மேலும் அறிய

சீர்காழியில் ஆசிரியர் வீட்டில் திருட்டு - களவான பொருட்களை மீட்டது எப்படி?

சீர்காழியில் ஆசிரியர் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை  கைது செய்து அவர்களிடம் இருந்து 13 சவரன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சீர்காழியில் கடந்த மாதம் ஆசிரியர் வீட்டில் திருட்டில் ஈடுப்பட்ட கொள்ளையர்கள் மூன்று பேரை பிடித்து, அவர்களிடம் இருந்து 13 சவரன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வெளியூர் சென்று வந்த ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம் வில்வா நகரை சேர்ந்தவர் 57 வயதான ஆசிரியர் திருமாறன். இவர் கடந்த மாதம் 15 -ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோயமுத்தூர் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.  இந்நிலையில் மீண்டும்  நான்கு நாட்கள் கழித்து மே 19ம் தேதி காலை ஊர் திரும்பிய அவர் வீட்டை திறக்க முற்பட்டபோது காம்பவுண்ட் கேட் மற்றும் வீட்டின் முன்புற கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த திருமாறன், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த மரத்தால் ஆன பீரோ மற்றும் இரும்பு பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் கலைந்து, சிதறி கிடந்ததுள்ளது.


சீர்காழியில் ஆசிரியர் வீட்டில் திருட்டு - களவான பொருட்களை மீட்டது எப்படி?

சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்க் திருட்டு

மேலும் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள், பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்கள், 7 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பணம் மற்றும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து இதுகுறித்த சீர்காழி காவல் நிலையத்தில் திருமாறன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல்துறையினர், கொள்ளை நடைபெற்ற இடத்தில்  பார்வையிட்டு, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கினர். மேலும் தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Crime: களக்காடு அருகே பேரம் பேசுவது போல் நடித்து யானை தந்தம் பதுக்கல் - 7 பேரை சுற்றிவளைத்த வனத்துறை


சீர்காழியில் ஆசிரியர் வீட்டில் திருட்டு - களவான பொருட்களை மீட்டது எப்படி?

விசாரணையில் குதித்த காவல்துறை

அந்த புகாரின் பேரில் சீர்காழி காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்து காவல்ஆய்வாளர் சிவக்குமார், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டகணேஷ் மற்றும் காவல்துறை குழுவினர் திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரனையில் ஈடுப்பட்டனர். அப்போது கடலூர் ஓ.டி. காவல்நிலைய சரகத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு அடைப்பு காவலில் இருந்துவரும் குறிஞ்சிபாடி சேர்ந்த 22 வயதான ஆனந்தராஜ்,  சிதம்பரம், புளியங்குடியை சேர்ந்த 19 வயதான கலையரசன் மற்றும் கீழபுவனகிரி பகுதியை சேர்ந்த 38 வயதான சுரேஷ் ஆகிய மூன்று பேர் திருட்டில் தொடர்புடையவர்கள் என்பது விசாரனையில் தெரியவந்தது. 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு எதிரொலி - மயிலாடுதுறையில் அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்


சீர்காழியில் ஆசிரியர் வீட்டில் திருட்டு - களவான பொருட்களை மீட்டது எப்படி?

மீட்கப்பட்ட கொள்ளை போன பொருட்கள் 

அதனை அடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று கடலூர் சிறையில் இருந்து மேற்படி நபர்களை எடுத்து விசாரனை செய்தபோது அந்த நபர்கள் திருட்டில் ஈடுப்பட்டது உறுதியானது. பின்னர் அவர்களிடம் இருந்து 13 சவரன் தங்கநகைகள், ஒன்றரை கிலோ வெள்ளிபொருட்கள் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மீண்டும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். திருட்டு நடைபெற்ற ஒரு மாத காலத்தில் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்து கொள்ளை போன பொருட்களை மீட்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலரும் வெகுவாக பாராட்டினர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மனிதர்களை கொல்வது இலக்கல்ல.. .பொருட்சேதமே டார்க்கெட் - சிக்கிய குண்டு மிரட்டல் கடிதம்....
மனிதர்களை கொல்வது இலக்கல்ல.. .பொருட்சேதமே டார்க்கெட் - சிக்கிய குண்டு மிரட்டல் கடிதம்....
வீடு புகுந்த திருடன் தப்பி ஓட்டம்... பேரூரில் நள்ளிரவு பரபரப்பு...
வீடு புகுந்த திருடன் தப்பி ஓட்டம்... பேரூரில் நள்ளிரவு பரபரப்பு...
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
மனைவியை கொன்று தலைமறைவான முன்னாள் ராணுவ அதிகாரி: கேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது சிக்கினார்
மனைவியை கொன்று தலைமறைவான முன்னாள் ராணுவ அதிகாரி: கேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது சிக்கினார்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!
TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!
TVK Vijay: தமிழ்நாட்டின் மாற்றுத் தலைவராக உருவெடுக்கும் விஜய்! கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
TVK Vijay: தமிழ்நாட்டின் மாற்றுத் தலைவராக உருவெடுக்கும் விஜய்! கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
Edappadi Palanisamy: கருணாநிதி, கனிமொழி சங்கியா? 5 ஆண்டில் 18 ஆயிரம் சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்- ஆவேசமான ஈபிஎஸ்!
Edappadi Palanisamy: கருணாநிதி, கனிமொழி சங்கியா? 5 ஆண்டில் 18 ஆயிரம் சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்- ஆவேசமான ஈபிஎஸ்!
TN Election 2026 Survey: மீண்டும் ஆட்சியமைக்கும் திமுக; தவெகவுக்கு இத்தனை தொகுதியா? அப்போ அதிமுக? வெளியான கருத்துக்கணிப்பு
TN Election 2026 Survey: மீண்டும் ஆட்சியமைக்கும் திமுக; தவெகவுக்கு இத்தனை தொகுதியா? அப்போ அதிமுக? வெளியான கருத்துக்கணிப்பு
TN Election 2026 : 234-ல் ஒன்றிலாவது ஜெயிப்பார்களா? - அமித்ஷா கூட்டணியை அலறவிட்ட பொன்முடி!
TN Election 2026 : 234-ல் ஒன்றிலாவது ஜெயிப்பார்களா? - அமித்ஷா கூட்டணியை அலறவிட்ட பொன்முடி!
TN Election 2026: திமுக VS அதிமுக VS தவெக! யார் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவசம்?
TN Election 2026: திமுக VS அதிமுக VS தவெக! யார் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவசம்?
தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை: திருச்சி மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?
தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை: திருச்சி மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?
Upcoming 7 Seater SUV: Kia Sorento Hybrid முதல் Volkswagen Tayron வரை... வரப்போது 7 சீட்டர் எஸ்யூவி கார்கள்!
Upcoming 7 Seater SUV: Kia Sorento Hybrid முதல் Volkswagen Tayron வரை... வரப்போது 7 சீட்டர் எஸ்யூவி கார்கள்!
Embed widget