மேலும் அறிய

சீர்காழி அருகே டாஸ்மார்க் கடையை உடைத்து மதுபானங்கள் திருட்டு

சீர்காழி அருகே அரசு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு. மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே அரசு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு. மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே டாஸ்மார்க் கடையை உடைத்து மதுபானங்கள் திருட்டு

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு முழு ஊரடங்கு உத்தரவை தமிழகத்தில் பிறப்பித்துள்ளது. இதனால் மருந்தகங்கள், பால் கடைகள், உணவகங்கள் தவிர்த்து அனைத்து கடைகளும் இயங்க தடை விதித்துள்ளது. குறிப்பாக அரசு மதுபான கடை யான டாஸ்மார்க் கடை இயங்கவும் தடை உள்ளது.

சீர்காழி அருகே டாஸ்மார்க் கடையை உடைத்து மதுபானங்கள் திருட்டு

இதனால் கடந்த சில வாரங்களாக மதுபோதைக்கு அடிமையான மது பிரியர்கள் அது கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் தங்களை எவ்வாறு ஆவது போதைக்கு உட்படுத்திக் கொள்ள மதுப் பிரியர்கள் பல்வேறு தவறான வழிகளை கையாண்டு வருகின்றனர். மேலும் இதனை பயன்படுத்திக் கொண்டு பல கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. 

சீர்காழி அருகே டாஸ்மார்க் கடையை உடைத்து மதுபானங்கள் திருட்டு

எல்லாவற்றுக்கும் மேலாக மது போதைக்காக பெயிண்டில் கலக்கப்படும் வேதிப்பொருள், ஃபேவிகால் உள்ளிட்டவற்றை உட்கொண்டு சிலர் இறக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. மேலும் அரசு மதுபான கடைகளான டாஸ்மார்க் கடைகளில் சுவர்களை ஓட்டை போட்டு, கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் மது பாட்டில்களை திருட்டில் ஈடுபடும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. 

சீர்காழி அருகே டாஸ்மார்க் கடையை உடைத்து மதுபானங்கள் திருட்டு

 

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கடவாசல் கிராமத்தில் இயங்கி வந்த அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அங்கு வைத்திருந்த உயர்ரக மது பானங்கள் 550 பாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து கடை மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 550 உயர்ரக மதுபான பாட்டில்களை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையின் போது அனைத்து அரசு மதுபான கடையான டாஸ்மார்க்குகளில்  உள்ள அனைத்து மது பானங்களையும் காவல்துறை பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது.  ஆனால் தற்போது அந்த முறையை கடைபிடிக்காமல் பல்வேறு மதுபான கடைகளில் மது பானங்களுக்கு உரிய பாதுகாப்பு இன்றி காணாமல் போகும் சம்பவம் நடந்தேறி வருகிறது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டு வருகிறது. மேலும் மற்ற மதுபான கடைகளில் உள்ள மதுபாட்டில்களை சென்றமுறை செய்தது போல், பொதுவாக ஒரு இடத்தில் வைத்து பாதுகாத்து மக்கள் வரிப்பணத்தை வீணாகாமல் காக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

 

தலைப்பு செய்திகள்

பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Volkswagen Cheapest SUV: நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
DMK vs TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Embed widget