மேலும் அறிய

மாஸ்க் அணியாமல் வந்த பெண் : ஒரு வருடமாக போலீஸ் கான்ஸ்டபிளே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்..!

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது மாஸ்க் அணியாமல் வந்த பெண்ணை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஒராண்டாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த கொடுமை நடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் அவ்வப்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் தொற்று பாதிப்புக்கு ஏற்றவாறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது பெண் ஒருவர் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்துள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்தச் சம்பவம் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த காவல்துறை கான்ஸ்டபிள் நரேஸ் கபாடியா. இவர் கடந்த ஜனவரி மாதம் இவர் பெண்ணுடன் சண்டை போடுவது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அதன்பின்னர் இவருடைய மனைவி அந்தப் பெண் மற்றும் அவரது கணவர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தார். அதில் அந்தப் பெண்ணும் அவருடைய கணவரும் கான்ஸ்டபிளை ஜாதியின் பெயரில் கொடுமை படுத்துவதாக கூறியதாக தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு திடுக்கிடும் உண்மை வெளியாகியுள்ளது. 


மாஸ்க் அணியாமல் வந்த பெண் : ஒரு வருடமாக போலீஸ் கான்ஸ்டபிளே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்..!

அதாவது கடந்த 2020-ஆம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் கான்ஸ்டபிள் கபாடியா பால்சானா பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளார். அந்தச் சமயத்தில் இப்பெண் முகக்கவசம் அணியாமல் வெளியே பால் வாங்க வந்துள்ளார். அப்போது அவரை பிடித்த கபாடியா அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் வேறு இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் அப்பெண்ணை நிர்வாணமாக படம் எடுத்ததாகவும் அதை வைத்து மிரட்டி கடந்த ஓராண்டாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக அப்பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது கான்ஸ்டபிள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு காவலர், "கபாடியாவிற்கு அந்தப் பெண்ணுடன், கடந்த ஓராண்டிற்கு மேலாக தகாத உறவு இருந்தது வந்தது. அவர்கள் அடிக்கடி தனிமையில் இருந்து வந்தனர். எனினும் தற்போது அவர்கள் இருவருக்கு நடுவே பிரச்னை ஏற்படவே அப்பெண் புகார் அளித்துள்ளதார்" எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு ஏற்கெனவே திருமணமானமவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையின் காவலர் மீதே இந்த மாதிரியான பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரைவாக விசாரணை செய்து அந்த காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

மேலும் படிக்க:  புகாரளித்த சிறுமி.. ஜாமினில் வந்து வன்கொடுமை செய்த கொடூரன்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

8 ஏக்கர் நில தகராறு !! கிணற்று நீருக்காக எழுந்த சண்டை !! அண்ணன் தம்பியை கொன்ற சோகம் !!
8 ஏக்கர் நில தகராறு !! கிணற்று நீருக்காக எழுந்த சண்டை !! அண்ணன் தம்பியை கொன்ற சோகம் !!
மனைவி மீது சந்தேகம் !! கணவனை கொன்று நாடகமாடிய மனைவி !! கொலைக்கு தம்பி உதவியா ?
மனைவி மீது சந்தேகம் !! கணவனை கொன்று நாடகமாடிய மனைவி !! கொலைக்கு தம்பி உதவியா ?
சிவகங்கை: மோசடி நிதி நிறுவனங்கள் வலையில் சிக்காதீர்! காவல்துறை எச்சரிக்கை, விழிப்புணர்வு அவசியம்! 🚨
சிவகங்கை: மோசடி நிதி நிறுவனங்கள் வலையில் சிக்காதீர்! காவல்துறை எச்சரிக்கை, விழிப்புணர்வு அவசியம்! 🚨
சாத்தான்குளம் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேரும் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சி தரும் காரணம் என்ன?
சாத்தான்குளம் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேரும் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சி தரும் காரணம் என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Affidavit: 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?
TVK Vijay Affidavit: 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?
GOLD SILVER RATE: அதிர்ச்சி கொடுத்த தங்கம்; காலையில் குறைந்து மாலையில் இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
அதிர்ச்சி கொடுத்த தங்கம்; காலையில் குறைந்து மாலையில் இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
“செந்தில் பாலாஜிக்கு சவால்
“செந்தில் பாலாஜிக்கு சவால்" - நாணயங்களுடன் வந்த நாம் தமிழர் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்...
TVK Vijay Campaign: ’’ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க; சென்னையின் அடையாளம், வீட்டு வாசல்ல தொடங்கறேன்’’ உருகிய விஜய்!
TVK Vijay Campaign: ’’ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க; சென்னையின் அடையாளம், வீட்டு வாசல்ல தொடங்கறேன்’’ உருகிய விஜய்!
TN Election: தகிக்கும் தேர்தல் களம்; முதல் நாள்லயே ஒன்றாய் சம்பவம் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக விஜய்
TN Election: தகிக்கும் தேர்தல் களம்; முதல் நாள்லயே ஒன்றாய் சம்பவம் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக விஜய்
தோளில் ஏர்க்கலப்பை.. மாட்டு வண்டியில் பேரணி - மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் அதிரடி மனுத்தாக்கல்...!
தோளில் ஏர்க்கலப்பை.. மாட்டு வண்டியில் பேரணி - மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் அதிரடி மனுத்தாக்கல்...!
iPhone 18 Leaks: இறுதியாக, சிறிய டைனமிக் ஐலேண்ட்டுடன் வரும் ஐபோன் 18; இணையத்தில் கசிந்த புகைப்படம், தகவல்கள்
இறுதியாக, சிறிய டைனமிக் ஐலேண்ட்டுடன் வரும் ஐபோன் 18; இணையத்தில் கசிந்த புகைப்படம், தகவல்கள்
Vinfast Electric Scooter: வரப்போது வின்ஃபாஸ்ட் இ ஸ்கூட்டர்! ஒன்னு இல்ல மூணு..! என்னென்ன தெரியுமா?
Vinfast Electric Scooter: வரப்போது வின்ஃபாஸ்ட் இ ஸ்கூட்டர்! ஒன்னு இல்ல மூணு..! என்னென்ன தெரியுமா?
Embed widget