மேலும் அறிய

சென்னையில் கொசுவை விரட்ட வீட்டில் புகை: மூச்சு திணறி 2 பேர் பலி; 2 பேர் கவலைக்கிடம்!

சென்னை பல்லாவரம் அருகே கொசுவை விரட்டுவதற்காக போடப்பட்ட புகை மூட்டத்தால் இருவர் உயிரிழந்தனர். மேலுமு் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த, பம்மல், திருவள்ளுவர் தெரு, பொன்னி நகரில் ஒரு வீட்டில் நான்கு பேர் இரவு தூங்கியுள்ளனர்.இன்று காலை வீடு முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து வீட்டில் இருந்து புகை வெளியே வரத்துவங்கியுள்ளது. இதனை கண்ட மேல் தளத்தில் குடியிருக்கும் பெண் ஒருவர் வீட்டின் உரிமையாளர் மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொசுவை விரட்ட வீட்டில் புகை: மூச்சு திணறி 2 பேர் பலி; 2 பேர் கவலைக்கிடம்!
தகவலின் பேரில் மகன் வந்து கதவை தட்டியும் திறக்காததால் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நான்கு பேர் படுத்த நிலையில் இருந்துள்ளனர். நான்கு பேரையும் மீட்டு ஆட்டோ மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் புஷ்பலட்சுமி (55) என்ற பெண் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
சென்னையில் கொசுவை விரட்ட வீட்டில் புகை: மூச்சு திணறி 2 பேர் பலி; 2 பேர் கவலைக்கிடம்!
மீதமுள்ள மூவரின் நிலை மோசமாக இருப்பதாக கூறி மேல் சிகிச்சைகாக இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 11 வயது சிறுவனை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மருத்துவமனையில் சொக்கலிங்கம் (61), இவரது மகள் மல்லிகா (38), மல்லிகாவின் மகன் விஷால் (11), ஆகியோர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், விஷால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சென்னையில் கொசுவை விரட்ட வீட்டில் புகை: மூச்சு திணறி 2 பேர் பலி; 2 பேர் கவலைக்கிடம்!
சொக்கலிங்கம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனியில் கம்பவுண்டராக இருந்து ஓய்வு பெற்றவர். போலீசார் விசாரணையில் வீட்டிற்கு வெளியே சிறிய தட்டில் அடுப்பு கரியை கொண்டு எரியவிட்டு புகை போட்டுள்ளனர். அதே போல் வீட்டின் சமையலறையில் அடுப்பில் எண்ணெய் டின்னில் கரியை போட்டு எரித்து கொசுவை விரட்ட முயற்சித்துள்ளனர். பின்னர் அனைவரும் படுக்கையறையில் ஏசியை போட்டு விட்டு படுத்து உறங்கியுள்ளனர்.

சென்னையில் கொசுவை விரட்ட வீட்டில் புகை: மூச்சு திணறி 2 பேர் பலி; 2 பேர் கவலைக்கிடம்!
கொசுவை விரட்ட போடப்பட்ட புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நான்கு பேரும் மயக்க நிலைக்கு சென்றுள்ளனர். ஏற்கனவே புஷ்பலட்சுமி உயிரிழந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் விஷால் (11), என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் விசாரித்து வரும் நிலையில் பிரேத பரிசோதனையில் முடிவில் தான் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்கின்றனர். கொசுவை விரட்ட புகை மூட்டம் போட்டதால் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி இருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நாம் அலட்சியமாக செய்யும் சிறு தவறுகள் கூட நோயும் நம்மை சுற்றியுள்ளவர்கள், உயிருக்கே ஆபத்தாக போய் முடிந்து விடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
Embed widget