மேலும் அறிய

மன்னார்குடி போலி பாஸ்போர்ட் விவகாரம்: திரைப்பட இயக்குனர், 3 அரசு ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது

கடந்த 2012ம் ஆண்டு மன்னார்குடி கூப்பாட்சிகோட்டை பரவக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் போலி பாஸ்போர்ட் தயாரித்து அதன் மூலம் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ளனர்.

இலங்கையை சேர்ந்தவருக்கு இந்திய குடியுரிமை உள்ளதாக போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் எடுத்த விவகாரத்தில் திரைப்பட இயக்குனர் மற்றும் மூன்று அரசு ஊழியர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கூப்பாச்சி கோட்டை முகவரியில் வசிப்பதாக கூறி இலங்கையை சேர்ந்த கஜன் என்பவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு பாஸ்போர்ட் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் க்யூ பிரிவு காவல்துறையினர் கஜன் என்பவரின் பாஸ்போர்டை  சோதனை செய்தததில் கூப்பாச்சி கோட்டை முகவரி இருந்ததால் சந்தேகம் அடைந்த க்யூ பிரிவு காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். இந்த விசாரணையில் மன்னார்குடியில் ஆட்களை வெளிநாடுகளில் உள்ள வேலைகளுக்கு அனுப்பி வைக்கும்  டிராவல் ஏஜென்ட் நிறுவனம் நடத்தி வந்த இந்திரஜித், கூப்பாச்சி கோட்டையை சேர்ந்த பிரபாகரன், சென்னையை சேர்ந்த குண்டக்க மண்டக்க திரைப்பட இயக்குனர் அசோகன், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கணினி உதவியாளராக பணியாற்றிய ரவிச்சந்திரன், இளநிலை உதவியாளராக பணியாற்றிய அசோக்குமார், கூப்பாச்சிக் கோட்டை தபால்காரர் மகாராஜன்,சென்னையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் லோகநாதன், கூப்பாச்சிக் கோட்டை ஈசன், பத்மநாபன் ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதையடுத்து அவர்கள்  மீது க்யூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 


மன்னார்குடி போலி பாஸ்போர்ட் விவகாரம்: திரைப்பட இயக்குனர், 3 அரசு ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது

இதுதொடர்பான வழக்கு விசாரணை கடந்த பத்து ஆண்டுகளாக திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில்  கடந்த மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் எஸ்.பி அலுவலகத்தில் பணியாற்றிய ரவிச்சந்திரன், அசோக்குமார், மகாராஜன், லோகநாதன் ஆகிய நால்வருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், பிரபாகரன் மற்றும் திரைப்பட இயக்குனர் அசோகன் ஆகிய இருவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் இந்திரஜித், ஈசன், பத்மநாபன் ஆகிய மூவரும் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டனர். இந்திரஜித் திரைப்பட இயக்குனர் அசோகனின் அக்காள் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்காக ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களது மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து இன்று  மீதமுள்ள ஆறு பேரையும் போலீசார் கைது செய்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்த பின்னர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். 


மன்னார்குடி போலி பாஸ்போர்ட் விவகாரம்: திரைப்பட இயக்குனர், 3 அரசு ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது

இந்த வழக்கின் பின்னணி குறித்து காவல்துறையினரிடம் கேட்ட பொழுது, கடந்த 2012 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கூப்பாட்சிகோட்டை பரவக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் போலி பாஸ்போர்ட் தயாரித்து அதன் மூலம் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ளனர். குறிப்பாக ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் அங்கு உள்ள அகதிகளை சோதனை செய்த பொழுது பல்வேறு நபர்களிடம் பாஸ்போர்ட்டில் உள்ள முகவரி முன்னுக்குப் பின்னாக இருந்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் பல்வேறு தகவல்களை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கஜன் என்பவர்  குறித்து கியூ பிரிவு காவல்துறையினருக்கு மண்டபம் காவல்துறையினர் தகவல் கொடுத்ததன் அடிப்படையில் போலி பாஸ்போர்ட் தயாரித்தவர்கள் யார் யார் என அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த போலிப் பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் எங்கு எங்கு உள்ளார்கள் இதில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
ஃபார்ச்சுனருக்கு வரப்போது சவால்! அறிமுகமாகுது புதிய MG Majestor - எப்போது?
ஃபார்ச்சுனருக்கு வரப்போது சவால்! அறிமுகமாகுது புதிய MG Majestor - எப்போது?
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
Embed widget