மேலும் அறிய

மாஸ்டர் பிளான்.. 17 பெண்கள்.. போலீசாரை தலைசுற்ற வைத்த சீரியல் ரேப்பிஸ்ட்.! 

ஒன்று, இரண்டு அல்ல மொத்தமாக 17 பெண்களை ஹுசைன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பெண்களின் நகைகளையும், பணத்தையும் அவர் கொள்ளையடித்து செல்வார். இதற்காக ஹுசைன் மேற்கொண்ட மாஸ்டர் பிளான் தான் போலீசாரை தலைசுற்றவைத்தது.

வழக்கமான புகாராக வரும் சில வழக்குகள் தோண்ட தோண்ட திடுக்கிட வைக்கும். அப்படியான ஒரு வழக்கைத்தான் தற்போது தெலங்கானா போலீசார் முடித்து வைத்துள்ளனர். பாலியல் வன்கொடுமையாக பதிவு செய்யப்பட்ட புகார் ஒன்றில் சீரியல் ரேப்பிஸ்ட் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

கடந்த ஆண்டு 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஜகொண்டா போலீசாருக்கு பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் வந்தது. ஹையாத் நகரில் பாலியல் வன்கொடுமை என்ற புகாரின் கீழ் அது தொடர்பான விசாரணை பத்தோடு பதினொன்றாக நடைபெற்றது. மீண்டும் அதேபகுதியில் இந்த மாதம் மற்றொரு பாலியல் வன்கொடுமை புகார் வந்தது. இதனால் சுதாரித்துக்கொண்ட போலீசார் இந்த வழக்கில் தனிக்கவனம் செலுத்தி விசாரணையை முடுக்கிவிட்டனர். 


மாஸ்டர் பிளான்.. 17 பெண்கள்.. போலீசாரை தலைசுற்ற வைத்த சீரியல் ரேப்பிஸ்ட்.! 

விசாரணையின் முடிவில் ஹுசைன் கான் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு பாலியல் வன்கொடுமையாக தொடங்கப்பட்ட போலீசாருக்கு ஹுசைனின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சையை கொடுத்துள்ளது. ஒன்று, இரண்டு அல்ல மொத்தமாக 17 பெண்களை ஹுசைன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பெண்களின் நகைகளையும், பணத்தையும் அவர் கொள்ளையடித்து செல்வார். இதற்காக ஹுசைன் மேற்கொண்ட மாஸ்டர் பிளான் தான் போலீசாரை தலைசுற்றவைத்தது.

ஹுசைனின் கைதுக்கு பிறகு இந்த வழக்கு குறித்து பேசிய ரஜகொண்டா காவல் ஆணையர் மகேஷ் பஹத், 2016ம் ஆண்டு ஹைதராபாத்தின் கோபாலபுரம் போலீசார் ஒரு வழக்கின் கீழ்  ஹுசைனை ஒரு வருஷம் சிறையில் அடைத்துள்ளனர். பாலியல் வன்கொடுமையை ஹுசைன் மாஸ்டர் பிளானாகவே செய்துள்ளார். சிட்டியில் தனியாக வசிக்கும் பெண்களை கண்காணித்து அவர்களையே டார்கெட் செய்வார் ஹுசைன். தனியாக இருக்கும் பெண்களிடம் பேசியோ, மிரட்டியோ அவர்களை தன் ஆசைக்கு இணங்கவைப்பார். அதுமட்டுமின்றி நிறைய பணம் தருவதாகவும் கூறுவார். இதற்கு தலையசைக்கும் பெண்களை தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச்செல்வார்.


மாஸ்டர் பிளான்.. 17 பெண்கள்.. போலீசாரை தலைசுற்ற வைத்த சீரியல் ரேப்பிஸ்ட்.! 

அங்கு நகை அணிந்திருப்பது இடைஞ்சலாக இருக்குமென்றும், யாராவது வந்தால் நகை, பணத்தை திருடி செல்ல வாய்ப்புண்டு எனவும் பெண்ணிடம் கூறி அவற்றை தனியாக வாங்கி வைத்துக்கொள்வார். பின்னர் இருவரும் தனிமையில் இருந்தபிறகு பெண்ணுக்கே தெரியாமல் நகைகளையும், பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பிவிடுவார். பின்னர் பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குவிசாரணை தொடங்கியது என்றார். 


