மேலும் அறிய

திரில்லர் படங்களை மிஞ்சும் பரபரப்பு... பொம்மை உடல், நிஜ பாம்பை வைத்து கொலை வழக்கு விசாரணை!

உத்ராவை போன்ற பொம்மையை உருவாக்கி அதன் கையில் கோழிக்கறி துண்டை சொருகி, நிஜ பாம்பை கடிக்க விட்டு சோதனை செய்துள்ளது கேரளா போலீஸ்

கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் குற்றவாளியை அல்லது தடயங்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்களை போலீஸ் பயன்படுத்தி நாம் பார்த்திருப்போம். ஆனால், கேரளாவில் ஒரு பெண்ணின் கொலை வழக்கை விசாரிக்க பாம்பை பயன்படுத்தி இருக்கிறது போலீஸ்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சல் பகுதியில் உத்ரா என்ற 26 வயது பெண் கடந்த 2020-ம் ஆண்டு தனது பெற்றோர் வீட்டில் பாம்பு கடித்து உயிரிழந்தார். இந்த நிலையில், உத்ராவின் கணவர் சூரஜின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணையை தொடங்குகின்றனர்.

அதில், பல திடுக்கிடும் தகவல்களை தெரிவிக்கிறார் சூரஜ். வங்கி ஊழியரான அவர், தனது மனைவியை கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார். அதை பாம்பு கடித்து இறந்ததை போல் சித்தரிப்பதற்காக நாகப்பாம்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து உள்ளார் சூரஜ். அந்த பாம்பு உத்ராவை கடித்தாலும், அவர் உயிரிழக்கவில்லை. மருத்துவ சிகிச்சை பெற்று தனது பெற்றோர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

திரில்லர் படங்களை மிஞ்சும் பரபரப்பு... பொம்மை உடல், நிஜ பாம்பை வைத்து கொலை வழக்கு விசாரணை!

இதனால் அதிர்ச்சி அடைந்த சூரஜ் மீண்டும் கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார். கடந்த முறை உத்ரா தப்பியது போல் இம்முறை தப்பித்துவிடக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருக்கிறார். உத்ராவை கொலை செய்ய சூரஜ் குறித்த நாள் மே 7, 2020. அப்போது தனது பெற்றோர் வீட்டில் ஓய்வில் இருந்த உத்ராவை கொல்ல மீண்டும் அதிக விஷ சக்தி கொண்ட பாம்பை வாடகைக்கு எடுக்கிறார்.

இம்முறை உத்ரா தப்பித்துவிடாமல் இருக்க அவருக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து உள்ளார். அதை உட்கொண்ட பின் மயங்கிய உத்ரா மீது, வாடகைக்கு வாங்கிய விஷம் கொண்ட பாம்பை போடுகிறார் சூரஜ். அது உத்ராவை கடித்தபின் அவர் உயிரிழக்கிறார். ஒரு வழியாக கொன்றுவிட்டோம் என நிம்மதியடைந்த சூரஜின் நடவடிக்கையே அவரை போலீசிடம் காட்டிக்கொடுத்து விட்டது.

கொலை வழக்கில் சூரஜை கைது செய்த போலீசார், 82 வது நாளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. உத்ராவை வீட்டில் அடைத்து சித்திரவதை செய்ததாகவும் கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் சூரஜ்ஜின் தாய் மற்றும் சகோதரி மீது போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த கொலையை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவே உத்ராவை போன்ற பொம்மையை உருவாக்கி அதன் கையில் கோழிக்கறி துண்டை சொருகி, நிஜ பாம்பை கடிக்க விட்டு சோதனை செய்துள்ளது கேரளா போலீஸ். கொல்லத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டிலில் படுக்க வைக்கப்பட்டு உள்ள பொம்மை மீது பாம்பை போட்டுள்ளனர்.

தொடக்கத்தில் பாம்பு பொம்மையை கடிக்கவில்லை. பின்னர் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு அந்த பொம்மையை பாம்பு இருமுறை கடித்து உள்ளது. முதல் முறை 2 செ.மீ அளவும், 2வது முறை 2.4 செ.மீ. அளவும் 2.4 செ.மீ. அளவும் கடித்து இருப்பதை போலீசார் குறித்துக்கொண்டனர். இந்த பரிசோதனை சூரஜ் மீதான குற்றத்தை நிரூபிக்க உதவும் என கேரளா போலீஸ் நம்புகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

செங்கல்பட்டு: பாமக பேனர் விவகாரம் - பரபரப்பு திருப்பம்! காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
செங்கல்பட்டு: பாமக பேனர் விவகாரம் - பரபரப்பு திருப்பம்! காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அடுக்குமாடி குடியிருப்பில் அடிக்கடி உல்லாசம் !! நிர்வாணமாக புகைப்படம் எடுத்த இளைஞர் !!
அடுக்குமாடி குடியிருப்பில் அடிக்கடி உல்லாசம் !! நிர்வாணமாக புகைப்படம் எடுத்த இளைஞர் !!
மதுரை காமராசர் பல்கலை ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! அதிர்ச்சியில் அதிகாரிகள், நடந்தது என்ன?
மதுரை காமராசர் பல்கலை ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! அதிர்ச்சியில் அதிகாரிகள், நடந்தது என்ன?
கிளிக்’ செய்தால் லாட்டரி..? கோவையில் ரூ.2.46 லட்சத்துடன் ஆன்லைன் லாட்டரி விற்பனையாளர்கள் கைது
கிளிக்’ செய்தால் லாட்டரி..? கோவையில் ரூ.2.46 லட்சத்துடன் ஆன்லைன் லாட்டரி விற்பனையாளர்கள் கைது
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Rain: வெயில் பொளக்குதேன்னு பயப்படாதீங்க.? இதோ மழை வந்துட்டே இருக்கு; வானிலை மையம் குட் நியூஸ்.!
வெயில் பொளக்குதேன்னு பயப்படாதீங்க.? இதோ மழை வந்துட்டே இருக்கு; வானிலை மையம் குட் நியூஸ்.!
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
Crude Oil Price: இந்தியாவால சீனாவுக்கு அடித்த யோகம்.! ஈரானும், ரஷ்யாவும் கொடுத்த சூப்பர் ஆஃபர்; எதுல தெரியுமா.?
இந்தியாவால சீனாவுக்கு அடித்த யோகம்.! ஈரானும், ரஷ்யாவும் கொடுத்த சூப்பர் ஆஃபர்; எதுல தெரியுமா.?
அப்பாடா... ஒரு வழியாக திமுகவுடன் நாளை காங். பேச்சுவார்த்தை- காத்திருந்ததற்கு பலன் கிடைக்குமா..?
அப்பாடா... ஒரு வழியாக திமுகவுடன் நாளை காங். பேச்சுவார்த்தை- காத்திருந்ததற்கு பலன் கிடைக்குமா..?
DMK KATPADI CANDIDATE : துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
முழக்கமிட்ட முதலமைச்சர்; நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை; உடல் தானம்
முழக்கமிட்ட முதலமைச்சர்; நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை; உடல் தானம்
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்- எவ்வளவு தெரியுமா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்- எவ்வளவு தெரியுமா?
Embed widget