மேலும் அறிய

விசாரணை கைதிகளுக்கு ஜாமின் தருவதாக பண மோசடி: ஆயுள் தண்டனை கைதியின் விடுதலை மனு தள்ளுபடி!

இந்த வழக்கில் அரசின் முடிவு சரியானது. எனவே, மனுதாரர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோருவதற்கு எந்த உரிமையும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டியை சேர்ந்த 11 வயது சிறுமியை 1998 ல் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்தது தொடர்பாக அருப்புக்கோட்டையை சேர்ந்த வீரபாரதிக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்நீதிமன்ற மதுரை கிளை குறைத்த பிறகும் தன்னை முன்னரே விடுதலை செய்ய கோரி  மனுத்தாக்கல் செய்தார். 
 
பாளையங்கோட்டை மற்றும் மதுரை மத்திய சிறைகளில் இருந்தபோது, விசாரணை கைதிகளிடம் ஜாமீன் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாகவும் அவரது நடவடிக்கைகள் சரியில்லை என்றும், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டிய அவசியமில்லை என காவல் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ததன் அடிப்படையில்  தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 

விசாரணை கைதிகளுக்கு ஜாமின் தருவதாக பண மோசடி: ஆயுள் தண்டனை கைதியின் விடுதலை மனு தள்ளுபடி!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டியைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த 1998 மார்ச் 4 ஆம் தேதி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முருகன், வீரபாரதி, உபயதுல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து விருதுநகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 1999 இல் உத்தரவிட்டது.
தண்டனையை எதிர்த்து மூவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம்  மூவரது தூக்கை, ஆயுள் தண்டனையாக மாற்றியது. தண்டனை பெற்ற உபயதுல்லா இறந்து விட்ட நிலையில், மற்ற  இருவரும் மதுரை சிறையில் தண்டனை அனுபவித்தனர். அப்போது வீரபாரதி  பாளையங்கோட்டை சிறைக்கும், பின்னர் சென்னை புழல் சிறைக்கும் வீரபாரதி மாற்றப்பட்டார்.
இதனிடையே, வீரபாரதி தன்னை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். 
 
வழக்கில் தானே ஆஜராகி வாதிடுவதாகக் கூறியதையடுத்து, 2019 ஜனவரியில் நீதிமன்றம் வீரபாரதிக்கு பரோல் வழங்கியது. சுமார் இரண்டரை ஆண்டுக்கு மேலாக பரோலில் இருந்தவாறே தனது வழக்கை வீரபாரதி நடத்தி வந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை முடிந்து விட்டதால், மனுதாரரை சென்னை புழல் சிறை கண்காணிப்பாளர் முன் சரணடைய வேண்டும் எனத் உத்தரவிட்டது. இதையடுத்து மனுதாரர் புழல் சிறையில் சரணடைந்தார்.
 
இந்த மனுவை மீண்டும் விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு  பிறப்பித்த உத்தரவு: 
 
மனுதாரர் தன்னை முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர் பாளையங்கோட்டை மற்றும் மதுரை மத்திய சிறைகளில் இருந்தபோது, விசாரணை கைதிகளிடம் ஜாமீன் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாகவும், அவரது நடவடிக்கைகள் சரியில்லை என்றும், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் காவல் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதைக் கூர்ந்து கவனித்த அரசு, அறிக்கையின் அடிப்படையில், மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இந்த வழக்கில் அரசின் முடிவு சரியானது. எனவே, மனுதாரர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோருவதற்கு எந்த உரிமையும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மும்பையிலிருந்து கடத்தல்: தாம்பரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கும்பல் அதிரடி கைது!
மும்பையிலிருந்து கடத்தல்: தாம்பரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கும்பல் அதிரடி கைது!
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?
ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?
நூதன முறையில் முதிய தம்பதியை ஏமாற்றி 7 பவுன் நகை திருட்டு: தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்
நூதன முறையில் முதிய தம்பதியை ஏமாற்றி 7 பவுன் நகை திருட்டு: தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
Upcoming Kia SUV: கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Embed widget