மேலும் அறிய

Crime: தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பதியப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மதுவிலக்கு குற்றங்கள் - அதிர்ச்சியில் மயிலாடுதுறை மக்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை அமலுக்கு பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் பதியப்பட்டு, 103 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் 

இந்திய நாட்டின் 18 -வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக 2024 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன. திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்கீழ் பாமக உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன. கூட்டணிக் கட்சிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டனர். வேட்பாளர்கள் மனுத் தாக்கலும் செய்து வருகின்றனர்.  


Crime: தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பதியப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மதுவிலக்கு குற்றங்கள் - அதிர்ச்சியில் மயிலாடுதுறை மக்கள்

காவல்துறையினர் நடவடிக்கைகள் 

இந்த சூழலில் பாராளுமன்ற தேர்தல் நேர்மையாகவுகம், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு விதிமீறல்கள் தொடர்பாக காவல்துறையினர் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் மேற்பார்வையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயா, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மணிகண்ட கணேஷ், தலைமை காவலர் சிவக்குமார், காவலர்கள் ராஜசேகர், ரகுராமன் மற்றும் காவல்துறையினர் சீர்காழி அருகே அளக்குடி பில்படுகை கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானங்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, திடீர் சோதனை செய்தனர். 


Crime: தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பதியப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மதுவிலக்கு குற்றங்கள் - அதிர்ச்சியில் மயிலாடுதுறை மக்கள்

அப்போது 180 மி.லி, 90 மி.லி. அளவுக் கொண்ட புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் 2350 எண்ணிக்கையிலும், புதுச்சேரி சாராயம் 110 லிட்டரும் வீட்டின் பாத் ரூம் மற்றும் கொல்லைப்புறத்தில் புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குமுதவல்லி என்ற பெண்ணையும் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய நபரை தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட மதுபானங்களில் மொத்த மதிப்பு ரூபாய் 3 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் கடந்த சில நாட்களாக சீர்காழி பகுதியில் புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் போலீசாரின் அதிரடி சோதனையால் அதிகளவு கைப்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Crime: தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பதியப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மதுவிலக்கு குற்றங்கள் - அதிர்ச்சியில் மயிலாடுதுறை மக்கள்

பதியப்பட்ட வழக்குகள் 

மேலும் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் முலம் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. அதன் கள்ளச்சாராய விற்பனை, அயல் மாநில மதுபானங்கள் கடத்தல்களை தடுக்கும் விதமாக தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கையில் தேர்தல் அமலுக்கு வந்த நாளிலிருந்து இதுவரை இம்மாவட்டத்தில் 102 மதுவிலக்கு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 103 எதிரிகள் கைது செய்யப்பட்டும், 3,763 லிட்டர் பாண்டி சாராயம், 91 லிட்டர் அயல் மாநில மதுபானங்கள், 40 லிட்டர் தமிழ்நாடு மதுபானங்கள் மற்றும் 01 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Crime: தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பதியப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மதுவிலக்கு குற்றங்கள் - அதிர்ச்சியில் மயிலாடுதுறை மக்கள்

இதன் மொத்த மதிப்பு 2,34,552 ரூபாய் ஆகும். மேலும், தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி, சுவர் விளம்பரம், விளம்பர பதாகைகள் வைத்தது தொடர்பாக 65 வழக்குகளும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக 01 வழக்கும் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள பிடிக்கட்டளைகளில் 19 பிடிக்கட்டளைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

காலி பாட்டிலை திருப்பி கொடுத்தபோது வெடித்த மோதல்.. டாஸ்மாக் வாசலில் இளைஞர் கொடூர கொலை
காலி பாட்டிலை திருப்பி கொடுத்தபோது வெடித்த மோதல்.. டாஸ்மாக் வாசலில் இளைஞர் கொடூர கொலை
நீளும் பட்டியல்... மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 54 பேர் குண்டாஸில் சிறையில் அடைப்பு!
நீளும் பட்டியல்... மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 54 பேர் குண்டாஸில் சிறையில் அடைப்பு!
புதுச்சேரி ECR சாலையில் பட்டப்பகலில் பயங்கரம்! ரவுடி ஆனந்தை வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்... பழிக்குப் பழியா?
புதுச்சேரி ECR சாலையில் பட்டப்பகலில் பயங்கரம்! ரவுடி ஆனந்தை வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்... பழிக்குப் பழியா?
செல்போன் தொலைந்துவிட்டதா? பதற்றப்படாதீங்க... 260 செல்போன்களை மீட்ட புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார்!
செல்போன் தொலைந்துவிட்டதா? பதற்றப்படாதீங்க... 260 செல்போன்களை மீட்ட புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
Gudalur Tiger : கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
சேலத்தை இன அழிப்பு முகாமாக மாற்றத் துடிப்பதா? புற்றுநோய், ஆஸ்துமா ஆபத்து: அன்புமணி பகீர்!
சேலத்தை இன அழிப்பு முகாமாக மாற்றத் துடிப்பதா? புற்றுநோய், ஆஸ்துமா ஆபத்து: அன்புமணி பகீர்!
Kolathur MLA V S Babu : வி.எஸ்.பாபு உடல் நிலையில் நம்பிக்கையூட்டும் வகையில் முன்னேற்றம்.! மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை
வி.எஸ்.பாபு உடல் நிலையில் நம்பிக்கையூட்டும் வகையில் முன்னேற்றம்.! மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
Melma SIPCOT : மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
Ration Card Special Camp : ஒரே மணி நேரத்தில் ரேஷன் கார்டில் திருத்தம் செய்யலாம்.! இன்று சூப்பர் சான்ஸ் – வெளியான முக்கிய அறிவிப்பு
ஒரே மணி நேரத்தில் ரேஷன் கார்டில் திருத்தம் செய்யலாம்.! இன்று சூப்பர் சான்ஸ் – வெளியான முக்கிய அறிவிப்பு
LIVE | Kerala Lottery Result Today (19.09.2026): காருண்யா கேரளா லாட்டரி குலுக்கல் யாருக்கு? இதோ உடனடி அப்டேட்!
LIVE | Kerala Lottery Result Today (19.09.2026): காருண்யா கேரளா லாட்டரி குலுக்கல் யாருக்கு? இதோ உடனடி அப்டேட்!
Embed widget