மேலும் அறிய

”மாப்பிள்ளை பிடிக்கலையா?” : சொந்த மகளையே எரிக்கமுயன்ற பெற்றோர், சகோதரன்..!

ஆந்திராவில் பெற்றோர்கள் முடிவுசெய்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்த பெண்ணினை உயிருடன் எரித்த குடும்பத்தினரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் பல்வேறு வழிகளில் தினமும் அரங்கேறி வருகிறது. அதிலும் சமூகத்தில் பெண்கள் தங்களுக்கு பிடித்த எந்த விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அதனை மறுத்து அடக்குமுறைகளை கையாள்கின்றனர் குடும்பத்தினர்கள். குறிப்பாக பெண் ஒருவரை காதலிக்கிறார் என்று தெரிந்தால் போதும், உடனே ஆணவக்கொலை செய்யும் நிகழ்வுகள் அரங்கேறிவிடுகிறது. இதனை எதிர்த்து எத்தனை சட்டப்போராட்டங்கள் நடைபெற்றாலும் எந்த பலனும் இல்லை என்றே சொல்லலாம்.

இப்படி ஒரு சம்பவம் தான் இன்று ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கோதப்பள்ளி என்ற பகுதியில் நிகழ்ந்துள்ளது. 20 வயதான பெண் ஒருவருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்து பெற்றோர்கள் அவருக்கு வரன் பார்த்து வந்துள்ளனர். ஆனால் பெற்றோர்கள் பார்க்கும் எந்த பையனையும் பிடிக்கவில்லை எனவும், திருமணத்திற்கு தொடர்ச்சியாக அந்த பெண் நோ சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், பெண்ணினை உயிருடன் தீயிட்டு எரித்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிருக்குப்போராடிய பெண்ணினை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பெண்ணினை உயிரோடு எரித்த அவரது தாய், தந்தை மற்றும் சகோதரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


”மாப்பிள்ளை பிடிக்கலையா?” : சொந்த மகளையே எரிக்கமுயன்ற பெற்றோர், சகோதரன்..!

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய  Rayachiti circle  காவல் ஆய்வாளர் ராஜூ தெரிவிக்கையில், 20 வயதான இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ள நிலையில் பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால் அவரை தான் திருமணம் செய்வதாக கூறி தொடர்ந்து பெற்றோர்களிடம் வலியுறுத்தி வந்த நிலையில்தான், திருமணத்திற்காக அவர்கள் பார்த்த பையனை மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பெண்ணினை உயிருடன் தீயிட்டு எரித்துள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெண்ணினை உயிரோடு குடும்பத்தினரே எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடைபெறும் 4.05 லட்ச வழக்குகளில் 30 சதவீதம் மட்டும் தான் இந்திய தட்டணைச்சட்டத்தின் பிரிவு 498 ஏ இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக NCRB தெரிவித்துள்ளது.  மேலும் தேசிய மகளிர் ஆணையத்தின் தரவுகளின்படி, 2021 ஜனவரி முதல் 2021 மார்ச் மாதம் வரை பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் தொடர்பாக 1463 புகார்கள் வந்துள்ளன. இதேப்போன்று கடந்த 2020 ஏப்ரல் மாதம் வரை பல்வேறு பெண்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்பாக 25886 புகார்கள் வந்துள்ளனர். இதில் குடும்ப வன்முறை தொடர்பாக 5865 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Sexual Harrasment : ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபர் : ஸ்க்ரீன்ஷாட் வெளியிட்ட சூப்பர் சிங்கர் பாடகி..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!
AIADMK: தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!
TN Election 2026: தமிழகத்தில் தேர்தல் நடத்த எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகுது? - தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்
தமிழகத்தில் தேர்தல் நடத்த எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகுது? - தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்
TVK Aadhav Arjuna: முடிவுக்கு வந்த பிரச்னை.. ஆதவ் அர்ஜூனா வேட்புமனு ஏற்பு.. தொண்டர்கள் ஹேப்பி!
TVK Aadhav Arjuna: முடிவுக்கு வந்த பிரச்னை.. ஆதவ் அர்ஜூனா வேட்புமனு ஏற்பு.. தொண்டர்கள் ஹேப்பி!
ஜெயிக்க முடியாது என்பதற்கு அவர் என்ன எம்.ஜி.ஆரா? வெறும் பி.டி.ஆர் தான் – சுந்தர் சி சவால் !
ஜெயிக்க முடியாது என்பதற்கு அவர் என்ன எம்.ஜி.ஆரா? வெறும் பி.டி.ஆர் தான் – சுந்தர் சி சவால் !
TN Richest Candidates: தமிழ்நாட்டின் டாப் 10 பணக்கார வேட்பாளர்கள் யார்? அதிமுக, திமுக, தவெக எல்லாத்துலயுமா?
TN Richest Candidates: தமிழ்நாட்டின் டாப் 10 பணக்கார வேட்பாளர்கள் யார்? அதிமுக, திமுக, தவெக எல்லாத்துலயுமா?
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
TN RAIN ALERT: மீண்டும் மழையா.? தமிழகத்தில் எங்கெல்லாம் தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்
மீண்டும் மழையா.? தமிழகத்தில் எங்கெல்லாம் தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்
Trump Vs Iran: தலைக்கு தில்ல பாத்தியா.! ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு அஞ்சாமல் 10 நிபந்தனைகள் விதித்த ஈரான்; அது என்ன.?
தலைக்கு தில்ல பாத்தியா.! ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு அஞ்சாமல் 10 நிபந்தனைகள் விதித்த ஈரான்; அது என்ன.?
Embed widget