மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளை - திருப்பூரில் வடமாநில கும்பல் கைது

இவர்கள் பீகாரில் இருந்து வரும் போதே தூக்க மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி ரூ.100 ரூபாய்க்கு வாங்கி வந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த வடமாநில ரயில் பயணிகளை குறி வைத்து, மயக்க மருந்து கலந்த கிரீம் பிஸ்கட்டுகள், டீ, குளிர்பானங்கள் ஆகியவற்றை சாப்பிடுவதற்கு கொடுத்து பணம், உடமைகளை திருடிச் சென்ற சம்பவம் நடைபெற்றது. ரயிலில் வட மாநில பயணிகளிடம் அடையாளம் தெரியாத நபர்கள் அறிமுகமாகி நட்பு ரீதியாக தாங்களும் அந்த மாநிலத்துக்கு செல்வதாக கூறி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, மயக்க மருந்து கலந்த உணவுப் பொருட்களை கொடுத்து மயங்கியவுடன் திருட்டை அரங்கேற்றியுள்ளனர். இதுகுறித்து திருப்பூர் இருப்பு பாதை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில்  சமீப காலங்களாக தமிழகம் முழுவதும் இது போன்று மயக்க மருந்து கொடுத்து உடைமைகளை திருடும் சம்பவம் அதிகரித்தது. இதையடுத்து மயக்க மருந்து கலந்து கொடுத்து பயணிகளின் உடமைகளை திருடும் சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்ய இருப்புப்பாதை கூடுதல் இயக்குநர் வனிதா உத்தரவின் பேரில், கோயம்புத்தூர் இருப்புப்பாதை காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் மற்றும் இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் பிரியாசாய் ஸ்ரீ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள பேக்கரிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததோடு, அப்பகுதியில் இருந்த செல்போன் எண்களை ரயில்வே காவல்துறை சைபர் செல் உதவியுடன் மயக்க மருந்து கொடுத்து பொருட்களை கொள்ளையடித்ததாக கருதப்படும் நபர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். 


ரயில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளை - திருப்பூரில் வடமாநில கும்பல் கைது

இந்நிலையில் திருப்பூர் இரயில் நிலைய பார்சல் அலுவலகம் அருகே, மயக்க பிஸ்கட் கொடுத்து திருடும் சம்பவத்தில் ஈடுபட்ட பீகார் மாநிலம் சஹால் ஆரரியா எனும் ஒரே பகுதியைச் சேர்ந்த சல்மான் (27), மன்வார் ஆலம் (25), முகமத் ஆசாத் (32), அப்துல்லா (31), மக்முத் ஆலம் (31) ஆகிய 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், திருப்பூர் குன்னங்கல்பாளையம் அருகில் உள்ள சூரியா காலனியில் தங்கியிருந்து பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருவது தெரியவந்தது. மேலும் பிஸ்கட்டில் மயக்க மருந்து தடவி கொடுத்து ரயில் நிலையம், காதர் பேட்டை பகுதிக்கு வரும் வட மாநிலத்தவரை குறி வைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.  


ரயில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளை - திருப்பூரில் வடமாநில கும்பல் கைது

இவர்கள் பீகாரில் இருந்து வரும் போதே தூக்க மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி ரூ.100 ரூபாய்க்கு வாங்கி வந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் திருடிய பணத்தை கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சுகபோகமாக வாழ்ந்துள்ளனர். இவர்களிடமிருந்து மயக்க பிஸ்கட் கொடுத்து அதன் மூலம் திருடப்பட்ட 30 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டுகள், மயக்க மாத்திரைகள், மயக்க மாத்திரைகளை பொடியாக்கிய பாக்கெட்டுகள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Embed widget