மேலும் அறிய

Crime: நக்கீரன் செய்தியாளர், புகைப்படக் கலைஞர் மீது தாக்குதல் - 5 பேர் கைது

பத்திரிகையாளரை தாக்கிய சின்ன சேலத்தைச் சேர்ந்த செல்வராஜ் (35), தீபன் சக்ரவர்த்தி (36), செல்வகுமார் (38), பாலகிருஷ்ணன் (45), ராஜசேகர் (44) ஆகிய ஐந்து பேரை தலைவாசல் காவல்துறையினர் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஏற்பட்ட கலவரத்தால் பள்ளி சூறையாடப்பட்டது. பள்ளியை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்த நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற பிரகாஷ் (தலைமை செய்தியாளர் நக்கீரன்) மற்றும் புகைப்படக் கலைஞர் அஜீத் குமார் ஆகிய இருவரும் சென்று உள்ளனர். அப்போது அவரை வழிமறித்து பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் தம்பி அருள் சுபாஷ் மற்றும் அவருடன் வந்திருந்த பத்துக்கும் மேற்பட்டோர் செய்தியாளர்களின் காரை வழிமறித்து தாக்கியுள்ளனர். அவர்கள் அங்கிருந்து சேலம் நோக்கி காரை வேகமாக இயக்கி வந்த போது அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்தவர்கள் தலைவாசலில் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு தலைவாசல் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் புகைப்படக் கலைஞர் அஜித் குமார் என்பவரது பல் உடைந்துள்ளது. இதுகுறித்து ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் தம்பி அருள் சுபாஷ், மோகன், ராஜசேகர் உட்பட 10 பேர் மீது தலைவாசல் போலீசார் கொலை முயற்சி உட்பட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் பத்திரிகையாளரை தாக்கிய சின்ன சேலத்தைச் சேர்ந்த செல்வராஜ் (35), தீபன் சக்ரவர்த்தி (36), செல்வகுமார் (38), பாலகிருஷ்ணன் (45), ராஜசேகர் (44) ஆகிய ஐந்து பேரை தலைவாசல் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த நான்கு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Crime: நக்கீரன் செய்தியாளர், புகைப்படக் கலைஞர் மீது தாக்குதல் - 5 பேர் கைது

பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்:

இத்தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ் ,புகைப்படக் கலைஞர் அஜித்குமார் இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் பழிவாங்கும் போக்கு அதிகரித்து வருவதை காண முடிகிறது. இது ஒரு ஆரோக்கியமான போக்காக இருக்காது என்பதை ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் உணர வேண்டும். பத்திரிகையாளர்களை தாக்குகின்ற சமூக விரோத கும்பலாக இருந்தாலும் சரி அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அவர்கள் மீது சட்டபூர்வ உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Crime: நக்கீரன் செய்தியாளர், புகைப்படக் கலைஞர் மீது தாக்குதல் - 5 பேர் கைது

முதலமைச்சரிடம் கோரிக்கை:

பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிப்பதற்குரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்பதுதான் அனைத்து பத்திரிகையாளர்களின் வேண்டுகோளாக உள்ளது. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோத  கும்பலை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரும் பத்திரிகையாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கி அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு தரப்பு செய்ய வேண்டும் என்று முதலமைச்சரிடம்  ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல்!
திருமணம் மீறிய உறவு !! திருமணம் செய்ய வற்புறுத்திய கள்ளக் காதலி !! முகம் சிதைத்து கொடூர கொலை
திருமணம் மீறிய உறவு !! திருமணம் செய்ய வற்புறுத்திய கள்ளக் காதலி !! முகம் சிதைத்து கொடூர கொலை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
Annamalai: உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்..புதிய பட ப்ரோமோ
ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்..புதிய பட ப்ரோமோ
CV Shanmugam Next Plan : சி.வி.சண்முகத்தின் ராஜினாமா முடிவை மாற்றிய அந்த ஒரு போன் கால்.! திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
சி.வி.சண்முகத்தின் ராஜினாமா முடிவை மாற்றிய அந்த ஒரு போன் கால்.! திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
Mamata Banerjee: ஆப்சென்டான 60 எம்.எல்.ஏக்கள், அதிர்ந்து போன மம்தா பானர்ஜி..! பாஜக வேலையை காட்டியதா?
ஆப்சென்டான 60 எம்.எல்.ஏக்கள், அதிர்ந்து போன மம்தா பானர்ஜி..! பாஜக வேலையை காட்டியதா?
CM Vijay: திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கெடுக்க திமுக சதி? - விஜயை விளாசும் நெட்டிசன்கள்!
CM Vijay: திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கெடுக்க திமுக சதி? - விஜயை விளாசும் நெட்டிசன்கள்!
TN DGP: புதிய டிஜிபி இதுவரை பொறுப்பேற்காதது ஏன்? மகேஷ் குமார் அகர்வால் எங்கே? சிஎம் விஜய் டிக் அடித்தது ஏன்?
புதிய டிஜிபி இதுவரை பொறுப்பேற்காதது ஏன்? மகேஷ் குமார் அகர்வால் எங்கே? சிஎம் விஜய் டிக் அடித்தது ஏன்?
Embed widget