மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளை - திருப்பூரில் வடமாநில கும்பல் கைது

இவர்கள் பீகாரில் இருந்து வரும் போதே தூக்க மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி ரூ.100 ரூபாய்க்கு வாங்கி வந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த வடமாநில ரயில் பயணிகளை குறி வைத்து, மயக்க மருந்து கலந்த கிரீம் பிஸ்கட்டுகள், டீ, குளிர்பானங்கள் ஆகியவற்றை சாப்பிடுவதற்கு கொடுத்து பணம், உடமைகளை திருடிச் சென்ற சம்பவம் நடைபெற்றது. ரயிலில் வட மாநில பயணிகளிடம் அடையாளம் தெரியாத நபர்கள் அறிமுகமாகி நட்பு ரீதியாக தாங்களும் அந்த மாநிலத்துக்கு செல்வதாக கூறி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, மயக்க மருந்து கலந்த உணவுப் பொருட்களை கொடுத்து மயங்கியவுடன் திருட்டை அரங்கேற்றியுள்ளனர். இதுகுறித்து திருப்பூர் இருப்பு பாதை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில்  சமீப காலங்களாக தமிழகம் முழுவதும் இது போன்று மயக்க மருந்து கொடுத்து உடைமைகளை திருடும் சம்பவம் அதிகரித்தது. இதையடுத்து மயக்க மருந்து கலந்து கொடுத்து பயணிகளின் உடமைகளை திருடும் சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்ய இருப்புப்பாதை கூடுதல் இயக்குநர் வனிதா உத்தரவின் பேரில், கோயம்புத்தூர் இருப்புப்பாதை காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் மற்றும் இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் பிரியாசாய் ஸ்ரீ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள பேக்கரிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததோடு, அப்பகுதியில் இருந்த செல்போன் எண்களை ரயில்வே காவல்துறை சைபர் செல் உதவியுடன் மயக்க மருந்து கொடுத்து பொருட்களை கொள்ளையடித்ததாக கருதப்படும் நபர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். 


ரயில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளை - திருப்பூரில் வடமாநில கும்பல் கைது

இந்நிலையில் திருப்பூர் இரயில் நிலைய பார்சல் அலுவலகம் அருகே, மயக்க பிஸ்கட் கொடுத்து திருடும் சம்பவத்தில் ஈடுபட்ட பீகார் மாநிலம் சஹால் ஆரரியா எனும் ஒரே பகுதியைச் சேர்ந்த சல்மான் (27), மன்வார் ஆலம் (25), முகமத் ஆசாத் (32), அப்துல்லா (31), மக்முத் ஆலம் (31) ஆகிய 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், திருப்பூர் குன்னங்கல்பாளையம் அருகில் உள்ள சூரியா காலனியில் தங்கியிருந்து பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருவது தெரியவந்தது. மேலும் பிஸ்கட்டில் மயக்க மருந்து தடவி கொடுத்து ரயில் நிலையம், காதர் பேட்டை பகுதிக்கு வரும் வட மாநிலத்தவரை குறி வைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.  


ரயில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளை - திருப்பூரில் வடமாநில கும்பல் கைது

இவர்கள் பீகாரில் இருந்து வரும் போதே தூக்க மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி ரூ.100 ரூபாய்க்கு வாங்கி வந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் திருடிய பணத்தை கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சுகபோகமாக வாழ்ந்துள்ளனர். இவர்களிடமிருந்து மயக்க பிஸ்கட் கொடுத்து அதன் மூலம் திருடப்பட்ட 30 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டுகள், மயக்க மாத்திரைகள், மயக்க மாத்திரைகளை பொடியாக்கிய பாக்கெட்டுகள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
ABP Premium

வீடியோ

”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Maruti eVitara: மாருதி சுசூகியின் முதல் மின்சார வாகனத்தில் என்ன இருக்கிறது.? இ விதாராவின் அம்சங்கள் விரிவாக..
மாருதி சுசூகியின் முதல் மின்சார வாகனத்தில் என்ன இருக்கிறது.? இ விதாராவின் அம்சங்கள் விரிவாக..
Indian Cars Export Record: வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - வெளியான முக்கிய அறிவிப்பு
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
Embed widget