மேலும் அறிய

போலி ரெம்டெசிவிர் ஆனாலும் குணமான நோயாளிகள்!

மோசடியில் ஈடுபட்டவர்கள் இதுவரையில் 1200 மருந்துகளை விற்பனை செய்துள்ளனர். அதில் இந்தூரில் 700 மருந்துகளும், ஜபல்பூரில் 500 மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தீவிர தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் ரெம்டெசிவிர் மருந்துக்கான‌  தட்டுப்பாடுகளும்  அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி பல நிறுவனங்கள் பதுக்கல் மற்றும் போலி மருந்துகள் தயாரிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத்தை சேர்ந்த கும்பல் ஒன்று போலி ரெம்டெசிவிர் மருந்துகளை தயாரித்து அதனை விநியோகம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் ஜபல்பூரில் விற்பனையில் ஈடுபட்ட கும்பலை அம்மாநில‌ காவல்துறை அதிகாரிகள் கைது செய்து , அவர்களிடம் இருந்த  ஆயிரக்கணக்கான போலி ரெம்டெசிவிர் மருந்துகளை கைப்பற்றியுள்ளனர்


 கைதானவர்கள் மீது கொலை வழக்குகளை பதிவு செய்ய வேன்டும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்திருந்தார். இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், போலி ரெம்டெசிவிர் மருந்தினை பயன்படுத்திய  நோயாளிகளில் 90 சதவீதம் பேர் ,தீவிர  நுரையீரல் தொற்றிலிருந்து மீண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.  இதன் மூலம் போலி ரெம்டெசிவிர் பயன்படுத்தியவர்களின் இறப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.மேலும் போலி ரெம்டெசிவிர் மருந்தில்  குளுக்கோஸ் மற்றும் உப்புக்கலவை இருப்பதாக தெரிவித்த காவல்துறை, தாங்கள்  நிபுணர்கள்  இல்லை, இதனை மருத்துவர்கள் கருத்தில் கொண்டு தெளிவுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

போலி ரெம்டெசிவிர் ஆனாலும் குணமான நோயாளிகள்!

கடந்த ஒன்றாம் தேதி நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்டவர்கள் இதுவரையில் 1200 மருந்துகளை விற்பனை செய்துள்ளனர். அதில் இந்தூரில் 700 மருந்துகளும், ஜபல்பூரில் 500 மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மருந்துகளை பயன்படுத்தியவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்களிடம்  தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டும் என மாவட்ட ஐஜி  ஹரி நாரயண்ச்சாரி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.


போலி ரெம்டெசிவிர் ஆனாலும் குணமான நோயாளிகள்!

மோசடியில் ஈடுபட்டவர்களின் கடைசி நபர் சிக்கும் வரை விசாரணையின் தீவிரம் அதிகரிக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், போலி மருந்துகளை செலுத்துக்கொண்டவர்களின் முழுமையான விவரங்களை பெறுவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்தினால்  கடுமையான நோய்த்தொற்றிலிருந்து விடுபடலாம் ,தவிற அதனால் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும் என்பதற்கு  சான்று இல்லை என  வல்லுநர்கள்  தெரிவிக்கின்றனர்.


போலி ரெம்டெசிவிர் ஆனாலும் குணமான நோயாளிகள்!

இந்நிலையில் நாட்டில் ஒரே நாளில்  3 லட்சத்து 26 ஆயிரத்து 98 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது .  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 40 லட்சத்து 46 ஆயிரத்து 809-இல் இருந்து 2 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரத்து 907-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 890 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  2 லட்சத்து 66 ஆயிரத்து 207-ஆக உயர்ந்துள்ளது

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அவசரமாக பணம் தேவை !! காதலனுக்காக தாயின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்த மகள் !! நடந்தது என்ன ?
அவசரமாக பணம் தேவை !! காதலனுக்காக தாயின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்த மகள் !! நடந்தது என்ன ?
19 வயது இளம் பெண்ணுக்கு , காதல் டார்ச்சர் கொடுத்த 65 வயது முதியவர் !!
19 வயது இளம் பெண்ணுக்கு , காதல் டார்ச்சர் கொடுத்த 65 வயது முதியவர் !!
" இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவு " சாலையில் கணவன் செய்த வெறிச் செயல்
" உன்னுடன் இருப்பது யார் " இளம் பெண்ணுக்கு வந்த போன் கால் !! பதறிய இளம் பெண் - நடந்தது என்ன ?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
Embed widget