மேலும் அறிய

விசாரணை கைதிகளுக்கு ஜாமின் தருவதாக பண மோசடி: ஆயுள் தண்டனை கைதியின் விடுதலை மனு தள்ளுபடி!

இந்த வழக்கில் அரசின் முடிவு சரியானது. எனவே, மனுதாரர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோருவதற்கு எந்த உரிமையும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டியை சேர்ந்த 11 வயது சிறுமியை 1998 ல் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்தது தொடர்பாக அருப்புக்கோட்டையை சேர்ந்த வீரபாரதிக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்நீதிமன்ற மதுரை கிளை குறைத்த பிறகும் தன்னை முன்னரே விடுதலை செய்ய கோரி  மனுத்தாக்கல் செய்தார். 
 
பாளையங்கோட்டை மற்றும் மதுரை மத்திய சிறைகளில் இருந்தபோது, விசாரணை கைதிகளிடம் ஜாமீன் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாகவும் அவரது நடவடிக்கைகள் சரியில்லை என்றும், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டிய அவசியமில்லை என காவல் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ததன் அடிப்படையில்  தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 

விசாரணை கைதிகளுக்கு ஜாமின் தருவதாக பண மோசடி: ஆயுள் தண்டனை கைதியின் விடுதலை மனு தள்ளுபடி!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டியைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த 1998 மார்ச் 4 ஆம் தேதி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முருகன், வீரபாரதி, உபயதுல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து விருதுநகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 1999 இல் உத்தரவிட்டது.
தண்டனையை எதிர்த்து மூவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம்  மூவரது தூக்கை, ஆயுள் தண்டனையாக மாற்றியது. தண்டனை பெற்ற உபயதுல்லா இறந்து விட்ட நிலையில், மற்ற  இருவரும் மதுரை சிறையில் தண்டனை அனுபவித்தனர். அப்போது வீரபாரதி  பாளையங்கோட்டை சிறைக்கும், பின்னர் சென்னை புழல் சிறைக்கும் வீரபாரதி மாற்றப்பட்டார்.
இதனிடையே, வீரபாரதி தன்னை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். 
 
வழக்கில் தானே ஆஜராகி வாதிடுவதாகக் கூறியதையடுத்து, 2019 ஜனவரியில் நீதிமன்றம் வீரபாரதிக்கு பரோல் வழங்கியது. சுமார் இரண்டரை ஆண்டுக்கு மேலாக பரோலில் இருந்தவாறே தனது வழக்கை வீரபாரதி நடத்தி வந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை முடிந்து விட்டதால், மனுதாரரை சென்னை புழல் சிறை கண்காணிப்பாளர் முன் சரணடைய வேண்டும் எனத் உத்தரவிட்டது. இதையடுத்து மனுதாரர் புழல் சிறையில் சரணடைந்தார்.
 
இந்த மனுவை மீண்டும் விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு  பிறப்பித்த உத்தரவு: 
 
மனுதாரர் தன்னை முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர் பாளையங்கோட்டை மற்றும் மதுரை மத்திய சிறைகளில் இருந்தபோது, விசாரணை கைதிகளிடம் ஜாமீன் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாகவும், அவரது நடவடிக்கைகள் சரியில்லை என்றும், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் காவல் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதைக் கூர்ந்து கவனித்த அரசு, அறிக்கையின் அடிப்படையில், மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இந்த வழக்கில் அரசின் முடிவு சரியானது. எனவே, மனுதாரர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோருவதற்கு எந்த உரிமையும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6491
Active
6861
Recovered
65
Deaths
Last Updated: Mon 9 June, 2025 at 06:46 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi | ”வேலைக்கு கூப்டா வரமாட்டியா ***” வார்டு உறுப்பினரின் கணவர் ஆபாச பேச்சுVelmurugan Controversy |Annamalai | நயினார் vs அண்ணாமலை ஒரே ஒரு வீடியோ ஆட்டத்தை முடித்த அண்ணாமலை!MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்தி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
Actor Rajesh: உண்மை இதுதான்.. நடிகர் ராஜேஷ் பற்றி பரவிய வதந்திகளுக்கு கண்ணீரோடு கோரிக்கை வைத்த மகள் திவ்யா!
Actor Rajesh: உண்மை இதுதான்.. நடிகர் ராஜேஷ் பற்றி பரவிய வதந்திகளுக்கு கண்ணீரோடு கோரிக்கை வைத்த மகள் திவ்யா!
Krishna Marriage: ஒரே வருடத்தில் விவாகரத்து... 47 வயதில் நடிகர் கிருஷ்ணாவுக்கு நடந்த 2-ஆவது கல்யாணம்! வைரலாகும் திருமண புகைப்படம்!
Krishna Marriage: ஒரே வருடத்தில் விவாகரத்து... 47 வயதில் நடிகர் கிருஷ்ணாவுக்கு நடந்த 2-ஆவது கல்யாணம்! வைரலாகும் திருமண புகைப்படம்!
SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
Embed widget