மேலும் அறிய

போலி ஆவணங்கள் மூலம் ரூ. 2 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்த நபர் கைது

போலி ஆவணங்கள் தயாரித்து , இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்தவர் கைது.

3,410 சதுர அடி இடத்திற்கு - போலி பத்திரம்

சென்னை மாதவரம் எருக்கஞ்சேரி ஜி.என்.டி., சாலையைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது தாய் செல்வக்கனி அம்மாள் என்பவருக்கு சொந்தமாக அம்பத்தூர் , ஓரகடம் கிராமத்தில், 3,410 சதுர அடி இடம் உள்ளது. அந்த இடத்தில் , அம்பத்தூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் கல் , மண், சிமென்ட் உளிட்டவற்றை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். கணேசன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட அவரது மகன் அசோக் குமார் ( வயது 40 ) அந்த கடையை நிர்வகித்து வந்துள்ளார்.

போலி பட்டா 

அவரது மனைவி செல்வக்கனி, அசோக் குமாருக்கு உதவியாக இருந்துள்ளார். நிலத்தின் உரிமையாளரின் பெயரும் , தன் மனைவியின் பெயரும் ஒன்றாக இருப்பதால் அந்த இடத்தை அபகரிக்க அசோக்குமார் திட்டமிட்டுள்ளார். போலி ஆவணங்கள் வாயிலாக பட்டாவை தயார் செய்துள்ளார். தன் மனைவி செல்வக்கனியை வைத்து ,  மகள் நர்மதாவிற்கு அந்த இடத்தை கிரயம் செய்து கொடுத்துள்ளார். அந்த இடத்தை சையது காதர் அமீத் ஜமால் மற்றும் அவரது மனைவிக்கு பின். 1.60 கோடி ரூபாய்க்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிவானந்தம் , தன் தாய் செல்வக்கனி பெயரில் உள்ள. அசோக்குமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை, போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்த அசோக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆவடி மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார். அதன்படி, ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து , அசோக்குமாரை கைது செய்து , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தனியார் ஆம்னி பேருந்து தாமதம் - அதிர்ச்சியில் பயணிகள் போராட்டம்

சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்வதற்காக யுனிவர்செல் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேருந்துகளில் 80 பயணியர் முன்பதிவு செய்திருந்தனர். இரவு 11:30 மணிக்கு கோயம்பேடிற்கு வரவேண்டிய இப்பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு நிலையத்திற்கு வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் , நிறுவனத்திடம் முறையிட்ட போது , சில மணி நேரத்திற்கு பின் ஒரு பேருந்து மட்டும் வந்துள்ளது.

அதில் , போதிய இடம் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டதால் , ஓட்டுநரிடம் பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தில் இருந்த ஓட்டுநரும் உதவியாளரும் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆம்னி பேருந்து நிறுத்தத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார் பயணியருக்கு மாற்று வழியாக அரசு பேருந்தை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். பயணியரிடம் புகாரை பெற்ற போலீசார் தனியார் பேருந்தை காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றனர்.

தலைப்பு செய்திகள்

கடன் சுமை வேண்டாம் !! 10-ம் வகுப்பு மகனுக்காக தம்பதி எடுத்த அதிர்ச்சி முடிவு
கடன் சுமை வேண்டாம் !! 10-ம் வகுப்பு மகனுக்காக தம்பதி எடுத்த அதிர்ச்சி முடிவு
போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு !! தப்பியோடிய ரவுடிக்கு வலைவீச்சு
போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு !! தப்பியோடிய ரவுடிக்கு வலைவீச்சு
ரூ.5 லட்சம் வாங்கிட்டு டாக்டர் ஆனதும் பல்டி !! அக்கா மகளுக்கு ஆபாசப் படம் அனுப்பிய டாக்டர்
ரூ.5 லட்சம் வாங்கிட்டு டாக்டர் ஆனதும் பல்டி !! அக்கா மகளுக்கு ஆபாசப் படம் அனுப்பிய டாக்டர்
" கூடவே இருந்து இப்படி பண்ணிட்டாளே " தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget