொறி ரேஞ்சா? இந்த வண்டி தேறுமா?
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Porur to Vadapalani Metro Train: நாளை முதல் வடபழனி டூ போரூர் வரை மெட்ரோ ரயில்.! பொதுமக்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ் வந்தாச்சு...
நாளை முதல் வடபழனி டூ போரூர் வரை மெட்ரோ ரயில்.! பொதுமக்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ் வந்தாச்சு...
TN Roundup: ஏறுமுகத்தில் தங்கம், மீனவர்கள் மாயம், பராசக்தி ரிலீஸ், அண்ணாமலை அதிரடி - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஏறுமுகத்தில் தங்கம், மீனவர்கள் மாயம், பராசக்தி ரிலீஸ், அண்ணாமலை அதிரடி - தமிழகத்தில் இதுவரை
TASMAC Holiday: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு
Embed widget