மேலும் அறிய

சென்னையில் புற்றீசல் போல கஞ்சா கும்பல்... அடுத்தடுத்து கைது... ஆனால் அடங்காத விற்பனை!

கஞ்சா வேட்டையின் தீவிரமாக, சென்னையில் மற்றொரு பிரபல கஞ்சா கும்பல் கைதாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான குற்றங்கள், கஞ்சாவை முன்வைத்தே நடக்கிறது.கொலை , கொள்ளை, திருட்டு மிரட்டல் அனைத்து சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கும் காரணமாக இருப்பது, கஞ்சா மட்டுமே. அதனால் தான் கஞ்சாவை ஒழிக்க தமிழ்நாடு காவல் துறை சிறப்பு முயற்சியை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வரும் கஞ்சாவை ஆரம்ப வழியில் தடுக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து கஞ்சா கும்பல்கள் கைது நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த தேடுதல் வேட்டை நடந்தாலும், தலைநகர் சென்னையில் தான் அதிக அளவில் கஞ்சா வேட்டையில் பலர் சிக்கி வருகின்றனர். அதற்கு காரணம், அருகில் ஆந்திரா இருப்பதால், சென்னை வழியாக தான், தமிழகத்தில் கஞ்சா ஊடுருவுகிறது. அதை தடுத்தால் பிற பகுதிகளுக்கு செல்வது கட்டுப்படும். அது மட்டுமின்றி, தலைநகரில் நேரடியாக கஞ்சா விற்பனைக்கு வருவது, பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.


சென்னையில் புற்றீசல் போல கஞ்சா கும்பல்... அடுத்தடுத்து கைது... ஆனால் அடங்காத விற்பனை!

அந்த வகையில் சென்னையில் அடுத்தடுத்து கஞ்சா குற்றவாளிகள் கைதாகி வருகின்றனர். அதன் தொரடச்சியாக சென்னையின் பிரபல கஞ்சா கும்பல் கைதாகியுள்ளது. சென்னை ரெட்டில்ஸ் பகுதியைச் சேர்ந்த வினோத் வயது 34 இவர் மீது ரெட்டில்ஸ் எண்ணூர் உள்ளிட்ட  காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இதே போன்று ரெட்டில்ஸ் விளாங்காடு பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் வயது 31 இவர் மீதும் ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் உள்ளன.

இவர்களது நண்பரான வியாசர்பாடி சாமந்திப் பூ காலனியை சேர்ந்த இலக்கிய குமார் 33 இவர் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் 3 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வட சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து விற்று வந்தனர். கொடுங்கையூர் போலீசார் இவர்கள் மூன்று பேரையும் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி கொடுங்கையூர் பகுதியில் வைத்து கைது செய்து இவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா 75 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து இவர்களை சிறையில் அடைத்தார். இந்நிலையில் தொடர்ந்து இவர்கள் வட சென்னையின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை அடுத்து கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் இவர்கள் மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்திருந்தார். அதனை ஏற்று இவர்கள் 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget