மேலும் அறிய

குடிபோதையில் நடுவானில் தகராறு செய்த பயணி.. தரையிறங்கிய துபாய் விமானம்..

குடிபோதையில் பயணி ஒருவர் நடுவானில் தகராறு செய்த நிலையில் துபாய் விமானம் ஒன்று மும்பை சத்திரபதி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

குடிபோதையில் பயணி ஒருவர் நடுவானில் தகராறு செய்த நிலையில் துபாய் விமானம் ஒன்று மும்பை சத்திரபதி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மே 14 ஆம் தேதியன்று, துபாய் நாட்டின் தோஹா நகரில் இருந்து பெங்களூருவை நோக்கி ஒரு விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சர்ஃபுதீன் உல்வார் என்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பயணித்தார். அவர் நல்ல குடிபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. அந்த நபர் போதை தலைக்கேறிய நிலையில் விமான பணிப்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார். அந்த பெண் அவர் குடிப்பதை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

ஆனால் அவரோ குடிப்பதை நிறுத்த மறுத்ததோடு மட்டுமல்லாமல் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளார். இதனை அப்பெண் கண்டிக்கவே அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே சக பயணிகள் அப்பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட அவர்களுடனும் அந்த போதை ஆசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை யாராலும் சரி செய்ய முடியவில்லை. தன்னிலை உணர முடியாத போதையில் அந்த நபர் இருந்தார். 

உடனடியாக பைலட்டுக்கு தகவல் செல்ல, பைலட் கன்ட்ரோல் ரூமை தொடர்பு கொண்டார். அங்கிருந்தவர்களின் ஆலோசனைக்கு இணங்க அந்த பைலட் விமானத்தை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தை நோக்கி செலுத்தினார். அங்கிருந்த சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அந்த நபரை சிஐஎஸ்எஃப் வீரர்கள் அழைத்துச் சென்ற நிலையில் விமானம் பெங்களூரு நோக்கி பயணிக்கத் தொடங்கியது.
விமானத்தை கட்டாயமாக தரையிறக்கம் செய்யும்படி நடந்து கொண்ட அந்த நபரின் மீது இந்திய தண்டனைச் சட்டம், விமான சட்டம் என பல்வேறு சட்டங்களின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

துபாய் நாட்டின் தோஹா நகரில் இருந்து நேரடியாக பெங்களூரு செல்ல வேண்டிய விமானம் போதை ஆசாமி செய்த களேபரத்தால் மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பிற பயணிகளுக்கு நேர விரயத்தை ஏற்படுத்தியதால் பயணிகள் குறித்த நேரத்தில் தரையிறங்க இயலாமல் சிரமத்துக்கு ஆளாகினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திரளும் பொதுமக்கள்..!
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திரளும் பொதுமக்கள்..!
Chennai Police Order: இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
புதுச்சேரியில் ரூ.1 கோடி மோசடி! போலி முதலீடு வலையில் சிக்கிய மக்கள்: எச்சரிக்கை அவசியம்!
புதுச்சேரியில் ரூ.1 கோடி மோசடி! போலி முதலீடு வலையில் சிக்கிய மக்கள்: எச்சரிக்கை அவசியம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திரளும் பொதுமக்கள்..!
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திரளும் பொதுமக்கள்..!
Chennai Police Order: இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
புதுச்சேரியில் ரூ.1 கோடி மோசடி! போலி முதலீடு வலையில் சிக்கிய மக்கள்: எச்சரிக்கை அவசியம்!
புதுச்சேரியில் ரூ.1 கோடி மோசடி! போலி முதலீடு வலையில் சிக்கிய மக்கள்: எச்சரிக்கை அவசியம்!
Tamil Nadu Next DGP : ’தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி இவரா?’  தயாரான பட்டியல்..!
’தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?’ பட்டியல் தயார்..!
Chennai Power Cut: சென்னையில் நாளை (22.07.25) மின்தடை ஏற்படக்கூடிய இடங்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க
சென்னையில் நாளை (22.07.25) மின்தடை ஏற்படக்கூடிய இடங்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க
Sattamum Needhiyum Review : சரவணன் நடித்து ஓடிடியில் வெளியாகியிருக்கும் சட்டமும் நீதியும்...விமர்சனம் இதோ
Sattamum Needhiyum Review : சரவணன் நடித்து ஓடிடியில் வெளியாகியிருக்கும் சட்டமும் நீதியும்...விமர்சனம் இதோ
VS Achuthanandan Passes Away: கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவு; மக்கள் மனதை வென்ற அரசியல் தலைவர்
கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவு; மக்கள் மனதை வென்ற அரசியல் தலைவர்
Embed widget