மேலும் அறிய

மயிலாடுதுறை: இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள்.. 50 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டி கடத்திய புகாரில் விசாரணை..!

சீர்காழி அருகே தென்பாதியில் 50 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு சீர்காழி, மயிலாடுதுறை நெடுஞ்சாலையோரம் உள்ள அரசுக்கு சொந்தமான 50 ஆண்டுகள் பழமையான நான்கு புளிய மரங்கள் இடையூறாக உள்ளது என்று, அதனை வெட்டி எடுத்து அப்புறப்படுத்தும் பணியில் சிலர் ஈடுபட்டனர்.  


மயிலாடுதுறை: இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள்.. 50 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டி கடத்திய புகாரில் விசாரணை..!

மூன்று மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட நிலையில் பலன் தரும் உயிர் மரங்கள் வெட்டபடுவதை அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் அதனை  தடுத்து நிறுத்தி வாக்குவாதம் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி வட்டாட்சியர் சண்முகம், காவல் துணை கண்காணிப்பாளர் ஜெலாமேக் மரம் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து சமுக ஆர்வலர்கள் மரங்கள் வெட்டப்பட்டது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழி வட்டாட்சியரிடம் சண்முகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். 


மயிலாடுதுறை: இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள்.. 50 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டி கடத்திய புகாரில் விசாரணை..!

மனுவை பெற்றுக்கொண்டு சீர்காழி வட்டாட்சியர் சண்முகம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனாவில் உயிரிழந்த நடராஜன் என்பவரின் பெயரில் போலி ஆவணங்களை தயார் செய்து சீர்காழி மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான 50 ஆண்டுகள் பழமையான புளிய மரங்களை வெட்டி வாகனத்தில் கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. மேலும் போலி ஆவணம் தயார் செய்தது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.


மயிலாடுதுறை: இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள்.. 50 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டி கடத்திய புகாரில் விசாரணை..!

சிதம்பரம்- நாகப்பட்டினம் நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருவதால், சீர்காழி புறவழி பகுதியில் சாலை விரிவாக்க பணிகளுக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. இதனால் சாலையோரம் மரம் வெட்டுவதை கண்ட பலரும் சாலை விரிவாக்க பணிக்காக தான் மரங்கள் வெட்டப்படுவதாக எண்ணி அதுகுறித்து விசாரிக்காமல் கடந்து சென்றதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சில சமூக விரோதிகள் அரசுக்கு சொந்தமான சாலையோர மரத்தை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வெட்டி கடத்த முயற்சித்த சம்பவம் சீர்காழி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மயிலாடுதுறை: இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள்.. 50 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டி கடத்திய புகாரில் விசாரணை..!

மேலும் சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்கள் அனைத்தும் நெடுஞ்சாலை துறையினரால் வெட்டப்பட்டதா, அல்லது நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெறுவதை அறிந்து சமூக விரோதிகள் கள்ளத்தனமாக மரங்களை வெட்டி கடத்திய உள்ளார்களா என விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும், மேலும் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் நீதிமன்ற உத்தரவின்படி மாற்றும் மரங்கள் நடப்பட்டு உள்ளதா என்றும், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சீர்காழி பகுதி சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget