மேலும் அறிய

Crime: நகை கடைக்காரர் மகன்கள் கடத்தல்: பெங்களூரில் பதுங்கி இருந்த 3 பேர்துப்பாக்கி முனையில் கைது!

திருவண்ணாமலை நகை கடைக்காரர் மகன்களை 70 லட்சம் ரூபாய் பணத்திற்காக கடத்தப்பட்ட விவகாரத்தில் பெங்களூருவில் பதுங்கி இருந்த 3 நபர்களை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்

திருவண்ணாமலை அய்யகுளம் தெருவை சேர்ந்த நரேந்திர குமார் இவர் திருவண்ணாமலை கள்ளக்கடை சந்திப்பில் நகை கடை வைத்துள்ளார்.  இவரது மகன்களான ஜித்தேஷ் வயது (29), அரியந் வயது (27) ஆகிய இருவரும் அவருடைய தந்தையின் கடையை பார்த்துக்கொள்கின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு  இருவரும் வழக்கம் போல் கடையில் வியாபாரம் முடிந்ததும் வீட்டுக்கு புறப்பட்டனர்.  இரவு 10 மணிக்கு இவர்களுடைய இருசக்கர வாகனத்தில்  சென்ற போது காரில் வந்த ஒரு மர்ம கும்பல் திடீரென இரு சக்கர  வாகனத்தை வழிமறித்து இருவரையும் வலுக்கட்டாயமாக காரில்  ஏற்றி கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்தி சென்றுள்ளர். இந்த செயலை அங்கிருந்தவர்கள் கண்டதும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நரேந்திர குமாரை கடத்தல் கும்பல் தொலைபேசியில்  தொடர்பு கொண்டு உங்கள் மகன் விடுவிக்க வேண்டுமெனில் 70 லட்சம் ரூபாய் தர வேண்டும். பணத்தை எங்கு வைத்து கொடுக்க வேண்டும் என பின்னர் கூறுகிறோம் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளனர்.


Crime: நகை கடைக்காரர் மகன்கள் கடத்தல்: பெங்களூரில் பதுங்கி இருந்த 3 பேர்துப்பாக்கி முனையில் கைது!

நகை கடைக்காரர் மகன்கள் கடத்தல்

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் அவரை தொடர்பு கொண்டு என்னிடம் இவ்வளவு தொகை இல்லை என அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே  பேரம் நடந்து ஒரு வழியாக 10 லட்சம் ரூபாய் தர முடிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த பணத்தை திருக்கோவிலூர் சாலையில் அருகே வந்து தருமாறு கூறியுள்ளார். இது குறித்து காவல்துறைக்கு எந்தவித  தகவலும் தெரிவிக்க கூடாது என்றும், கடத்தல் கும்பல் மிரட்டி உள்ளது. இருப்பினும் நரேந்திர குமார் இது குறித்து திருவண்ணாமலை நகர காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னால் கடத்தல் கும்பல் கூறியது; உடனடியாக  பத்து லட்சம் ரூபாய் உடன் அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்று பணத்தை கொடுத்தார் பணத்தைப் பெற்றுக் கொண்டதும் ஜித்தேஷ் அரியந்து ஆகிய இரண்டு பேரை காரில் இருந்து இறக்கிவிட்டு பணத்துடன் தப்பினர். இந்த நிலையில் அந்த நபர்களை  பின்தொடர்ந்து சென்ற காவல்துறையினர் செங்கம் அருகே மடக்கினர்.

 

 

Crime: நகை கடைக்காரர் மகன்கள் கடத்தல்: பெங்களூரில் பதுங்கி இருந்த 3 பேர்துப்பாக்கி முனையில் கைது!

கடத்துவதற்கு மூளையாக இருந்த சித்தப்பா உட்பட 4 பேர் கைது

அதனை தொடர்ந்து காரில் இருந்த பெங்களூரைச் சேர்ந்த விக்ரம், மனு, வாசிம் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் பிடித்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் நரேந்திர குமாரின்  தம்பியும் கடத்தப்பட்ட இரண்டு பேரின் சித்தப்பாவுமான திருவண்ணாமலை சேர்ந்த அன்ஸராஜ் என்பவர் இதில் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.  இதனை அடுத்து அன்ஸ்ராஜ் விக்ரம், மனு, வாசிம் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூருவை சேர்ந்த பில்லா என்பவர் இதற்கு மூளையாக செயல்பட்டதும், திருவண்ணாமலை அடுத்த பறையம்பட்டு  பகுதியைச் சேர்ந்த சீனு, அண்ணாமலை, பிரவீன்குமார் ஆகியோர் கடத்தலில்  ஈடுபட்டதும் அவர்கள் அனைவரும்  பெங்களூரில் பதுங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.


Crime: நகை கடைக்காரர் மகன்கள் கடத்தல்: பெங்களூரில் பதுங்கி இருந்த 3 பேர்துப்பாக்கி முனையில் கைது!

பெங்களூருவில் பதுங்கி இரந்த மூன்று பேர் கைது

அதனை தொடர்ந்து காவல்துறையினர் நேற்று முன்தினம் பெங்களூர் சென்று அங்கு பதுங்கி இருந்த பில்லா வயது (23) திருவண்ணாமலை அடுத்த பறையம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் வயது (24), சதீஷ் வயது (25) ஆகிய மூன்று பேரையும் பிடித்து திருவண்ணாமலைக்கு காலை அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் மூன்று பேரையும்  மாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதுவரை இந்த கடத்தல் வழக்கில் ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக பறையம்பட்டை சேர்ந்த சீனு, அண்ணாமலை, பிரவீன் குமார் உட்பட பலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்
லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்
Embed widget