மாஸ்டர் பிளான்.. 17 பெண்கள்.. போலீசாரை தலைசுற்ற வைத்த சீரியல் ரேப்பிஸ்ட்.! 

தீவிர விசாரணைக்குப் பின் ஹுசைனை சுற்றிவளைத்த போலீசார் அவரிடம் இருந்து தங்க நகைகள், ரூ.45000 ரொக்கம், ஒரு ஸ்கூட்டர், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். தனிமையில் இருக்கும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், சந்தேகம்படும்படியாக யாரேனும் நடந்துகொண்டால் போலீசாரை தொடர்புகொள்ளலாம் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

40 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; லிப்ட் கொடுத்த வாலிபரின் வெறிச்செயல் - பொன்னேரி அருகே பரபரப்பு
40 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; லிப்ட் கொடுத்த வாலிபரின் வெறிச்செயல் - பொன்னேரி அருகே பரபரப்பு
மாறாத தலைநகர்..! 3 குழந்தைகளின் தாய் பரிதாபம், ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது
மாறாத தலைநகர்..! மூன்று குழந்தைகளின் தாய் பரிதாபம், ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது
சுடுகாடு அருகே ரகசிய சாராய விற்பனை: சுமித்ராவை தட்டித்தூக்கிய போலீஸ்...
சுடுகாடு அருகே ரகசிய சாராய விற்பனை: சுமித்ராவை தட்டித்தூக்கிய போலீஸ்...
போதையில் கதவைத் திறந்து வைத்துத் தூக்கம்: புதுச்சேரியில் கார் திருடிய 'பக்கத்து அறை' வாலிபர் 24 மணிநேரத்தில் கைது!
போதையில் கதவைத் திறந்து வைத்துத் தூக்கம்: புதுச்சேரியில் கார் திருடிய 'பக்கத்து அறை' வாலிபர் 24 மணிநேரத்தில் கைது!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை
வெள்ளை அறிக்கை விரைவில்!ஆட்டத்தை தொடங்கிய விஜய்பதற்றத்தில் திமுக
சுக்குநூறான அதிமுக? EPS vs SP வேலுமணி! முற்றும் மோதல்
MA Siddique IAS | நிதித்துறை 'சிங்கம்'விஜய்யின் LIFESAVER..யார் இந்த சித்திக் IAS?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fuel Price Hike: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு.. காலையிலேயே ஷாக்.. எவ்வளவு?
Fuel Price Hike: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு.. காலையிலேயே ஷாக்.. எவ்வளவு?
Aadhav Arjuna: விஜய் முதல்வராக விடாமல் தடுத்த இருவர்.. வெளிப்படையாக சொன்ன ஆதவ் அர்ஜூனா!
Aadhav Arjuna: விஜய் முதல்வராக விடாமல் தடுத்த இருவர்.. வெளிப்படையாக சொன்ன ஆதவ் அர்ஜூனா!
CM Vijay Modi: “இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
“இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
Aadhav Arjuna: போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
US Iran War: ''ஹார்முஸ் ஜலசந்திய திறந்தாலும், இப்போதைக்கு பிரச்னை தீராது.!'' எச்சரிக்கும் சிங்கப்பூர் பிரதமர்
''ஹார்முஸ் ஜலசந்திய திறந்தாலும், இப்போதைக்கு பிரச்னை தீராது.!'' எச்சரிக்கும் சிங்கப்பூர் பிரதமர்
Dharmarajan IPS : ’முதலமைச்சர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி’ யார் இந்த DIG தர்மராஜன் IPS..?
’முதல்வர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி’ யார் இந்த DIG தர்மராஜன்..?
Work From Home: அரசு அலுவலகங்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் Work From Home; முதலமைச்சர் உத்தரவு; டெல்லியில் நடப்பது என்ன.?
அரசு அலுவலகங்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் Work From Home; முதலமைச்சர் உத்தரவு; டெல்லியில் நடப்பது என்ன.?
Embed widget