மேலும் அறிய

மாஸ்க் அணியாமல் வந்த பெண் : ஒரு வருடமாக போலீஸ் கான்ஸ்டபிளே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்..!

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது மாஸ்க் அணியாமல் வந்த பெண்ணை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஒராண்டாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த கொடுமை நடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் அவ்வப்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் தொற்று பாதிப்புக்கு ஏற்றவாறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது பெண் ஒருவர் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்துள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்தச் சம்பவம் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த காவல்துறை கான்ஸ்டபிள் நரேஸ் கபாடியா. இவர் கடந்த ஜனவரி மாதம் இவர் பெண்ணுடன் சண்டை போடுவது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அதன்பின்னர் இவருடைய மனைவி அந்தப் பெண் மற்றும் அவரது கணவர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தார். அதில் அந்தப் பெண்ணும் அவருடைய கணவரும் கான்ஸ்டபிளை ஜாதியின் பெயரில் கொடுமை படுத்துவதாக கூறியதாக தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு திடுக்கிடும் உண்மை வெளியாகியுள்ளது. 


மாஸ்க் அணியாமல் வந்த பெண் : ஒரு வருடமாக போலீஸ் கான்ஸ்டபிளே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்..!

அதாவது கடந்த 2020-ஆம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் கான்ஸ்டபிள் கபாடியா பால்சானா பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளார். அந்தச் சமயத்தில் இப்பெண் முகக்கவசம் அணியாமல் வெளியே பால் வாங்க வந்துள்ளார். அப்போது அவரை பிடித்த கபாடியா அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் வேறு இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் அப்பெண்ணை நிர்வாணமாக படம் எடுத்ததாகவும் அதை வைத்து மிரட்டி கடந்த ஓராண்டாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக அப்பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது கான்ஸ்டபிள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு காவலர், "கபாடியாவிற்கு அந்தப் பெண்ணுடன், கடந்த ஓராண்டிற்கு மேலாக தகாத உறவு இருந்தது வந்தது. அவர்கள் அடிக்கடி தனிமையில் இருந்து வந்தனர். எனினும் தற்போது அவர்கள் இருவருக்கு நடுவே பிரச்னை ஏற்படவே அப்பெண் புகார் அளித்துள்ளதார்" எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு ஏற்கெனவே திருமணமானமவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையின் காவலர் மீதே இந்த மாதிரியான பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரைவாக விசாரணை செய்து அந்த காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

மேலும் படிக்க:  புகாரளித்த சிறுமி.. ஜாமினில் வந்து வன்கொடுமை செய்த கொடூரன்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
ABP Premium

வீடியோ

Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
New Kia Seltos Vs Honda Elevate: புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
Embed widget