மேலும் அறிய

Crime: சம்பள உயர்வுக்கு இடையூறு... சப்-இன்ஸ்பெக்டரை அடித்துக் கொன்ற சக போலீஸ்காரர்.. பொதுமக்கள் அதிர்ச்சி 

கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பசவராஜ் மற்றும் பங்கஜ் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இந்த சம்பவத்தில் பசவராஜ் கார்க்கிற்கு ரத்தகாயம் ஏற்பட்டது.

மகாராஷ்ட்ராவில் சம்பள உயர்வுக்கு இடையூறாக இருந்த காவல் உதவி ஆய்வாளர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டத்தில் கல்யாண் ரெயில்வே போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு காவல் உதவி ஆய்வாளராக பசவராஜ் கார்க் என்பவர் பணிபுரிந்து வந்தார்.  அதே காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பங்கஜ் யாதவ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பசவராஜ் மற்றும் பங்கஜ் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இந்த சம்பவத்தில் பசவராஜ் கார்க்கிற்கு ரத்தகாயம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பங்கஜ் யாதவ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தார். இதனடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பங்கஜ் யாதவுக்கு சம்பள உயர்வு கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த அவர், சம்பள உயர்வு தொடர்பாக அதிகாரிகளை சந்திக்க எவ்வளவோ முயற்சி செய்துள்ளார். 

ஆனால் அதிகாரிகள் பங்கஜை சந்திக்காததால், அதற்கு காரணம் காவல் உதவி ஆய்வாளர் பசவராஜ் கார்க் என நினைத்து அவர் மீது கோபத்தில் இருந்துள்ளார். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு 8.40 மணி அளவில் கல்யாணில் உள்ள ரெயில்வே போலீஸ் தங்குமிடத்தில் பசவராஜ் கார்க்கை பங்கஜ் யாதவ் சந்தித்துள்ளார். அப்போது ஊதிய உயர்வை தடுத்து நிறுத்தியது தொடர்பாக இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் டென்ஷனான பங்கஜ் அங்கு கிடந்த உருட்டு கட்டையால் பசவராஜ் தலையில் பல முறை ஓங்கி அடித்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார்.

சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த சக போலீசார் பலத்த காயமடைந்த பசவராஜ் கார்க்கை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை  பசவராஜ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கொல்சேவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் பங்கஜ் யாதவை தீவிரமாக தேடி வந்தனர்.

இதில் அவர் ராய்காட் மாவட்டம் பென் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற  போலீசார் பங்கஜ் ராஜை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget