மேலும் அறிய

கூட்டுறவு நகைக்கடன் மோசடி: சஸ்பென்ட் வங்கி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை!

வங்கியின் செயலாளராக இருந்த நீலகண்டன் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மண்டலம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நகை இல்லாமல் முறைகேடாக உறவினர் பெயரில் ரூ.1.8 கோடி  நகை கடன் வழங்கிய கீரனூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டிருந்தார்.  இந்நிலையில் வங்கியின் செயலாளராக இருந்த நீலகண்டன் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கூட்டுறவு நகைக்கடன் மோசடி: சஸ்பென்ட் வங்கி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை!

அவர் மீது எடுத்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும், அது தொடர்பாக துறை சார்ந்து வெளியிடப்பட்ட குறிப்புகள் கீழே உள்ளது:

 

புதுக்கோட்டை மண்டலம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி யங்கியில் நகைக் கடல் முறைகேடு தொடர்பான சிறு குறிப்பு:

கூட்டுறவுச் சங்கங்களின் மாநில பதிவாளர் அர்களால் 31.03.2021 அன்று நிலுவையிலுள்ள கடன்களை 100% அறிவுறுத்தியதற்கிணங்க புதுக்கோட்டை மண்டலத்தில் செயல்பட்டு வரும் DRL(IT).10 கிரனூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் தஞ்சாவூர் மண்டல ஆய்வுக் குழுவின் மூலம் 100% நகைக் கடன் ஆய்வு செய்திட ஆணையிடப்பட்டு அக்குழுவினர் 07,12.2021 அன்று ஆய்வு செய்தபோது, நகைகள் இல்லாமல் கொடுத்த கடன்களின் வகைகளில் கீழ்க்கண்டவாறு நகைப் பொட்டலங்கள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

 

விபரம் நகை பொட்டலங்கள் எண்ணிக்கை கடன் தொகை ரூ.
பட்டியல் நகை இருப்பு 934 3,63,14,200
7.12.2021 சரிபார்த்த நகை பொட்டலங்கள் 832 2,54,96,700
இருப்பில் இல்லாத நகை பொட்டலங்கள் 102 1,08,17,500

மண்டல இணைப்பதிவாளர் அவர்களால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மேற்படி வங்கியின் நகை பெட்டக சாவிகள் மேலாண்மை இயக்குநரால் கைப்பற்றப்பட்டது. ஆய்வு அலுவலரால் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 102 கடன்களும், வங்கியில் பணியாற்றும் பணியாளர்களது உறவினர்களின் நகைக் பெயரில் வழங்கப்பட்டவைகளா எனவும் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களின் உறவினர்கள் பெயரிலும், வழங்கப்பட்டுள்ளதா எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.


கூட்டுறவு நகைக்கடன் மோசடி: சஸ்பென்ட் வங்கி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை!

முறைகேடுகள் தொடர்பாக வங்கிச் செயலாளர் திரு.பி.நீலகண்டன் மற்றும் மேற்பார்வையாளர் திரு.என்.சக்திவேல் ஆகிய இருவரும் தற்காலிகப்பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வங்கியின் நகை மதிப்பீட்டாளர் திரு.என்.கனகவேலு வங்கியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இம்முறைகேட்டினை குற்றமுறு நோக்குடன் மேற்கொண்டுள்ளதால் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.

மேலும் இம்முறைகேடுகள் தொடர்பாக 1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 81-இன் கீழ் விரிவான விசாரணைக்கு ஆணையிடப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக் குழுவின் முதன்மை அறிக்கையின்படி முறைகேடு செய்யப்பட்ட நகைக் கடன் தொகை ரூ 1,08.17,500-ம் மேற்படி வங்கியின் செயலாளர், மேற்பார்வையாளர் மற்றும் நகை மதிப்பிட்டாளர் ஆகியோரிடமிருந்து மொத்தத் தொகையும் தீவிர மற்றும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முழுவதுமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

என்று அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வங்கி செயலர் தற்கொலை செய்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அவசரமாக பணம் தேவை !! காதலனுக்காக தாயின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்த மகள் !! நடந்தது என்ன ?
அவசரமாக பணம் தேவை !! காதலனுக்காக தாயின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்த மகள் !! நடந்தது என்ன ?
19 வயது இளம் பெண்ணுக்கு , காதல் டார்ச்சர் கொடுத்த 65 வயது முதியவர் !!
19 வயது இளம் பெண்ணுக்கு , காதல் டார்ச்சர் கொடுத்த 65 வயது முதியவர் !!
" இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவு " சாலையில் கணவன் செய்த வெறிச் செயல்
" உன்னுடன் இருப்பது யார் " இளம் பெண்ணுக்கு வந்த போன் கால் !! பதறிய இளம் பெண் - நடந்தது என்ன ?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
Railway announcement : திண்டிவனம், திருவள்ளூர், புதுக்கோட்டையில் இனி ரயில்கள் நிற்கும்- பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு
திண்டிவனம், திருவள்ளூர், புதுக்கோட்டையில் இனி ரயில்கள் நிற்கும்- பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Embed widget