மேலும் அறிய

மதம் மாறியதாக பொய்… போலிச் சான்றிதழ்கள்..சொத்துக்காக திருமணம்.. புகாரளித்த பெண் அடுக்கிய அதிர்ச்சி தகவல்..

தோழி ஒருவர் திருமண விழாவில் இருவரும் அறிமுகமானோம் என்று அவர் கூறியுள்ளார்.

சொத்துக்காக மதம் மாறியதாக பொய் சொல்லி, போலி சான்றிதழ்கள் காட்டி ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கியதாக பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சுப்பையா என்பவர், தமிழ் நாட்டில் பிறந்து மலேசியாவில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த நிலையில் சுப்பையாவின் மகள் கவிதா தன்னை ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்திருந்தார். நெல்லை டவுன் சிக்கர்தர் தெருவைச் சேர்ந்த இம்ரான் என்பவர் கவிதாவை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றி இருக்கிறார். இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கவிதா பரபரப்பு புகார் அளித்திருந்தார்.

அளிக்கப்பட்ட புகாரில் அவர், இம்ரான் என்பவர் மலேசியாவில் வேலை பார்த்ததாகவும், தனது தோழி ஒருவர் திருமண விழாவில் இருவரும் அறிமுகமானோம் என்றும், பின்னர் பேஸ்புக் மூலம் இம்ரான் தன்னிடம் பழகி, அதன்பிறகு நாளடைவில் எங்கள் பழக்கம் காதலாக மாறி என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறினார் என்று கூறியுள்ளார். 

மதம் மாறியதாக பொய்… போலிச் சான்றிதழ்கள்..சொத்துக்காக திருமணம்.. புகாரளித்த பெண் அடுக்கிய அதிர்ச்சி தகவல்..

மேலும் அந்த புகாரில், "இம்ரான் தன் மத அடையாளத்தையும், பெயரையும் மறைத்து, தான் ஒரு இந்து என்றும் தனது பெயர் அருண்குமார் எனவும் பொய்யாக கூறி இருக்கிறார். ஆனால் அவரிடம் பழகிய பிறகுதான் அவர் ஒரு இஸ்லாமியர் என்ற உண்மை தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது தான் இந்துவாக மதம் மாறி திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். பின்னர் தனது பெயரை அருண் என பெயர் மாற்றி இந்து மதத்திற்கு மாறியதாகவும் எனவே என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சினார்.

அதை நம்பி கடந்த 2019-ஆம் ஆண்டு, அக்டோபர் 30 ஆம் தேதி, அன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கோவிலில் வைத்து இம்ரானை திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தை பதிவு செய்ய கூறியபோது துபாயில் முக்கிய வேலை இருப்பதால் பின்னர் பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டார். திருமணத்துக்கு பிறகு அவருடன் துபாய் சென்று விட்டேன். அதன் பிறகுதான் அவர் போலியாக பெயர் மாற்றம் செய்ததும் பிறப்பு சான்றிதழ் முதல் பல்வேறு சான்றிதழ்களை போலியாக தயாரித்ததும் தெரியவந்தது. மேலும் என்னை ஏமாற்றி பல முறை உடலுறவு மேற்கொண்டார். தற்போது நான் ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளேன்." என்று எழுதி உள்ளார்.

மதம் மாறியதாக பொய்… போலிச் சான்றிதழ்கள்..சொத்துக்காக திருமணம்.. புகாரளித்த பெண் அடுக்கிய அதிர்ச்சி தகவல்..

மேலும் இதுபற்றி அவர் பேசுகையில், "இந்த பிரச்சனை குறித்து அவரிடம் கேட்டபோது, பணத்திற்காக தான் ஏமாற்றி உன்னை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறி என்னை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். அவரது சகோதரி மற்றும் தாயாரும் என்னை தொடர்பு கொண்டு பணம் தருமாறு மிரட்டுகின்றனர். என்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சி செய்கிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.

இந்த மனுவின் அடிப்படையில் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இம்ரான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அவர் கைது செய்யப்படாத நிலையில் கவிதா தனக்கு நீதி கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தார். இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் நான் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவள். இஸ்லாமியரான இம்ரான் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். போலியாக ஆவணங்கள் தயார் செய்து இந்து மதத்திற்கு மாறியதாக பொய் கூறினார். என்னிடம் 14 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். என்னைப் போன்று பல பெண்கள் அவரிடம் ஏமாந்துள்ளனர். எனவே இம்ரானை உடனடியாக கைது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்", என்று தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

மதுரை: மதுபோதையில் சிறுவன் மீது கார் மோதல்; போலீஸ் SPயின் உறவினர் எனக்கூறி தப்பிக்க முயற்சி !
மதுரை: மதுபோதையில் சிறுவன் மீது கார் மோதல்; போலீஸ் SPயின் உறவினர் எனக்கூறி தப்பிக்க முயற்சி !
" நிதி நிறுவன ஊழியருடன் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பழக்கம் " கடையில் நடந்த கத்தி குத்து சம்பவம்
இதை க்ளிக் செய்யாதீங்க! Google Pay-யில் ₹6,000 பரிசு விழுந்திருக்கா? மொத்த பணத்தையும் பறிகொடுக்காதீங்க!
இதை க்ளிக் செய்யாதீங்க! GPay-யில் 6000 பரிசு விழுந்திருக்கா? மொத்த பணத்தையும் பறிகொடுக்காதீங்க!
Crime News: கணவனை கொன்று உடலை துண்டுகளாக்கிய மனைவி..! குடலால் சிக்கியது எப்படி? கொடூர சம்பவம்
: கணவனை கொன்று உடலை துண்டுகளாக்கிய மனைவி..! குடலால் சிக்கியது எப்படி? கொடூர சம்பவம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Free Cooking Gas Scheme : ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
TN Govt: ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
TN Weather News: சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Budget EMI Cars: ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான EMI-யில் கிடைக்கும் 10 கார்கள் - விலை, வட்டி, தவணை - முழு விவரம்
ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான EMI-யில் கிடைக்கும் 10 கார்கள் - விலை, வட்டி, தவணை - முழு விவரம்
Gold and silver rate today : மீண்டும் மீண்டுமா.!! இன்றும் உயர்ந்த தங்கம் விலை- ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை என்ன.?
மீண்டும் மீண்டுமா.!! இன்றும் உயர்ந்த தங்கம் விலை- ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை என்ன.?
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
Embed widget