மேலும் அறிய

தூக்கிய ஆடுகள்... தாக்கிய பொதுமக்கள்... வீங்கிய முகம்: சத்தம் போட்டதால் சட்டை கிழிந்த பரிதாபம்!

பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல இப்பகுதியில் பல நாட்கள் ஆடுகளை திருடி வந்த இருவர் சிக்கியுள்ளனர்.

விளாத்திகுளம் அருகே ஆடுகள் திருடிய 2 பேர்  - ஆடுகள் கத்தியதால் தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த கிராம மக்கள்  - பல நாள் திருடன் ஒருநாள் அகப்பட்ட கதையாக மாட்டிக்கொண்ட திருடர்கள்


                                   தூக்கிய ஆடுகள்... தாக்கிய பொதுமக்கள்... வீங்கிய முகம்: சத்தம் போட்டதால் சட்டை கிழிந்த பரிதாபம்!
 
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பெரியசாமிபுரம் கிராமத்தில்  ஆடு திருடிய தூத்துக்குடியை சேர்ந்த செந்தில் குமார், கருப்பசாமி ஆகிய  2பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆடு திருட பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆடுகளை திருடி கொண்டு இருவரும் தப்பிக்க முயன்றபோது ஆடுகள் கத்தியதால் இருவரும் மாட்டிக் கொண்டனர். கிராம மக்கள் சுற்றிவளைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் 
 

                                   தூக்கிய ஆடுகள்... தாக்கிய பொதுமக்கள்... வீங்கிய முகம்: சத்தம் போட்டதால் சட்டை கிழிந்த பரிதாபம்!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் பெல்லார்மின் மகன் காமராஜ் ஞானமணி (38). இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று இவரது வீட்டிற்குள் கட்டி  வைத்திருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி, இருசக்கர வாகனம் மூலம் கொண்டு செல்ல முயன்றுள்ளனர். அப்போது இரண்டு ஆடுகளும் கத்தி விட ஞானமணி மற்றும் அருகில் இருந்தவர்கள் ஆடுகளை திருடிச் சென்ற மர்மநபர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்தனர் இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஓடி வந்து சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து பெரியசாமிபுரம் கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சிறை பிடித்து வைத்தனர், பின்பு சூரங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆடுகளை திருடியவர்கள் தூத்துக்குடி தெர்மல் நகரைச் சேர்ந்த கனி மகன் செந்தில்குமார் (36) மற்றும் தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியை சேர்ந்த பெரியநாயகம் மகன் கருப்பசாமி (46)  என்பது தெரியவந்தது.

                                   தூக்கிய ஆடுகள்... தாக்கிய பொதுமக்கள்... வீங்கிய முகம்: சத்தம் போட்டதால் சட்டை கிழிந்த பரிதாபம்!
இதையடுத்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் கைது செய்தார். இருவர் மீதும் திருச்செந்தூர், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும் 

                                   தூக்கிய ஆடுகள்... தாக்கிய பொதுமக்கள்... வீங்கிய முகம்: சத்தம் போட்டதால் சட்டை கிழிந்த பரிதாபம்!
மேலும் அவர்களிடமிருந்து ரூ.13 ஆயிரம் மதிப்பிலான 2 ஆடுகளும், திருட பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.பெரியசாமிபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக  பகல் நேரங்களில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போன நிலையில் , இவர்கள் இருவரும் சிக்கியதும், அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து கிராம மக்களே பிடித்துக் கொடுத்துள்ளனர். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல இப்பகுதியில் பல நாட்கள் ஆடுகளை திருடி வந்த இருவர் சிக்கியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

கதறும் 70 வயது மூதாட்டி.. கண்டுகொள்ளாத காவல்துறை? சீர்காழியில் வெளிச்சத்திற்கு வந்த பகீர் சம்பவம்!
கதறும் 70 வயது மூதாட்டி.. கண்டுகொள்ளாத காவல்துறை? சீர்காழியில் வெளிச்சத்திற்கு வந்த பகீர் சம்பவம்!
பழைய குழம்பு வைத்ததால் ஆத்திரம் !! மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவனால் பரபரப்பு
பழைய குழம்பு வைத்ததால் ஆத்திரம் !! மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவனால் பரபரப்பு
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் கொடூரம் !! மகள் - மருமகனை அரிவாளால் வெட்டிய தந்தை
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் கொடூரம் !! மகள் - மருமகனை அரிவாளால் வெட்டிய தந்தை
பூமிக்கு அடியில் 1.5 கி.மீ தூரம் ரகசியத் துளை? மயிலாடுதுறையில் சிக்கிய ஓஎன்ஜிசியின் 'சைடு ட்ராக்கிங்' முயற்சி?
பூமிக்கு அடியில் 1.5 கி.மீ தூரம் ரகசியத் துளை? மயிலாடுதுறையில் சிக்கிய ஓஎன்ஜிசியின் 'சைடு ட்ராக்கிங்' முயற்சி?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
A Raja DMK : “வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
“வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
Pension : ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
Rameswaram New Road : ராமேஸ்வரத்திற்குள் செல்ல 100 அடி அகலத்தில் புதிய மாற்று சாலை.! 36 கோடியில்- எந்த வழியில் செல்லுது தெரியுமா.?
ராமேஸ்வரம் செல்ல இனி புதிய வழி.! 100 அடி அகலத்தில் மாற்றுச்சாலை- பிரம்மாண்ட திட்டம்- எந்த வழியில்.?
தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!
தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!
Power Cuts Electricity Purchase : மின்வெட்டுக்கு குட்பை.! 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மின்வெட்டுக்கு குட்பை.! 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Indonesia: 243 பேருடன் காணாமல் போன கப்பல்.. இந்தோனேசியாவில் அதிகாலையில் நேர்ந்த கொடூரம்!
Indonesia: 243 பேருடன் காணாமல் போன கப்பல்.. இந்தோனேசியாவில் அதிகாலையில் நேர்ந்த கொடூரம்!
நடிகர் அஜித்குமார் கார் ரேஸ்.! சிஎம் விஜய் தொடங்கி வைத்தது ஏன்.? இது தான் காரணம்- தமிழக அரசு அறிக்கை
நடிகர் அஜித்குமார் கார் ரேஸ்.! சிஎம் விஜய் தொடங்கி வைத்தது ஏன்.? இது தான் காரணம்- தமிழக அரசு அறிக்கை
Embed widget