மேலும் அறிய

விசாரணை கைதிகளுக்கு ஜாமின் தருவதாக பண மோசடி: ஆயுள் தண்டனை கைதியின் விடுதலை மனு தள்ளுபடி!

இந்த வழக்கில் அரசின் முடிவு சரியானது. எனவே, மனுதாரர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோருவதற்கு எந்த உரிமையும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டியை சேர்ந்த 11 வயது சிறுமியை 1998 ல் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்தது தொடர்பாக அருப்புக்கோட்டையை சேர்ந்த வீரபாரதிக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்நீதிமன்ற மதுரை கிளை குறைத்த பிறகும் தன்னை முன்னரே விடுதலை செய்ய கோரி  மனுத்தாக்கல் செய்தார். 
 
பாளையங்கோட்டை மற்றும் மதுரை மத்திய சிறைகளில் இருந்தபோது, விசாரணை கைதிகளிடம் ஜாமீன் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாகவும் அவரது நடவடிக்கைகள் சரியில்லை என்றும், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டிய அவசியமில்லை என காவல் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ததன் அடிப்படையில்  தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 

விசாரணை கைதிகளுக்கு ஜாமின் தருவதாக பண மோசடி: ஆயுள் தண்டனை கைதியின் விடுதலை மனு தள்ளுபடி!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டியைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த 1998 மார்ச் 4 ஆம் தேதி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முருகன், வீரபாரதி, உபயதுல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து விருதுநகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 1999 இல் உத்தரவிட்டது.
தண்டனையை எதிர்த்து மூவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம்  மூவரது தூக்கை, ஆயுள் தண்டனையாக மாற்றியது. தண்டனை பெற்ற உபயதுல்லா இறந்து விட்ட நிலையில், மற்ற  இருவரும் மதுரை சிறையில் தண்டனை அனுபவித்தனர். அப்போது வீரபாரதி  பாளையங்கோட்டை சிறைக்கும், பின்னர் சென்னை புழல் சிறைக்கும் வீரபாரதி மாற்றப்பட்டார்.
இதனிடையே, வீரபாரதி தன்னை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். 
 
வழக்கில் தானே ஆஜராகி வாதிடுவதாகக் கூறியதையடுத்து, 2019 ஜனவரியில் நீதிமன்றம் வீரபாரதிக்கு பரோல் வழங்கியது. சுமார் இரண்டரை ஆண்டுக்கு மேலாக பரோலில் இருந்தவாறே தனது வழக்கை வீரபாரதி நடத்தி வந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை முடிந்து விட்டதால், மனுதாரரை சென்னை புழல் சிறை கண்காணிப்பாளர் முன் சரணடைய வேண்டும் எனத் உத்தரவிட்டது. இதையடுத்து மனுதாரர் புழல் சிறையில் சரணடைந்தார்.
 
இந்த மனுவை மீண்டும் விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு  பிறப்பித்த உத்தரவு: 
 
மனுதாரர் தன்னை முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர் பாளையங்கோட்டை மற்றும் மதுரை மத்திய சிறைகளில் இருந்தபோது, விசாரணை கைதிகளிடம் ஜாமீன் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாகவும், அவரது நடவடிக்கைகள் சரியில்லை என்றும், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் காவல் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதைக் கூர்ந்து கவனித்த அரசு, அறிக்கையின் அடிப்படையில், மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இந்த வழக்கில் அரசின் முடிவு சரியானது. எனவே, மனுதாரர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோருவதற்கு எந்த உரிமையும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Embed widget