மேலும் அறிய

நாயால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் படுகொலை - மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்..

நாயால் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலையான சம்பவம் மயிலாடுதுறை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே நாயால் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அகலங்கன் கிராமத்தில், வீட்டிற்குள் நாய் புகுந்த விவகாரம் தொடர்பாக உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்தின் பின்னணி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாலையூர் கீழ அகலங்கன் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த ஜூன் 11-ஆம் தேதி இரவு, மணிகண்டன் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, அவரது சித்தப்பா சீமான் என்பவரின் நாய் மணிகண்டன் வீட்டிற்குள் புகுந்து மணிகண்டன் மீது பாய்ந்துள்ளது.

 

மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு 

இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதல் ஆனது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டனின் சகோதரர் மகேந்திரன், சீமான் அவரது மகன் 25 வயதான சந்தோஷ், மற்றும் சீமானின் பேரன் சபரீஷ் ஆகிய மூவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த கொடூரத் தாக்குதலில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியுடன், காயமடைந்த மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

கொலை வழக்கு பதிவு 

இந்நிலையில் சீமானின் மகன் சந்தோஷ் அளித்த வாக்குமூலத்தின் படி போலீசார் கொலை முயற்சி, கொடூர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மகேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தலையில் வெட்டுபட்ட சீமான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து கொலைவழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

 

கிராமத்தினரிடையே அதிர்ச்சி

நாய் ஒன்று வீட்டிற்குள் புகுந்த சிறிய தகராறு, இறுதியில் ஒரு உயிரைப் பறிக்கும் கொடூரமான கொலைச் சம்பவமாக மாறியிருப்பது அக்கிராமத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவுகளுக்குள் நடந்த இந்த துயரமான சம்பவம், சிறிய பிரச்சனைகளையும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகக் கையாள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குடும்ப சண்டைகள் மற்றும் பூசல்கள் எப்படிப் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு துயரமான உதாரணமாக அமைந்துள்ளது. காவல்துறையினர் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். சிறையில் இருக்கும் மகேந்திரனுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடரும். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால், காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
Embed widget