மேலும் அறிய

சீர்காழி அருகே டாஸ்மார்க் கடையை உடைத்து மதுபானங்கள் திருட்டு

சீர்காழி அருகே அரசு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு. மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே அரசு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு. மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே டாஸ்மார்க் கடையை உடைத்து மதுபானங்கள் திருட்டு

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு முழு ஊரடங்கு உத்தரவை தமிழகத்தில் பிறப்பித்துள்ளது. இதனால் மருந்தகங்கள், பால் கடைகள், உணவகங்கள் தவிர்த்து அனைத்து கடைகளும் இயங்க தடை விதித்துள்ளது. குறிப்பாக அரசு மதுபான கடை யான டாஸ்மார்க் கடை இயங்கவும் தடை உள்ளது.

சீர்காழி அருகே டாஸ்மார்க் கடையை உடைத்து மதுபானங்கள் திருட்டு

இதனால் கடந்த சில வாரங்களாக மதுபோதைக்கு அடிமையான மது பிரியர்கள் அது கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் தங்களை எவ்வாறு ஆவது போதைக்கு உட்படுத்திக் கொள்ள மதுப் பிரியர்கள் பல்வேறு தவறான வழிகளை கையாண்டு வருகின்றனர். மேலும் இதனை பயன்படுத்திக் கொண்டு பல கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. 

சீர்காழி அருகே டாஸ்மார்க் கடையை உடைத்து மதுபானங்கள் திருட்டு

எல்லாவற்றுக்கும் மேலாக மது போதைக்காக பெயிண்டில் கலக்கப்படும் வேதிப்பொருள், ஃபேவிகால் உள்ளிட்டவற்றை உட்கொண்டு சிலர் இறக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. மேலும் அரசு மதுபான கடைகளான டாஸ்மார்க் கடைகளில் சுவர்களை ஓட்டை போட்டு, கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் மது பாட்டில்களை திருட்டில் ஈடுபடும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. 

சீர்காழி அருகே டாஸ்மார்க் கடையை உடைத்து மதுபானங்கள் திருட்டு

 

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கடவாசல் கிராமத்தில் இயங்கி வந்த அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அங்கு வைத்திருந்த உயர்ரக மது பானங்கள் 550 பாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து கடை மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 550 உயர்ரக மதுபான பாட்டில்களை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையின் போது அனைத்து அரசு மதுபான கடையான டாஸ்மார்க்குகளில்  உள்ள அனைத்து மது பானங்களையும் காவல்துறை பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது.  ஆனால் தற்போது அந்த முறையை கடைபிடிக்காமல் பல்வேறு மதுபான கடைகளில் மது பானங்களுக்கு உரிய பாதுகாப்பு இன்றி காணாமல் போகும் சம்பவம் நடந்தேறி வருகிறது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டு வருகிறது. மேலும் மற்ற மதுபான கடைகளில் உள்ள மதுபாட்டில்களை சென்றமுறை செய்தது போல், பொதுவாக ஒரு இடத்தில் வைத்து பாதுகாத்து மக்கள் வரிப்பணத்தை வீணாகாமல் காக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

 

தலைப்பு செய்திகள்

லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget