மேலும் அறிய

திரில்லர் படங்களை மிஞ்சும் பரபரப்பு... பொம்மை உடல், நிஜ பாம்பை வைத்து கொலை வழக்கு விசாரணை!

உத்ராவை போன்ற பொம்மையை உருவாக்கி அதன் கையில் கோழிக்கறி துண்டை சொருகி, நிஜ பாம்பை கடிக்க விட்டு சோதனை செய்துள்ளது கேரளா போலீஸ்

கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் குற்றவாளியை அல்லது தடயங்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்களை போலீஸ் பயன்படுத்தி நாம் பார்த்திருப்போம். ஆனால், கேரளாவில் ஒரு பெண்ணின் கொலை வழக்கை விசாரிக்க பாம்பை பயன்படுத்தி இருக்கிறது போலீஸ்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சல் பகுதியில் உத்ரா என்ற 26 வயது பெண் கடந்த 2020-ம் ஆண்டு தனது பெற்றோர் வீட்டில் பாம்பு கடித்து உயிரிழந்தார். இந்த நிலையில், உத்ராவின் கணவர் சூரஜின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணையை தொடங்குகின்றனர்.

அதில், பல திடுக்கிடும் தகவல்களை தெரிவிக்கிறார் சூரஜ். வங்கி ஊழியரான அவர், தனது மனைவியை கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார். அதை பாம்பு கடித்து இறந்ததை போல் சித்தரிப்பதற்காக நாகப்பாம்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து உள்ளார் சூரஜ். அந்த பாம்பு உத்ராவை கடித்தாலும், அவர் உயிரிழக்கவில்லை. மருத்துவ சிகிச்சை பெற்று தனது பெற்றோர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

திரில்லர் படங்களை மிஞ்சும் பரபரப்பு... பொம்மை உடல், நிஜ பாம்பை வைத்து கொலை வழக்கு விசாரணை!

இதனால் அதிர்ச்சி அடைந்த சூரஜ் மீண்டும் கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார். கடந்த முறை உத்ரா தப்பியது போல் இம்முறை தப்பித்துவிடக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருக்கிறார். உத்ராவை கொலை செய்ய சூரஜ் குறித்த நாள் மே 7, 2020. அப்போது தனது பெற்றோர் வீட்டில் ஓய்வில் இருந்த உத்ராவை கொல்ல மீண்டும் அதிக விஷ சக்தி கொண்ட பாம்பை வாடகைக்கு எடுக்கிறார்.

இம்முறை உத்ரா தப்பித்துவிடாமல் இருக்க அவருக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து உள்ளார். அதை உட்கொண்ட பின் மயங்கிய உத்ரா மீது, வாடகைக்கு வாங்கிய விஷம் கொண்ட பாம்பை போடுகிறார் சூரஜ். அது உத்ராவை கடித்தபின் அவர் உயிரிழக்கிறார். ஒரு வழியாக கொன்றுவிட்டோம் என நிம்மதியடைந்த சூரஜின் நடவடிக்கையே அவரை போலீசிடம் காட்டிக்கொடுத்து விட்டது.

கொலை வழக்கில் சூரஜை கைது செய்த போலீசார், 82 வது நாளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. உத்ராவை வீட்டில் அடைத்து சித்திரவதை செய்ததாகவும் கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் சூரஜ்ஜின் தாய் மற்றும் சகோதரி மீது போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த கொலையை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவே உத்ராவை போன்ற பொம்மையை உருவாக்கி அதன் கையில் கோழிக்கறி துண்டை சொருகி, நிஜ பாம்பை கடிக்க விட்டு சோதனை செய்துள்ளது கேரளா போலீஸ். கொல்லத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டிலில் படுக்க வைக்கப்பட்டு உள்ள பொம்மை மீது பாம்பை போட்டுள்ளனர்.

தொடக்கத்தில் பாம்பு பொம்மையை கடிக்கவில்லை. பின்னர் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு அந்த பொம்மையை பாம்பு இருமுறை கடித்து உள்ளது. முதல் முறை 2 செ.மீ அளவும், 2வது முறை 2.4 செ.மீ. அளவும் 2.4 செ.மீ. அளவும் கடித்து இருப்பதை போலீசார் குறித்துக்கொண்டனர். இந்த பரிசோதனை சூரஜ் மீதான குற்றத்தை நிரூபிக்க உதவும் என கேரளா போலீஸ் நம்புகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்
லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்
Embed widget