மேலும் அறிய

Crime : ஜேஇஇ தேர்வில் மோசடி.. மென்பொருள் ஹேக்கிங்.. மோசடி நபரை சிபிஐ வளைத்துப்பிடித்தது எப்படி?

கடந்த 2021ஆம் ஆண்டு, லட்சகணக்கான மாணவர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகளில் மோசடி நடந்துள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

நாட்டின் புகழ்பெற்ற உயர் கல்வி நிலையங்களான ஐஐடி போன்றவற்றில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இது ஜேஇஇ முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வு என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. ஜேஇஇ முதல்நிலை தேர்வு, கணினி வழியாக நாடு முழுவதும் நடத்தப்பட்டது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.

கடந்த 2021ஆம் ஆண்டு, லட்சகணக்கான மாணவர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகளில் மோசடி நடந்துள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. மோசடிக்கு காரணமான ரஷியாவை சேர்ந்த நபரிடம் விசாரணை செய்து வருவதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில், உலகப் புகழ்பெற்ற டிசிஎஸ் நிறுவனம் உருவாக்கிய தேர்வுக்கான மென்பொருளை ரஷியரான மிகைல் ஷார்கின் ஹேக் செய்ததாக சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், கஜகஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்து இறங்கிய ஷார்கின் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த தேர்வில் மோசடி செய்ததற்காக ஷார்கின் தேடப்பட்டு வருவது விமான நிலைய அலுவலர்களுக்கு தெரியும். ஜேஇஇ முதல்நிலை தேர்வுக்கான தளமாக இருந்த டிசிஎஸ் மென்பொருளை ஹேக் செய்து, தேர்வெழுதும் விண்ணப்பதாரர்களின் கணினி முனையங்களைக் அவர் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஷார்கின் ஹேக்கிங் செய்ததன் மூலம், மாணவர்கள் ஏமாற்ற முடிந்தது. குறிப்பிட்ட மாணவரின் கணினி வழியாக அவருக்கு பதிலாக வேறொருவர் தேர்வை எழுத இந்த ஹேக்கிங் பயன்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ள அஃபினிட்டி எஜுகேஷன் என்ற தனியார் பயிற்சி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மாணவர்கள் தலா 12 முதல் 15 லட்சம் வரை வழங்கி வினாவுக்கு பதில் எழுத வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் பல வெளிநாட்டவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

20 மாணவர்கள் ஏமாற்றியதாக நம்பப்பட்டு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்வெழுத அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு, பல்வேறு நகரங்களில் சோதனை நடத்தி சிபிஐ வழக்குப் பதிவு செய்து, மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் பிற உபகரணங்களை பறிமுதல் செய்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs Australia LIVE SCORE: அதிரடி காட்டிய இந்திய அணி.. ஆஸ்திரேலியாவிற்கு 206 ரன்கள் இலக்கு!
India vs Australia LIVE SCORE: அதிரடி காட்டிய இந்திய அணி.. ஆஸ்திரேலியாவிற்கு 206 ரன்கள் இலக்கு!
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய சொன்னாரா ஆர்.என்.ரவி? ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய சொன்னாரா ஆர்.என்.ரவி? ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
NEET:
NEET: "நீட்டை ஒழிக்க வேண்டும்.. தேர்வுகளை மாநிலங்களே நடத்த வேண்டும்" திமுகவை பின்பற்றும் மம்தா!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs Australia LIVE SCORE: அதிரடி காட்டிய இந்திய அணி.. ஆஸ்திரேலியாவிற்கு 206 ரன்கள் இலக்கு!
India vs Australia LIVE SCORE: அதிரடி காட்டிய இந்திய அணி.. ஆஸ்திரேலியாவிற்கு 206 ரன்கள் இலக்கு!
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய சொன்னாரா ஆர்.என்.ரவி? ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய சொன்னாரா ஆர்.என்.ரவி? ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
NEET:
NEET: "நீட்டை ஒழிக்க வேண்டும்.. தேர்வுகளை மாநிலங்களே நடத்த வேண்டும்" திமுகவை பின்பற்றும் மம்தா!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Embed widget