மேலும் அறிய

தூக்கிய ஆடுகள்... தாக்கிய பொதுமக்கள்... வீங்கிய முகம்: சத்தம் போட்டதால் சட்டை கிழிந்த பரிதாபம்!

பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல இப்பகுதியில் பல நாட்கள் ஆடுகளை திருடி வந்த இருவர் சிக்கியுள்ளனர்.

விளாத்திகுளம் அருகே ஆடுகள் திருடிய 2 பேர்  - ஆடுகள் கத்தியதால் தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த கிராம மக்கள்  - பல நாள் திருடன் ஒருநாள் அகப்பட்ட கதையாக மாட்டிக்கொண்ட திருடர்கள்


                                   தூக்கிய ஆடுகள்... தாக்கிய பொதுமக்கள்... வீங்கிய முகம்: சத்தம் போட்டதால் சட்டை கிழிந்த பரிதாபம்!
 
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பெரியசாமிபுரம் கிராமத்தில்  ஆடு திருடிய தூத்துக்குடியை சேர்ந்த செந்தில் குமார், கருப்பசாமி ஆகிய  2பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆடு திருட பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆடுகளை திருடி கொண்டு இருவரும் தப்பிக்க முயன்றபோது ஆடுகள் கத்தியதால் இருவரும் மாட்டிக் கொண்டனர். கிராம மக்கள் சுற்றிவளைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் 
 

                                   தூக்கிய ஆடுகள்... தாக்கிய பொதுமக்கள்... வீங்கிய முகம்: சத்தம் போட்டதால் சட்டை கிழிந்த பரிதாபம்!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் பெல்லார்மின் மகன் காமராஜ் ஞானமணி (38). இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று இவரது வீட்டிற்குள் கட்டி  வைத்திருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி, இருசக்கர வாகனம் மூலம் கொண்டு செல்ல முயன்றுள்ளனர். அப்போது இரண்டு ஆடுகளும் கத்தி விட ஞானமணி மற்றும் அருகில் இருந்தவர்கள் ஆடுகளை திருடிச் சென்ற மர்மநபர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்தனர் இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஓடி வந்து சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து பெரியசாமிபுரம் கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சிறை பிடித்து வைத்தனர், பின்பு சூரங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆடுகளை திருடியவர்கள் தூத்துக்குடி தெர்மல் நகரைச் சேர்ந்த கனி மகன் செந்தில்குமார் (36) மற்றும் தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியை சேர்ந்த பெரியநாயகம் மகன் கருப்பசாமி (46)  என்பது தெரியவந்தது.

                                   தூக்கிய ஆடுகள்... தாக்கிய பொதுமக்கள்... வீங்கிய முகம்: சத்தம் போட்டதால் சட்டை கிழிந்த பரிதாபம்!
இதையடுத்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் கைது செய்தார். இருவர் மீதும் திருச்செந்தூர், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும் 

                                   தூக்கிய ஆடுகள்... தாக்கிய பொதுமக்கள்... வீங்கிய முகம்: சத்தம் போட்டதால் சட்டை கிழிந்த பரிதாபம்!
மேலும் அவர்களிடமிருந்து ரூ.13 ஆயிரம் மதிப்பிலான 2 ஆடுகளும், திருட பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.பெரியசாமிபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக  பகல் நேரங்களில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போன நிலையில் , இவர்கள் இருவரும் சிக்கியதும், அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து கிராம மக்களே பிடித்துக் கொடுத்துள்ளனர். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல இப்பகுதியில் பல நாட்கள் ஆடுகளை திருடி வந்த இருவர் சிக்கியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Embed widget