மேலும் அறிய

போலி ரெம்டெசிவிர் ஆனாலும் குணமான நோயாளிகள்!

மோசடியில் ஈடுபட்டவர்கள் இதுவரையில் 1200 மருந்துகளை விற்பனை செய்துள்ளனர். அதில் இந்தூரில் 700 மருந்துகளும், ஜபல்பூரில் 500 மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தீவிர தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் ரெம்டெசிவிர் மருந்துக்கான‌  தட்டுப்பாடுகளும்  அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி பல நிறுவனங்கள் பதுக்கல் மற்றும் போலி மருந்துகள் தயாரிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத்தை சேர்ந்த கும்பல் ஒன்று போலி ரெம்டெசிவிர் மருந்துகளை தயாரித்து அதனை விநியோகம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் ஜபல்பூரில் விற்பனையில் ஈடுபட்ட கும்பலை அம்மாநில‌ காவல்துறை அதிகாரிகள் கைது செய்து , அவர்களிடம் இருந்த  ஆயிரக்கணக்கான போலி ரெம்டெசிவிர் மருந்துகளை கைப்பற்றியுள்ளனர்


 கைதானவர்கள் மீது கொலை வழக்குகளை பதிவு செய்ய வேன்டும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்திருந்தார். இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், போலி ரெம்டெசிவிர் மருந்தினை பயன்படுத்திய  நோயாளிகளில் 90 சதவீதம் பேர் ,தீவிர  நுரையீரல் தொற்றிலிருந்து மீண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.  இதன் மூலம் போலி ரெம்டெசிவிர் பயன்படுத்தியவர்களின் இறப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.மேலும் போலி ரெம்டெசிவிர் மருந்தில்  குளுக்கோஸ் மற்றும் உப்புக்கலவை இருப்பதாக தெரிவித்த காவல்துறை, தாங்கள்  நிபுணர்கள்  இல்லை, இதனை மருத்துவர்கள் கருத்தில் கொண்டு தெளிவுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

போலி ரெம்டெசிவிர் ஆனாலும் குணமான நோயாளிகள்!

கடந்த ஒன்றாம் தேதி நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்டவர்கள் இதுவரையில் 1200 மருந்துகளை விற்பனை செய்துள்ளனர். அதில் இந்தூரில் 700 மருந்துகளும், ஜபல்பூரில் 500 மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மருந்துகளை பயன்படுத்தியவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்களிடம்  தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டும் என மாவட்ட ஐஜி  ஹரி நாரயண்ச்சாரி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.


போலி ரெம்டெசிவிர் ஆனாலும் குணமான நோயாளிகள்!

மோசடியில் ஈடுபட்டவர்களின் கடைசி நபர் சிக்கும் வரை விசாரணையின் தீவிரம் அதிகரிக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், போலி மருந்துகளை செலுத்துக்கொண்டவர்களின் முழுமையான விவரங்களை பெறுவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்தினால்  கடுமையான நோய்த்தொற்றிலிருந்து விடுபடலாம் ,தவிற அதனால் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும் என்பதற்கு  சான்று இல்லை என  வல்லுநர்கள்  தெரிவிக்கின்றனர்.


போலி ரெம்டெசிவிர் ஆனாலும் குணமான நோயாளிகள்!

இந்நிலையில் நாட்டில் ஒரே நாளில்  3 லட்சத்து 26 ஆயிரத்து 98 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது .  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 40 லட்சத்து 46 ஆயிரத்து 809-இல் இருந்து 2 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரத்து 907-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 890 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  2 லட்சத்து 66 ஆயிரத்து 207-ஆக உயர்ந்துள்ளது

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
ஃபார்ச்சுனருக்கு வரப்போது சவால்! அறிமுகமாகுது புதிய MG Majestor - எப்போது?
ஃபார்ச்சுனருக்கு வரப்போது சவால்! அறிமுகமாகுது புதிய MG Majestor - எப்போது?
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
Embed widget